புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 பிப்ரவரி, 2025

விக்கிமூலத்தில் புறநானூற்றுத் தரவு மேம்பாடு

 அறிமுகம்

புறநானூறு, சங்க இலக்கியத்தின் ஒரு முக்கியமான படைப்பு. இது பழந்தமிழர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், போர் முறைகள், வீரம், கொடை, அறம் போன்ற பலவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. எனவே, இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், புறநானூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளை ஆராய்வது ஆகும். இதற்காக, புறநானூற்றின் இலக்கியக் கூறுகள், வரலாற்றுப் பின்னணி, ஆய்வுகள் போன்றவற்றைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் இங்கே வழங்கப்படுகிறது.

புறநானூற்று இலக்கியத்தைக் காலங்காலமாக எப்படிப் பாதுகாத்து வந்தார்களோ, அப்படி இன்று இணைய வளாகத்தில் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். அதனை முன்னிறுத்தியும் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையிலும் ஐங்குறுநூற்றின் தரவுகளை விக்கிமூலத்தில் பதிவேற்றவேண்டிய வழிமுறைகளையும் இந்த ஆய்வு முன்வைக்கின்றது.