ஞாயிறு, 2 மார்ச், 2025

படையல்

 எம்மை சான்றோ னாக்க நினைந்து

தம்மை மெழுகாக்கிக் கொண்ட ஈருள்ளம்

இல்லா ளின்பம் பெறாதும் சென்ற

இன்ப மில்லா அண்டை நாடும்

பொருளீட்டி பொறுப்பாய் வளர்த்த வராயும்

பொருத்திட்ட தந்தை தங்கச் சாமிக்கும்

கேள்வன் குடும்பப் புரித லின்றும்

கேளாத் தன்மை கொண்டும் இருக்க

கருவாடு விற்று பாத்தி மிதித்து

கனிவான வருவா யீட்டி வந்து

இனிய கல்வியைக் கனிய வைத்த

தாய்வசந் தாவுக்கும் இக்கவிகள் தாங்கும்

அன்புப் படைய லாக அமைந்திடும் நூலே!

   (கலித்தாழிசை)

- நேயக்கோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன