🌿 1. சிந்தியல் வெண்பாக்கள் – இயற்கை வாழ்த்து
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
வங்கண் உலகளித்தலான்
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்தலான்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேனின்று தான் சுரத்தலான்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுகலான்
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்
🎋 2. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா – புகார், கண்ணகி, கோவலன், திருமணம்
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பதல்லதை
ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே
நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு
போகம் நீள் புகழ் மன்னும் புகார்நகர் அது தன்னில்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண்டு அகவையாள்
அவளும்தான்
ஈகை வான் கொடி அன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
அவளும் தான்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென்பாள் மன்னோ
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக்குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு நிதிக்கிழவன் மகன் ஈரெட்டாண்டு அகவையான்
அவனும்தான்
பெரு நிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு நிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான்
அவனும் தான்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலனென்பான் மன்னோ
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ
இரு பெருங்குரவரும் ஒருபெரு நாளால்
மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்
இரு பெரும் குரவரும் ஒரு பெரு நாளால்
மண அணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ
மா நகர்க்கு ஈந்தார் மணம்
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
அரசெழுந்தது ஒர்படியெழுந்தன அகலுள் மங்கல அணியெழுந்தது
முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன, முறை எழுந்தன பணிலம், வெண்குடை
அரசு எழுந்தது, ஒர்படி எழுந்தன, அகலுள் மங்கல அணி எழுந்தது
நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்
வானூர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க் கீழ்
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
தீவலஞ் செய்வது காண்பார் கண்நோன்பு என்னை
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறுக எனவேத்திச் சில்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார்
காதலன் பிரியாமல் கவவுக் கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்திச் சில மலர் கொடு தூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்
உப்பாலைப் பொற்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா எப்பாலும்
செரு மிகு சின வேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே