செவ்வாய், 25 ஜூலை, 2023

வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்

தமிழ்த்துறையின் கணித்தமிழ் யுகமன்றத்தின் சார்பாக ”வலைப்பதிவு உருவாக்கமும் பதிவேற்றமும்” எனும் தலைப்பில் பயிலரங்கம் இன்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்வின் பயிற்றுநராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.சத்தியராஜ் அவர்கள் கலந்துகொண்டு பயிற்றுவித்தார். வலைப்பதிவு உருவாக்கும் முறை, பதிவுகள் மற்றும் தரவுகள் பதிவேற்றும் முறை, வாசகர்கள் ஊடாடும் முறை, வலைப்பதிவின் நன்மைகள் ஆகியவற்றை சிறப்பாகப் பயிற்றுவித்தார். பல துறைசார்ந்த  மாணவர்கள் 75 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மாணவர்களின் பல வினாக்களுக்குத் தெளிவாக விடையளித்து வலைப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இந்நிகழ்வை கணித்தமிழ் யுகமன்ற ஒருங்கிணைப்பாளர் ப.ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.

1 கருத்து:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன