பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயிலரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

இணையத்தமிழ் பயிற்சியும் மறக்க முடியாத சந்திப்புகளும்

நேற்று (04.01.2025) மதுரை தியாகராசர் கல்லூரியில் ஒரு மறக்க முடியாத நாள். மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் "இணையலாம் இணையத்தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திதுரை அவர்களின் அன்பான வரவேற்பும், நெகிழ்வான அறிமுகமும் என்னை நெகிழ வைத்தது. அதுமட்டுமின்றி அவர்களுடன் நீண்ட நேர உரையாடல் நிகழ்ந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அவரின் பார்வை, ஆய்வு, கற்பித்தல் அனுபவங்கள், மாணவர்களிடம் கொண்டுள்ள அக்கறை - இவையனைத்தும் என்னை வியக்க வைத்தன. அவர் அன்பளிப்பாக வழங்கிய "சாமி சிறுகதைகள்" நூல் என் அறிவுக் களஞ்சியத்திற்கு ஒரு பெரும் சேர்க்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை.