கணித்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணித்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 டிசம்பர், 2023

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் _ கணித்தமிழ்ப் பயிற்சி - திருப்பூர்

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம்

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.122023 வரையிலான ஒருவாரக் காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் ஒரு பகுதியாக 19:122023 (செவ்வாய்க் கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் 12:30 மணி வரை அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் /உதவியாளர் ஆகியோர்களுக்குக் கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ் பயிற்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு, கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் - கணித்தமிழ்ப் பயிற்சி - கோவை

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27/12/1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படவேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநரின் பார்வை (2) இல் உள்ள ஆணைக்கிணங்க கோயமுத்தூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரையிலான ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார ஒருபகுதியாக 18.12.2023 (திங்கள் கிழமை) அன்று முற்பகமல் 10.00 மணி முதல் 12.30 மணி வரை அரசு அலுவலகங்கள், வாரியங்கள் கழகங்கள் தன்னாட்சி நிறுவனம் போன்ற துறைகளில் பணிபுரியும் தட்டச்சர் / இளநிலை உதவியாளர் /உதவியாளர் ஆகியோர்களுக்கு கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி கோயமுத்தூர் மாவட்ட ஒண்டிப்புதூர் கல்வியியல் கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் பயிற்சி கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் / கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்துப் பயிற்சி அளித்த்தேன்.

செவ்வாய், 25 ஜூலை, 2023

வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்

தமிழ்த்துறையின் கணித்தமிழ் யுகமன்றத்தின் சார்பாக ”வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்” எனும் தலைப்பில் பயிலரங்கம் இன்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்வின் பயிற்றுநராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார். வலைப்பதிவு உருவாக்கும் முறை, பதிவுகள் மற்றும் தரவுகள் பதிவேற்றும் முறை, வாசகர்கள் ஊடாடும் முறை, வலைப்பதிவின் நன்மைகள் ஆகியவற்றை சிறப்பாகப் பயிற்றுவித்தார். பல துறைசார்ந்த  மாணவர்கள் 75 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மாணவர்களின் பல வினாக்களுக்குத் தெளிவாக விடையளித்து வலைப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இந்நிகழ்வை கணித்தமிழ் யுகமன்ற ஒருங்கிணைப்பாளர் ப.ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.

திங்கள், 24 மே, 2021

கூகுள் ஆவணம் - நூலாக்கம்

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வீராச்சிப்பாளையம், சங்ககிரி, மற்றும்
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி(தன்னாட்சி)
எளையாம்பாளையம், திருச்செங்கோடு மற்றும் உஞ்சனை.

  முதுகலைத்  தமிழாய்வுத்துறை  மற்றும் தமிழ் உயராய்வுத் துறை
இணைந்து நிகழ்த்தும்

பயிலரங்கம்

தலைப்பு: ‌.                            " *கூகுள் ஆவணம் மூலம் மின் நூல் உருவாக்குவது எப்படி?*" 

சிறப்பு விருந்தினர் :
 *முனைவர்* .
 *த. சத்தியராஜ்* 
 *தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்* 
 *ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி* .
 *கோவை.* 

நேரம் : மதியம்
 12.00 - 1.00

MAY 24.05.2021
Zoom meet

https://zoom.us/j/94321970379?pwd=VDB1Z3pneFJoMWEzczRBa29kQzVRUT09
Meeting ID 94 3 21970 379
Pass code 072465
 அனைத்து மாணவியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 
கலந்து கொள்ளும் அனைத்து  மாணவியர்களுக்கும்
மின் சான்றிதழ்(E Certificate) வழங்கப்படும்.

ஒருங்கிணைப்பாளர் :
முனைவர் ப. சுந்தரமூர்த்தி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

நிகழ்வுத் தலைமை : 
முனைவர்.
செ.ஜெயந்தி,
தமிழ்த்துறைத் தலைவர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்) சங்ககிரி.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

விக்கித்திட்டமும் செயற்கை நுண்ணறிவும் (Wikimedia and Artificial Intelligence)

 முனைவர் த. சத்தியராஜ்

தமிழ் உதவிப்பேராசிரியர்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர் - 641 042

sathiyarajt@skacas.ac.in 

கணினித் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைகின்றது. இந்த துறை மனிதரைப் போன்று செயல்படும் திறன் படைத்தது. இதன் வகை நான்கு. அவை; எதிர்வினை செயற்கை நுண்ணறிவு (Reactive Machine AI), வரையறுக்கப்பட்ட நினைவகச் செயற்கை நுண்ணறிவு (Limited Memory AI), கோட்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு (Theory Mind AI), விழிப்புணர்வு செயற்கை நுண்ணறிவு (Self - Aware AI) என்பன. இவை செயல்திட்டம் (Planning), கற்றல் (Learning), தர்க்கம் (Reasoning), பிரச்சனைக்கு தீர்வு (Problem Solving), தீர்வு காணல் (Decision making) என்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குபவை. இந்தப் புரிதலின் அடிப்படையில் தமிழ்மொழித் தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு முறையில் தரும்பொழுது தேடுவோரின் தேடலுக்கு ஏற்ப அது தருவதற்கு முயற்சி செய்யும்.  இந்தச் செயற்கை நுண்ணறிவுக் குறித்துப் பின்வரும் வரைபடம் விளக்கும்.

வியாழன், 9 ஜனவரி, 2020

ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 09.01.2020 இன்று “ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா” நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள்  தலைமையுரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் இரா.குணசீலன்(இணையத்தமிழ் ஆய்வாளர்) அவர்கள் கலந்துகொண்டு “இணையத்தமிழ் நுட்பங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வலைப்பதிவு, விக்கிப்பீடியா, யுடியுப், குறுஞ்செயலிகள், தமிழ் எழுத்துருக்கள், இணையவழிக் கல்வி, இ-புக் ஆகியவற்றை இணையங்கள் மூலம்  தமிழில் பதிவேற்றவும் தரவிறக்கம் செய்வதற்கும், தமிழ் மொழியை உலகளாவில் வளர்ச்சி அடைய செய்யக்கூடிய செயல்கள் குறித்து தன் கருத்துரையில் விளக்கினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். இக்கருத்தரங்கம் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தது.

ஆக்கம் :
பேரா.ப.இராசேசு