முன்னுரை
தமிழ் இலக்கியத்தின் தொன்மையான வடிவங்களில் ஒன்று மரபுக் கவிதை. தொல்காப்பியத்தில் காணப்படும் யாப்பிலக்கணம் இதன் அடிப்படை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா போன்ற வடிவங்களில், சங்க காலம் முதல் இன்று வரை கவிதைகள் இயற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை, பல கவிஞர்கள் மரபுக் கவிதை வடிவத்தைப் பயன்படுத்தி, புதிய சமூக, அரசியல், மொழிச் சிந்தனைகளை வெளிப்படுத்தினர். இக்கட்டுரையில், இக்கால மரபுக்கவிதை முன்னோடிகளைப் பற்றியும், அதன் வளர்ச்சிப் பற்றியும் விரிவாகக் காணலாம்.