செவ்வாய், 12 ஜூலை, 2022

களப்பணி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வென்னல்கிரி வெங்கட்ரமணப் பெருமாள் திருக்கோயில், கோவை

 முன்னுரை

கல்வெட்டியல் என்பது தொல்லியலில் ஒரு பிரிவு என்பதாக புரிந்து கொள்ளலாம். கல்லில் வெட்டி வைக்கப்பட்டுள்ள களங்களை அறிவது கல்வெட்டியல் எனும் துறையின் படிப்பாகும். இத்துறையை முழுவதும் அறிந்திட அத்துறையில் தொடர்ந்து பயணம் தேவை. அதுமட்டுமின்றித் தொடர் பயிற்சியும் மிகத் தேவை. அப்பொழுதுதான் கல்லெழுத்துக்களை, அவை விளம்பும் தகவல்களை முழுமையும் அறிந்துகொள்ள இயலும். இத்துறை சார்ந்த புரிதல்களை இவ்வறிக்கை முன்வைக்க முயல்கின்றது.

வெள்ளி, 8 ஜூலை, 2022

மென் காற்று

மென்மைக் காற்று மென்தழைத் தடவ
மெல்லுடல் வணங்க மென்காற்று மெல்லிசை
நயம்பாட நந்தவனம் ஆட
நல்லாள் நாணமும் அறைக்குள் ஆர்க்குமே!

கனா

சன்னலைத் திறக்க
சட்டென்று உள்ளே வந்தாய்
புலுக்கமாய் இருந்த உடலுக்கு
பூப்போல் தடவிக் கொடுத்தாய்
காற்றே கட்டாந்தரையையும்
கவிப் பாட வைத்தாயே!
கவிச்சோலைக்குள் கனாக்காண வைத்தாயே!

கல்வெட்டில் கோவை மாவட்ட ஊர்ப் பெயர்கள் அன்றும் - இன்றும்