நேயக்கோ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேயக்கோ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

உழுவை வண்டியின் வரவு

ஈரெரு தொவ்வொரு

வீட்டிலும் நிற்க

ஈரச் சாணம் தெளித்திருக்கும்

வாசலின் முன்புறம்

கிருமிகள் நெருங்க

அஞ்சுமே உழுவைவரவு

அனைத்தும் மறைந்தோ டியதே கண்டாய்! 

          (கலித்தாழிசை)

ஞாயிறு, 30 மார்ச், 2025

தந்தைக் கொடை

அண்டை நாடும் சென்ற அப்பன்

அயலார் ஏசா வண்ணம் நின்றனன்

உந்தன் பிள்ளை அன்பும் காணாது

உந்தன் இல்லாள் அன்பும் காணாது

உந்தன் பிள்ளை மணமும் பாராது

பெற்ற பட்டம் பாராது

கொள்கை நின்று வென்றாய் வெந்தே 

(நேரிசை ஆசிரியப்பா)

(நன்றி: எழுத்து.காம், 17 செபுதம்பர் 2014)

ஞாயிறு, 23 மார்ச், 2025

பெற்றோரும் கல்வியும்

உந்தன் கால்கள் அம்மையாக

உப்பங் கால்வாயா லுண்டாக

காய்ந்தமீனும் பெட்டிக் குள்ளே

கால்நடையாய் பல்லூர்சென்று விற்றாயே

தலையிலொன்றும் இடுப்பில் ஒன்றும்

தண்ணீர்ப் புட்டிதூக்கி வந்தாயே

கூரருவா கொண்டு குத்தும்

கூர்முள் நீக்கிவெட்டி மூட்டினாயே

பாத்திப்பாவி மிளகாய்ப் பாவிட

பதர்நீக்க குனிந்தாயே வில்லாய் 

கன்றுநட்டு பழம்நீக்கி விற்றாயே 

கடைகொணர்ந்து பெற்றாயே காசு

கற்க கூடுதல் இல்மீதியாம் 

கொஞ்சும் மழலைப் பேச்சும்

அன்பும் கண்டி டாமல்

சென்றிட் டாரே பொருளீட்ட அயல்நாடே! (கலித்தாழிசை)

(நன்றி: எழுத்து.காம், 28 ஆகட்டு 2014)

ஞாயிறு, 16 மார்ச், 2025

தாய்க் கொடை

காய்ந்த மீனும்

முற்று நெல்லும்

காய்ந்த வத்தலும் விற்று

விறகைக் குன்று போலடுக்கி

தீமூட்ட பெற்ற தீங்கரியும்

கொண்டு விற்று

கற்க முக்கா லீந்து

காலொன் றும்இல் வென்றா யம்மே!

(கலித்தாழிசை)

(நன்றி: எழுத்து.காம், 2 செபுதம்பர் 2014)

ஞாயிறு, 9 மார்ச், 2025

அறிவியலின் கொடையும் இழப்பும்

கண்மாய்க் கரையில் பனைகள் நிற்கவே

கண்மதகில் ஈரெறா கம்புக் கிடைதொங்க 

இருவர் முறைமாறி மடைவாய் உள்ளே 

இரைத்திட விருவிரு வெனவாம் நீர்செலுமே

சலசல வெனவாம் இரைச்சல் கேட்க

ஞாயிறு, 2 மார்ச், 2025

படையல்

 எம்மை சான்றோ னாக்க நினைந்து

தம்மை மெழுகாக்கிக் கொண்ட ஈருள்ளம்

இல்லா ளின்பம் பெறாதும் சென்ற

இன்ப மில்லா அண்டை நாடும்

பொருளீட்டி பொறுப்பாய் வளர்த்த வராயும்

பொருத்திட்ட தந்தை தங்கச் சாமிக்கும்

கேள்வன் குடும்பப் புரித லின்றும்