வெள்ளி, 24 ஜூன், 2022

நாட்டுப்புறப் பாடல்கள் - தாலாட்டுப்பாடல், தொழிற்பாடல்கள்

தாலாட்டுப் பாடல்

ஆராரோ ஆரிராரோ - என் கண்ணே 
ஆரிரரோ ஆராரோ
கண்ணே நவமணியே
கானலிலே பிறந்தாயோ 
என்னநான் சொல்வேனோ - கண்ணே நீ
இந்திரனோ சொல்லிவிடு

அறிவுமதி - ஹைக்கூ கவிதைகள்

 

• பள்ளிக்குப் போகாத சிறுமி 
செல்லமாய்க் குட்டும் 
ஆலங்கட்டி மழை

செல்வகுமாரி - இலக்கியத்தில் பெண்கள்

 

பெண்மைக்கு மென்மை பூசி
பேரிலக்கியம் படைத்திட்டார்.
பெண்மையை இரணமாக்கி
புராணங்கள் படைத்திட்டார்
பெண்மையைப் பேயென்றும்
இதிகாசங்கள் படைத்திட்டார்.

புதன், 22 ஜூன், 2022

தேவயானி - இயற்கைக்குத் திரும்புவோம்

விஞ்ஞானிகளே

விடை கூறுங்கள்.


உலகை வென்றுவிட்டதாய்

உவகை கொள்ளாதீர்!


சாபக்கற்களில்தான்

சந்தனம் அரைத்துப்

பூசிக் கொள்கிறீர்...

பழநிபாரதி - காடு

 கவிதை எழுத

காகிதம் எடுத்தேன்


உலகெங்கும்
காகிதத்திற்காக அழிக்கப்பட்ட
காடுகளின் மணம் 
துளைத்தது என் மூச்சை

செவ்வாய், 21 ஜூன், 2022

பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்

 

மொட்டை மாடியெங்கும் 
குரோட்டன்ஸ் படர்ந்து கிடக்கும்
இதோ
இந்த வீடிருக்கும் இடத்தில்தான் 
என் வயல் இருந்தது. 

வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

 

மகனே
வழக்கமான தாலாட்டை 
உனக்கு நான் 
வாசிக்க முடியாது

அவை 
மொழியின் ஆடம்பரங்கள்
கைது செய்து வைத்த 
கனாக்கள் 

தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

 

வருங்கால மனிதன் வருக!

புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!


விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!

சனி, 18 ஜூன், 2022

சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

 அழித்து எழுதமுடியாத

அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா

கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

 

‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே –அந்தக்
கரிசல் கழனிமேலே –அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே –அந்த

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 கவிஞர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பாரதியார் பல்கலைக் கழகப் பாடத்திட்டம் - முதலாம் ஆண்டு (2022-23)

 (2021-22ஆம் கல்வியாண்டு முதல் சேர்வோருக்குரியது)

அலகு - 1 

  1. பாரதியார் - எங்கள் தாய்

  2. பாரதிதாசன் - தமிழின் இனிமை

  3. கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

  4. சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

  5. தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

  6. வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

பாரதியார் - எங்கள் தாய்


தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!


(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணர்ந்தோரும் பல கல்வி கற்றவர்களும் இவள் எக்காலத்தில் தோன்றினாள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவளாக விளங்குபவள் எங்கள் தாய்)