செவ்வாய், 15 மார்ச், 2022

155. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

155. பாலை

(இது, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது)

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் 
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் 
பொருளின் ஆகும் புனையிழை என்றுநம் 
இருளேர் ஐம்பால் நீவி யோரே

சனி, 12 மார்ச், 2022

34.முல்லை - ந.சி. கந்தையா

(இது, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது) சிறுகளும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்

கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன இருதிரி மருப்பின் அண்ணல் இரலை

வெள்ளி, 11 மார்ச், 2022

15. கையும் பொய்யும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

வரக் கூடாத இடம். வரத் தகாத நேரம். வராத விருந்தினன். வந்து விட்டான். வீட்டிலே விருந்து இருக்கிறது; ஆனால் பலருடன் அதைப் பகிர்ந்து உண்ணல் முடியாது. எனினும் ஒரு பகுதியை ருசி பார்க்கின்றான் விருந்தினன். இது போன்றதொரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைத் தலைவி

வியாழன், 10 மார்ச், 2022

53.நகையும் பகையும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

"விரோதிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறாயே!" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் தோழி.

“என்ன?” என்றான் அவன்.

“ஒன்றுமில்லை. உலகத்திலே சிலர் உளர். நண்பனைப் போல நடிப்பர். எதுவரை? பையிலே பைசா இருக்கிற வரையில். செல்வாக்கு இருக்கிற வரையில். காசு கரைந்துபோனால் செல்வாக்குப் போய்விட்டால் - தூற்றுவதற்குத் தொடங்கி விடுவர். யார்? இதே பேர்வழிகள்தான். வேறு எவருமில்லை."