இயல் ஏழு: நாகரிகம், நாடு, சமூகம்
வாருங்கள் மாணவர்களே! தமிழரின் பழமையான நாகரிகம், நாட்டின் மீதான பற்று, மற்றும் சமூகப் பொறுப்புகளை விளக்கும் இயல் 7-ஐக் காண்போம். ம.பொ.சி அவர்களின் போராட்டம் முதல், சோழர் கால மெய்க்கீர்த்தி வரை அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
முழுமையான பாடக்குறிப்புகளை வாசிக்க சொடுக்குக 👇
1. உரைநடை உலகம்: சிற்றகல் ஒளி
ஆசிரியர்: ம.பொ.சிவஞானம் (சிலம்புச் செல்வர்)
'எனது போராட்டம்' என்னும் தன்வரலாற்று நூலிலிருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டுள்ளது. ம.பொ.சி அவர்கள் வறுமையின் காரணமாகப் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாவிட்டாலும், 'கேள்வி ஞானம்' மூலமும் புத்தக வாசிப்பின் மூலமும் பேரறிஞராக உயர்ந்தார்.
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்!" - சென்னை மீட்புப் போராட்டத்தின் போது ம.பொ.சி முழக்கம்
- எல்லைப் போராட்டங்கள்: வடக்கே திருத்தணியையும், தெற்கே கன்னியாகுமரியையும் மீட்கப் போராடினார்.
- சிலப்பதிகாரப் பற்று: தமிழினத்தை ஒன்றுபடுத்தும் காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைக் கருதி, 'சிலப்பதிகார மாநாடுகள்' நடத்தினார்.
- சிறைவாசம்: 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் மற்றும் ஆகஸ்ட் புரட்சியில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
- ம.பொ.சிவஞானம் அவர்களுக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன?
- 'சிலம்புச் செல்வர்' என்று ம.பொ.சி அழைக்கப்படக் காரணம் யாது?
- தமிழக வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சியின் முழக்கம் என்ன?
2. கவிதைப் பேழை: ஏர் புதிதா?
ஆசிரியர்: கு.ப.ராஜகோபாலன்
சித்திரை மாதத்தில் நடக்கும் 'பொன் ஏர் பூட்டுதல்' என்னும் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வை இக்கவிதை அழகாகச் சித்தரிக்கிறது.
- முதல் மழை பெய்தவுடன் மண் பதமாகிறது.
- விடிவெள்ளி முளைத்தவுடன் உழவன் காளைகளை ஓட்டிச் செல்கிறான்.
- ஏர், மாடு, காடு பழைமையானவைதான்; ஆனால் நாள், நட்சத்திரம், ஊக்கம் ஆகியவை புதியவை.
- கொழுவை அமுத்தினால் மண் புரளும், நிலம் சிலிர்க்கும், நாற்று நிமிரும் என்று உழவன் நம்பிக்கையோடு செல்கிறான்.
- 'பொன் ஏர் பூட்டுதல்' என்றால் என்ன?
- முதல் மழை விழுந்ததும் உழவன் என்ன செய்கிறான்?
- கு.ப.ரா அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?
3. கவிதைப் பேழை: மெய்க்கீர்த்தி
மன்னன்: இரண்டாம் இராசராச சோழன்
அரசர்கள் தங்கள் வரலாறும், பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க வேண்டும் என்பதற்காகக் கல்லில் செதுக்கியவையே மெய்க்கீர்த்தி ஆகும். இது சோழர் காலத்தில் இலக்கிய நயம் பெற்றது.
பாடலின் சிறப்பு (எதிர்மறை உவமைகள்):
- யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகின்றன (மக்கள் கட்டப்படுவதில்லை).
- சிலம்புகள் மட்டுமே புலம்புகின்றன (மக்கள் துன்பப்படுவதில்லை).
- ஓடைகள் மட்டுமே கலங்குகின்றன (மக்கள் கலங்குவதில்லை).
- மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன.
அரசன் மக்களுக்கெல்லாம் உயிராக இருந்து ஆட்சி செய்வதை இப்பாடல் விளக்குகிறது.
- மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் என்ன?
- இரண்டாம் இராசராசனின் பட்டப்பெயர்கள் யாவை?
- நாட்டு மக்கள் எதனால் கலங்குவதில்லை என மெய்க்கீர்த்தி கூறுகிறது?
4. கவிதைப் பேழை: சிலப்பதிகாரம்
ஆசிரியர்: இளங்கோவடிகள்
புகார் நகரத்தின் மருவூர்ப்பாக்கத்தில் இருந்த வணிக வீதிகளின் செழிப்பை 'இந்திரவிழா ஊரெடுத்த காதை' விளக்குகிறது.
- நறுமணப் பொருட்கள்: சந்தனம், அகில், கற்பூரம் போன்றவை விற்கப்பட்டன.
- கைவினைஞர்கள்: காருகர் (நெசவாளர்), மண்ணீட்டாளர் (சிற்பி), கண்ணுள் வினைஞர் (ஓவியர்), பொற்கொல்லர் ஆகியோர் வாழ்ந்தனர்.
- உணவுப் பொருட்கள்: பிட்டு, அப்பம் விற்போர் (கூவியர்), மீன் விற்கும் பரதவர், உப்பு விற்கும் உமணர் இருந்தனர்.
- முத்து, பவளம், பொன் போன்றவை மலைபோல் குவிந்து கிடந்தன.
- சிலப்பதிகாரம் காட்டும் மருவூர்ப்பாக்க வணிகர்களைப் பட்டியலிடுக.
- 'காருகர்', 'பாசவர்' - பொருள் தருக.
- சிலப்பதிகாரம் ஏன் 'குடிமக்கள் காப்பியம்' என அழைக்கப்படுகிறது?
5. விரிவானம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே...
மகளிர் நாள் விழாவில், சாதனைப் படைத்தப் பெண் ஆளுமைகளைப் போல வேடமிட்டு மாணவர்கள் பேசும் நிகழ்வு.
- எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைப்பேரரசி, ஐ.நா அவையில் பாடியவர், மகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர்.
- பாலசரஸ்வதி: பரதநாட்டியக் கலைஞர், 'டோக்கியோ கிழக்கு மேற்கு சந்திப்பு' நிகழ்வில் உலகப் புகழ் பெற்றவர்.
- ராஜம் கிருஷ்ணன்: களத்திற்குச் சென்று ஆய்வு செய்து எழுதும் எழுத்தாளர். 'வேருக்கு நீர்' நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: 'உழுபவருக்கே நில உரிமை' (LAFTI) இயக்கம் கண்டவர்.
- சின்னப்பிள்ளை: 'களஞ்சியம்' மகளிர் குழு அமைத்தவர். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இவர் காலில் விழுந்து வணங்கினார்.
- எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய மீரா பஜன் பாடல் எது?
- ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினங்களில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
- சின்னப்பிள்ளை தொடங்கிய மகளிர் குழுவின் பெயர் என்ன?
6. கற்கண்டு: புறப்பொருள் இலக்கணம்
அகப்பொருள் வாழ்வியலைக் கூற, புறப்பொருள் போர், வீரம், கொடை பற்றிக் கூறுகிறது. இது 12 வகைப்படும்.
- வெட்சி: ஆநிரை கவர்தல் (எதிர்த்திணை: கரந்தை - மீட்டல்).
- வஞ்சி: மண்ணாசை கருதிப் போரிடல் (எதிர்த்திணை: காஞ்சி - எதிர்த்தல்).
- நொச்சி: கோட்டையைக் காத்தல் (எதிர்த்திணை: உழிஞை - வளைத்தல்).
- தும்பை: வலிமையை நிலைநாட்டப் போரிடல்.
- வாகை: வெற்றி பெற்றவர் வாகைப்பூ சூடுதல்.
- பாடாண்: ஒருவரின் புகழ், கொடை பாடுதல்.
- வெட்சித் திணைக்கும் கரந்தைத் திணைக்கும் உள்ள வேறுபாடு யாது?
- 'மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லுதல்' - எத்திணை?
- பாடாண் திணை - பிரித்து எழுதுக.