அரு. ராமநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரு. ராமநாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 மே, 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 2)

 நூலாசிரியர் குறிப்பு

விக்கிப் பொதுவகம்
அரு. ராமநாதன், சூலை 7, 1924இல் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துள்ளார். படிக்கும் காலங்களிலேயே ஆளுமையாக உருவானவர் என்பதை அவர் எழுதிய சம்சார சாகரம் எனும் படைப்பே சான்றாக அமைகின்றது. இப்படைப்பு அவர்தம் பதினெட்டாம் வயதில் எழுதப்பட்டதாகும். அதன்பின்பு அவர் தன்னை எழுத்தாளர், தொகுப்பாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், திரைவசன ஆசிரியர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் ரதிப்ரியா, கு.நா.ராமையா ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார். இவர் 1945இல் எழுதிய ’ராஜராஜ சோழன்’ நாடகம் ஆயிரம் முறை மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையை ஆளுமையின் சில படைப்புகளாக சிந்தனையாளர் பெஞ்சமின், பிராங்கிளின், அறுபது மூவர் கதைகள், குண்டு மல்லிகை, போதிசத்துவர் கதைகள், மதனகாமராஜன் கதைகள், விநாயகர் புராணம், காலத்தால் அழியாத காதல், அசோகன் காதலி, வீரபாண்டியன் மனைவி, அவ்வையார் பொன்மொழிகள், விக்ரமாதித்தன் கதைகள், கிளியோபாட்ரா, சுந்தரரின் பக்தியும் காதலும், வெற்றிவேல் வீரத்தேவன், வேதாளம் சொன்ன கதைகள், பழையனூர் நீலி, மகாகவி பாரதியார் பொன்மொழிகள் ஆகியன அமைந்துள்ளன (விக்கிப்பீடியா, பார்வை நாள் - 13.4.22, https://ta.wikipedia.org/s/75ua). 

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

இராஜராஜசோழன் சரித்திர நாடகம் : நூல் அறிமுகம் Introduction to Raja Raja Chozhan HISTORICAL DRAMA (பகுதி 1)

சுருக்கம்

அரு.ராமநாதனால் எழுதப்பெற்ற நூல் இராஜராஜசோழன் சரித்திர நாடகம் ஆகும். இன்னும் இருபத்து இரண்டு பதிப்புகளைக் கடந்துள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு செப்டம்பர் 1955 ஆகும். இந்நூல் சோழ மரபினருள் உதித்த பல்வேறு சிறப்புகளை உடைய இராஜராஜ சோழனின் அறிவையும், ஆட்சிச் சிறப்பையும், கூர்த்த மதியினையும், எளிமையையும், முற்போக்குத் திறனையும், சமஉரிமை பேணும் தன்மையையும், பெண்ணுரிமை, கருத்துரிமை என இன்னும் அளவிட முடியாத பல சிறப்புகளையும் வெளிக்காட்டி நிற்கின்றது. இக்கட்டுரை அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Abstract

The book written by Aru Ramanathan is a historical drama by Rajaraja Chola. Twenty-two more editions have passed. The first edition of the book was published in September 1955. The book exemplifies Rajaraja Chola's knowledge, rule, sharpness, simplicity, progressiveness, egalitarianism, femininity and ideology, as well as many other immeasurable features of the Chola dynasty. This article aims to introduce them all.