தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஏப்ரல், 2026

பாரதியார் பல்கலைக்கழகம் - பகுதி 1 தமிழ் பாடத்திட்டம் (2025-2026)

பாரதியார் பல்கலைக்கழகம் - பகுதி 1 தமிழ் பாடத்திட்டம் (2025-2026)
பாரதியார் பல்கலைக்கழகம் | TANSCHE

📖 பகுதி - 1 : பொதுத் தமிழ்
(2025-2026 ஆம் கல்வியாண்டில் சேர்வோர்க்கு)

மரபும் புதுமையும் — இலக்கியப் பயணம்
முதல் பருவம் (Semester I) 6 மணி/வாரம் | 4 கடன்
பாடக் குறியீடு: 11T துணைப் பாடம் (Supportive) CIA : 25 | ESE : 75
பாட அமைப்பு
அலகு 1📜 மரபுக்கவிதை
  • தமிழ்த் தெய்வ வணக்கம் – பெ.சுந்தரனார்
  • நாட்டு வணக்கம் – பாரதியார்
  • சிறுத்தையே வெளியில் வா – பாரதிதாசன்
  • புத்தரும் சிறுவனும் – கவிமணி
  • மொழியுணர்ச்சி – முடியரசன்
  • விடுதலை – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • நெய்வேலி நாம் பெற்ற பேறு – தமிழ்நெளி
  • இயற்கை – சுரதா
அலகு 2✨ புதுக்கவிதை
  • ஒப்பிலாத சமுதாயம் – அப்துல் ரகுமான்
  • நகைத்துளிப்பா / இயைத்துளிப்பா – ஈரோடு தமிழன்பன்
  • நழுவும் பருவம் – சிற்பி பாலசுப்பிரமணியம்
  • கதறுகிறேன் – தேனரசன்
  • தந்தை மகற்காற்றும் உதவி – புவியரசு
  • மழைக்காலப் பூக்கள் – வைரமுத்து
  • அம்மா – இளம்பிறை
  • கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் – தாமரை
அலகு 3📖 சிறுகதைகள்
  • ஆற்றங்கரைப் பிள்ளையார் – புதுமைப்பித்தன்
  • முள்முடி – தி.ஜானகிராமன்
  • காகித உறவு – சு.சமுத்திரம்
  • கரு – உமாமகேஸ்வரி
  • வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை – அம்மை
  • மாப்பளே இரயிலு பாக்கப் போலாமா...? – பட்சி
  • ஒரு ஸ்கூல் கோயிலாகிறது – மாத்தளை சோமு
  • நூலகத்தில் ஒரு தளபதி – இடாலோ கால்வினா (மொழிபெயர்ப்பு)
அலகு 4 & 5📚 இலக்கிய வரலாறு & இலக்கணம்/மொழித்திறன்
  • இருபதாம் நூற்றாண்டு மரபுக்கவிதைகள், புதுக்கவிதை வரலாறு, சிறுகதை வரலாறு
  • பொருள் பொதிந்த சொற்பொடர், வேற்றுமை உருபன்கள், திணை பால் எண் இடம்
  • ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (பொது & அலுவலக நிலை)
பல்கலைக்கழக வினாத்தாள் (தாள்-1)
பிரிவு அ: 10x1=10 (சரியான விடை)
பிரிவு ஆ: 5x5=25 (இரு பக்க விடை, செய்யுள்/சிறுகதை)
பிரிவு இ: 5x8=40 (கட்டுரை வடிவில், மொழிபெயர்ப்பு உள்பட)

CIA: உள் தேர்வு I,II (10) + மாதிரித் தேர்வு (10) + ஒப்படைப்பு (5) = 25
இரண்டாம் பருவம் (Semester II) 6 மணி/வாரம் | 4 கடன்
பாடக் குறியீடு: 21T அறம் & பக்தி இலக்கியம்
அலகு வாரியாக
அலகு I🙏 அற & பக்தி இலக்கியம்
  • திருக்குறள் – அறன் வலியுறுத்தல்
  • நாலடியார் – மெய்ம்மை
  • தேவாரம் – திருவுக்கரசர் (நின்ற திருத்தாண்டகம்)
  • பராபரக்கண்ணி – குணங்குடி மஸ்தான் சாகிபு
  • பின்னைச் சிறு விண்ணப்பம் – வள்ளலார்
அலகு II🎭 சிற்றிலக்கியம் & சித்தர் பாடல்கள்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி (குறத்தி மலைவளம்)
  • முக்கூடற்பள்ளு – நகர் வளம்
  • திருமந்திரம் – அன்புடைமை
  • பட்டினத்தார் – திருவேகம்பமாலை
  • கவி வீரராகவர் சிலேடைப் பாடல்கள்
அலகு III✍️ உரைநடைக் கட்டுரைகள்
  • தமிழ்நாடு – திரு.வி.க
  • வீரக்கல் – ரா.பி.சேதுப்பிள்ளை
  • எளிமை ஓர் அறம் – மு.வ
  • தமிழில் அறிவியல் – மணவை முஸ்தபா
  • தமிழ்வழிக் கல்வி – தமிழண்ணல் (மொழியாக்கம்)
  • தமிழ் கற்பித்தல் – டாக்டர் கி.கரணாகரன் & பிறர்
அலகு IV & V📜 இலக்கிய வரலாறு & மொழித்திறன்
  • பதினெண்கீழ்க்கணக்கு, பக்தி இலக்கிய வளர்ச்சி, சிற்றிலக்கிய வகைகள், உரைநடை வரலாறு
  • தொடர்வகைகள், மரபுத்தொடர்கள், பிறமொழிச் சொல் நீக்கம், விண்ணப்பம் எழுதுதல்
தேர்வு முறை (தாள்-2)
10 (அ) + 25 (ஆ) + 40 (இ). CIA அமைப்பு முதல் பருவம் போன்றது.
மூன்றாம் பருவம் (Semester III) 6 மணி/வாரம் | 4 கடன்
31T | காப்பியம் + புதினம்
அலகு I🏛️ பெருங்காப்பியங்கள்
  • சிலப்பதிகாரம் – மங்கல வாழ்த்துப் பாடல்
  • மணிமேகலை – சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
  • சீவகசிந்தாமணி – நாமகள் இலம்பகம் (30-70)
அலகு II🕉️ சமய இலக்கியங்கள்
  • பெரியபுராணம் – திருக்கழுக்குன்ற நாயனார் புராணம்
  • கம்பராமாயணம் – கங்கைப் படலம் (1-27)
  • தேம்பாவணி – நாட்டுப்படலம் (பாடல் 14-45)
அலகு III📘 புதினம்
  • ஆத்மாவின் ராகங்கள் – நா. பார்த்தசாரதி (சமூகப் புதினம்)
அலகு IV & V📖 காப்பிய வரலாறு + இலக்கணம்
  • ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், புதினத் தோற்றமும் வளர்ச்சியும்
  • பாவகைகள் (வெண்பா, ஆசிரியப்பா) , அணிகள் (உவமை, உருவகம்), கட்டுரை எழுதுதல்
தாள்-3 அமைப்பு
பகுதி அ, ஆ, இ - செய்யுள், புதினம், இலக்கிய வரலாறு, கட்டுரை. CIA மதிப்பெண் 25.
நான்காம் பருவம் (Semester IV) 6 மணி/வாரம் | 4 கடன்
41T | சங்க இலக்கியம் & நாடகம்
அலகு I & II🏺 எட்டுத்தொகை & பத்துப்பாட்டு
  • நற்றிணை (9,14,18) | குறுந்தொகை (16,17,19,20,25,29,38,341)
  • கலித்தொகை (38,51) | அகநானூறு (14,33,55) | புறநானூறு (37,86,112)
  • பத்துப்பாட்டு – திருமுருகாற்றுப்படை (முழுமையும்)
அலகு III & IV🎭 நாடகம் & இலக்கிய வரலாறு
  • நாடகம் – “ஆதி அத்தி ஆசிரியர்” (ம.ப.பெரியசாமித்தூரன்)
  • எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
அலகு V🎨 இலக்கணம் & படைப்பாக்கம்
  • அகப்பொருள் (திணைக்கு மட்டும்) , புறப்பொருள் (திணைக்கு மட்டும்)
  • படைப்பாக்கப் பயிற்சி – கவிதை, சிறுகதை
தாள்-4 கட்டமைப்பு
10+25+40, படைப்பாக்க வினா உட்பட. அகமதிப்பீடு 25 மதிப்பெண்கள்.

மேலதிக ஆதாரங்கள்: tamilvu.org | projectmadurai.org | tamilebooksdownloads

Program Educational Objectives (PEOs)

இலக்கியப் பார்வைஇலக்கிய வகைகள்மனநல மேம்பாடுமொழியாளுமைசமூகக் கண்ணோட்டம்படைப்பாளுமைவாழ்வியல் கோட்பாடுபோட்டித் தேர்வுத் திறன்

Program Specific Outcomes

இலக்கிய வடிவங்கள்மொழிப் பயன்பாடுசமூகச் சிந்தனைபடைப்பாளிகள்பண்பாட்டு உணர்வுநிறைவாழ்வு

ஞாயிறு, 9 நவம்பர், 2025

மொழி பற்றிய தகவல்கள்

 மொழி பற்றிய தகவல்கள்: விளக்கமும் சான்றுகளும்

நீங்கள் வழங்கிய குறிப்புகள், மொழியின் தோற்றம் குறித்த தொன்மங்கள், மொழியியல் கொள்கைகள், மற்றும் மொழிகளின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய நபர்கள் ஆகியவற்றின் கலவையாகும்.

திங்கள், 20 அக்டோபர், 2025

தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி

தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்பு

தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்பு (மாதிரி)

ஒரு தமிழ்ச் சொல்லை உள்ளிட்டு, அதன் இலக்கணச் சரித்தன்மையை (மெய்ம்மயக்கம், மொழிமுதல், மொழியிறுதி அடிப்படையில்) சோதிக்கவும்.

முடிவு இங்கே காட்டப்படும்...

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிதை

முன்னுரை

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான வடிவங்களில் ஒன்று மரபுக் கவிதை. தொல்காப்பியத்தில் காணப்படும் யாப்பிலக்கணம் இதன் அடிப்படை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா போன்ற வடிவங்களில், சங்க காலம் முதல் இன்று வரை கவிதைகள் இயற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை, பல கவிஞர்கள் மரபுக் கவிதை வடிவத்தைப் பயன்படுத்தி, புதிய சமூக, அரசியல், மொழிச் சிந்தனைகளை வெளிப்படுத்தினர். இக்கட்டுரையில், இக்கால மரபுக்கவிதை முன்னோடிகளைப் பற்றியும், அதன் வளர்ச்சிப் பற்றியும் விரிவாகக் காணலாம்.

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

முன்னுரை

கதைகள் சொல்வதும் கேட்பதும் தமிழர்களின் தொன்மையான வழக்கம். இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள் எனப் பல வடிவங்களில் கதைகள் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வந்தன. இந்தக் கதை மரபு, அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின் புதிய பரிமாணத்தைப் பெற்றது. இதன் விளைவாக, ஒரு புதிய இலக்கிய வடிவம் தோன்றியது. அதுவே, சிறுகதை. இந்த இலக்கிய வடிவம் எப்படித் தோன்றி, எப்படி வளர்ந்தது, அதில் யாரெல்லாம் பங்களித்தார்கள் என்பதைக் கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ் இலக்கிய வரலாறு என்ற கண்ணோட்டத்தில் இக்கட்டுரை விவரிக்கிறது.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

அம்மா - இளம்பிறை

கவிஞர் இளம்பிறை, தனது வாழ்வின் அனுபவங்களையும், சவால்களையும், சமூகச் சிந்தனைகளையும் கவிதைகளாகப் படைத்து, தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். எளிமையான குடும்பப் பின்னணியில் பிறந்து, கல்வியிலும், இலக்கியத்திலும் சாதித்த அவரது பயணம், பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

அது ஒரு காலம் கண்ணே.... - வைரமுத்து

வைரமுத்து (பிறப்பு: 13 ஜூலை 1953) தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்திருப்பவர். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர், தனது படைப்புகளின் மூலம் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தவர். இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்று, தனது திறமையை நிரூபித்துள்ளார்.

கதறுகிறேன் - தேனரசன்

தேனரசன் ஒரு தமிழாசிரியர். வானம்பாடி, குயில், தென்றல் போன்ற பல இதழ்களில் அவர் கவிதைகள் எழுதியுள்ளார். சமுதாயச் சிக்கல்களைத் தனது கவிதைகளில் எள்ளல் சுவையோடு வெளிப்படுத்துவது அவரது தனிச்சிறப்பு. மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகியவை அவர் எழுதிய குறிப்பிடத்தக்க கவிதை நூல்கள்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

இயற்கை - சுரதா

தமிழ்க்கவிதை உலகில் உவமைக் கவிஞர் என்று போற்றப்படும் சுரதா (இயற்பெயர்: இராசகோபாலன்) அவர்கள், மரபுக் கவிதைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, உவமைகளால் தமிழுக்கு அணி சேர்த்தவர். அவரது வாழ்க்கை, கவிதைப் பணி, மற்றும் தமிழ்த் தொண்டுகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2024

திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் 10.12.2024 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெற்றது. இந்த ஆட்சிமொழிப் பயிலரங்கில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் / உதவியாளர் ஆகிய அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி / கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடுகுறித்த பயிற்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்கள். 

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2024

திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாப் பயிலரங்கம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் 19.12.2024 (வியாழாக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் / உதவியாளர் ஆகிய அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி / கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடுகுறித்த பயிற்சியை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்கள். 

செவ்வாய், 2 ஜூன், 2020

மதிப்பீட்டுரை - தெலுங்கு-தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள்


தமிழும் தெலுங்கும் உறவுடைய மொழிகள். திராவிடத்திலிருந்து இவ்விரண்டும் பிரிந்தது என்பது அறிஞர்கள் கருத்து. திராவிடர் என்றாலே அது தமிழர் எனக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அறிஞர்கள் பார்வையில் இருந்து வருகிறது. தமிழர்தம் பார்வையில் திராவிடர் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது இருக்கட்டும் ஆய்வாளர் ஆ.ஈஸ்வரன் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தும் அதன் பின்பும் மேற்கொண்ட ஆய்வுகளை ஒரு பொருண்மை கருதி தெலுங்கு - தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள் (உறவுநிலை - இலக்கியம் நூலாய்வு) எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார். இம்முயற்சி வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.து நிற்க.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு


                                                                                         - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
ட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

முத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்


திராவிடமொழி இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக் கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்), சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்) காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கட்டுரை.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தமிழில் விழிப்பே இல்லை

  சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.

நாள் 16: NotebookLM அறிமுகமும் இடைமுகமும்

📜 நாள் 16: NotebookLM – அறிமுகமும் இடைமுகமும் | Introduction & Interface ...