ஞாயிறு, 30 நவம்பர், 2025

தமிழ்நாடு அரசு (TNPSC) குடிமைப் பணித் தேர்வு - IV | பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசு குடிமைப் பணித் தேர்வு - IV
(பகுதி இ: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - பத்தாம் வகுப்புத் தரம்)

அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)

எழுத்து:

பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் - வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்.

சொல்:

வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லிலிருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் - தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் - வினைச்சொல் - எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் - இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)

பொதுவானவை & பிழை திருத்தம்

எதிர்ச்சொல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருள் அறிதல், பொருந்தா சொல், அகர வரிசைப் படுத்துதல். பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு. ஊர்ப் பெயர்களின் மரூஉ (எ.கா: புதுவை), பிழை திருத்துக (ஒரு - ஓர்).

எ.கா: வானில் ____ தோன்றினால் மழை பொழியும் (முகில் / நட்சத்திரம்)
ஊடகம் - தகவல் தொடர்புச் சாதனம்

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)

சொற்றொடர் & மரபு

சொற்களை ஒழுங்குபடுத்தல், தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை. திணை, பால், எண், இட மரபுகள்.

மரபு வகைஎடுத்துக்காட்டு
இளமைப் பெயர்பசுக் கன்று, ஆட்டுக்குட்டி
ஒலிமரபுநாய் குறைத்தது, காகம் கரையும்
வினைமரபுசோறு உண், கூடை முடை

அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)

பல்துறை சார்ந்த ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிதல்.

ஆங்கிலச் சொல்தமிழிச் சொல்
Search Engineதேடு பொறி
Migrationவலசை
Allergyஒவ்வாமை
Geneமரபணு

அலகு V & VI: வாசித்தல் & மொழிபெயர்ப்பு

வாசித்தல் திறன் (15 கேள்விகள்)

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளித்தல். செய்தித்தாள், தலையங்கம், கட்டுரைகளை வாசித்துப் புரிந்துகொள்ளுதல்.

மொழிபெயர்ப்பு (5 கேள்விகள்)

ஆங்கிலம், பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (எ.கா: Pendrive, Printer, Keyboard).

அலகு VII: இலக்கியம் & தமிழ் அறிஞர்கள் (15 கேள்விகள்)

திருக்குறள் (20 அதிகாரங்கள்)
ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை.
அறநூல்கள் & சான்றோர்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு... உ.வே.சா, பாவாணர், பெருஞ்சித்திரனார், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் மற்றும் பல சான்றோர்கள் பற்றிய செய்திகள்.

மலர்: 11 | இதழ்: 44 | நவம்பர் 2025

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

மலர்: 11 | இதழ்: 44 | நவம்பர் 2025


இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழின் 44ஆவது இதழ் (மலர் 11, நவம்பர் 2025) தமிழ் மொழி, இலக்கியம், கல்வி, கலாச்சாரம், மதப்பண்பாடு, நடப்புத் தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு துறைகளைத் தொட்ட ஆய்வுகளை இணைத்து வெளியிடுகிறது.

மேலும் வாசிக்க ▼

இவ்விதழில் இடம்பெறும் கட்டுரைகள் அகநானூறு கருத்தியல் ஆய்விலிருந்து சமகால இசை–மொழி உரையாடல்கள், மதக் கல்வி உத்திகள், குறுஞ்செயலி வழிக் கற்றல் அனுபவங்கள் மற்றும் புலவர் மரபின் மொழிப்பற்று வரை விரியும் பரந்த துறைகளைக் கொண்டவை.

"இந்த இதழின் நோக்கம், தமிழாய்வின் பல்முகப் போக்கை உலகளாவிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், புதிய ஆய்வுகளின் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுமாகும்."

Issue Highlights

  • 🔹 A deep interpretative study of Akanānūṟu 340
  • 🔹 An analysis of love and emotion in Jenila Gomes’ songs
  • 🔹 Pedagogical strategies of Prophet Muhammad (PBUH) compared with modern theories
  • 🔹 Practical experience of Tamil language teaching using Anchor Podcast & Spotify
  • 🔹 Linguistic devotion in the works of Tamil scholar Pavalar Tamilmani Ellon

ஆய்வுக் கட்டுரைகள் (Articles)

அகநானூறு-340 ஒரு பரந்துபட்ட ஆழப்பார்வை

Author: S.Kanmani Ganesan | Pages: 1-8

📄 பதிவிறக்கம் (Download)

ஜெனிலா கோம்ஸ் பாடல்களில் காதல் கழிவிரக்கம்

Author: ESWARAN ARUMUGAM | Pages: 9-23

📄 பதிவிறக்கம் (Download)

நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் கற்பித்தல் உத்திகள் : சமகால கல்விக் கோட்பாடுகளுடனான ஒப்பீடு

Author: Mohamed Mujahid | Pages: 24-35

📄 பதிவிறக்கம் (Download)

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் குறுஞ்செயலி பயன்பாடு: எங்கர் பாட்காஸ்ட், ஸ்பொட்டிஃபை வழி செயல்முறை அனுபவம்

Author: Malini Maniam | Pages: 36-46

📄 பதிவிறக்கம் (Download)

பாவலர் தமிழ்மணி எல்லோனின் மொழிப்பற்று

Author: MUNIYASAMY S | Pages: 47-69

📄 பதிவிறக்கம் (Download)
© 2025 இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் | All Rights Reserved.

சனி, 29 நவம்பர், 2025

சட்டக்கல்லூரி தமிழ்த் தகுதித் தேர்வு 2025

தமிழ்த் தகுதித் தேர்வு - சட்டக்கல்லூரி அரசுப் பணித் தேர்வு

(முதல் 2 வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முழு வினாக்களையும் காண கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்)


1. பொருத்துக:

(a) நேமி(i) தூவி
(b) தூஉய்(ii) மலை
(c) சுவல்(iii) நற்சொல்
(d) கோடு(iv) சக்கரம்
(v) தோள்
✅ விடை: (A) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

2. பொருத்துக:

(a) அல்கி(i) பள்ளம்
(b) படுகர்(ii) சுற்றம்
(c) பொம்மல்(iii) தங்கி
(d) கடும்பு(iv) சோறு
✅ விடை: (A) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

3. ''ஏறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்வான்" - என்னும் புறப்பாடல் சுட்டிச்செல்லும் அறம் எது?

✅ விடை: (C) போர் அறம்

4. இலக்கணக் குறிப்பைக் கண்டறிந்து பொருத்துக:

(a) மார்கழித் திங்கள்(i) அன்மொழித் தொகை
(b) கொல் களிறு(ii) பண்புத் தொகை
(c) முறுக்கு மீசை வந்தார்(iii) உவமைத் தொகை
(d) வட்டத் தொட்டி(iv) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(v) வினைத்தொகை
✅ விடை: (A) (a)-(iv), (b)-(v), (c)-(i), (d)-(ii)

5. பொருத்தமில்லாத சொற்றொடரைக் கண்டறிக:

✅ விடை: (C) கரும்பின் அடி 'கழி'ஆகும்

6. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருளை உணர்த்தும் அணி:

✅ விடை: (D) தீவக அணி

7. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது ________ ஆகும்.

✅ விடை: (D) தன்மை நவிற்சியணி

8. "புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக்காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்" - நூல்?

✅ விடை: (C) திருவிளையாடற் புராணம்

9. பொருத்துக (ஆசிரியர்கள்):

✅ விடை: (A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

10. சொற்களைப் பிரித்துப் பார்த்து சரியான பொருளை அறிக:

✅ விடை: (D) (a), (b), (c) சரி

11. பொருத்துக (இலக்கிய வகைகள்):

✅ விடை: (A) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)

12. பொருத்துக (பூவின் நிலைகள்):

✅ விடை: (A) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

13. 'நவமணி வடக்க யில் போல் நல்லறப் படலைப் பூட்டும்' - நூல்?

✅ விடை: (A) தேம்பாவணி

14. நிரப்புக: "தென்னன் மகளே! திருக்குறளின் ________! இன்னறும் பாப்பத்தே! ________ தொகையே!"

✅ விடை: (A) மாண், எண்

15. நன்றும் தீதும் ஆய்தலும்... அமைச்சர் கடமை - நூல்?

✅ விடை: (D) மதுரைக் காஞ்சி

16. பொருத்துக (தொகை நிலை):

✅ விடை: (A) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

17. 'சிறுமலையைப்' போற்றிப்பாடும் காப்பியம்?

✅ விடை: (A) சிலப்பதிகாரம்

18. பொருத்துக (வட்டார வழக்கு):

✅ விடை: (D) (a)-(ii), (b)-(v), (c)-(iv), (d)-(i)

19. கலைச்சொல் பொருத்துக:

✅ விடை: (C) (a)-(iv), (b)-(v), (c)-(ii), (d)-(iii)

20. குறளை நிரப்புக: "உலகத் தோடொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் ________ தார்."

✅ விடை: (A) அறிவிலா

21. வமிச பரம்பரையை விரித்துக் கூறுவது?

✅ விடை: (B) மெய்க்கீர்த்திகள்

22. குமரகுருபரர் எழுதிய நூல்:

✅ விடை: (C) நீதிநெறி விளக்கம்

23. சமூக உறுப்பினராவதற்குரிய, பண்பு நலனை உருவாக்க உதவுவது?

✅ விடை: (D) அறங்கள்

24. அறத்தையும் இன்பத்தையும் தருவதற்கு பொருள் எந்த வழியில் சேர வேண்டும்?

✅ விடை: (B) நேர்மையான

25. இடலாக்குடியில் பிறந்தவர் யார்?

✅ விடை: (A) கா.ப. செய்கு தம்பிப் பாவலர்

26. தமிழினத்தை ஒன்றுபடுத்த பயன்பட்ட ஓர் இலக்கியம்?

✅ விடை: (A) சிலப்பதிகாரம்

27. 'பயன்கலை' என்று குறிப்பிடப்படுவது?

✅ விடை: (B) மொழிபெயர்ப்பு

28. குருந்த மரம் எத்திணைக்கு உரியது?

✅ விடை: (D) முல்லை

29. கீழ்க்கண்டவற்றுள் எது நச்சு மரம்?

✅ விடை: (A) காஞ்சிரை

30. 'இலையிலிட வெள்ளி எழும்' எனப் பாடியவர்?

✅ விடை: (A) காளமேகப் புலவர்

வியாழன், 27 நவம்பர், 2025

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்: ஓர் அறிமுகம்

சங்க இலக்கியத்தின் இரு கண்களில் ஒன்று எட்டுத்தொகை. இவை (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றின் வகைப்பாடு இதோ:

❤️ அகம் சார்ந்தவை (5)
  • 1. நற்றிணை
  • 2. குறுந்தொகை
  • 3. அகநானூறு
  • 4. ஐங்குறுநூறு
  • 5. கலித்தொகை
⚔️ புறம் சார்ந்தவை (2)
  • 1. புறநானூறு
  • 2. பதிற்றுப்பத்து
⚖️ அகமும் புறமும் (1)
  • 1. பரிபாடல்

1. நற்றிணை

அமைப்பு: 9 முதல் 12 அடிகள் கொண்ட 400 அகவல் பாடல்கள். (விதிவிலக்கு: 110, 379 பாடல்கள் 13 அடிகள்).
கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார் (திருமால்).
தொகுப்பித்தவர்: பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.

நற்றிணை 'நல்+திணை' எனப் போற்றப்படுகிறது. இதில் 175 புலவர்கள் பாடியுள்ளனர். உண்மைக்காதல் பிறவிதோறும் தொடரும் என்பதை நற்றிணை மிக அழகாக எடுத்துரைக்கிறது.

"சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிதாகுவ தாயின்
மறக்குவென் கொல்என் காதலன் எனவே"
- நற்றிணை (397)

செல்வச் செழிப்பில் பிறந்த தலைவி, வறுமையுற்ற கணவனுடன் வாழ்ந்தாலும், தன் தந்தையின் உதவியை எதிர்பாராமல் வாழ்வது தமிழ்ப் பெண்களின் தன்மானத்தைச் சுட்டுகிறது.

2. குறுந்தொகை

அமைப்பு: 4 முதல் 8 அடிகள் கொண்ட 400 பாடல்கள்.
தொகுத்தவர்: பூரிக்கோ.
சிறப்பு: உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்.

"செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே"
- செம்புலப்பெயல் நீரார் (40)

மேலும், "வினையே ஆடவர்க்கு உயிரே" (135) என்று ஆடவரின் கடமையையும் எடுத்துரைக்கிறது.

3. ஐங்குறுநூறு

அமைப்பு: 3 முதல் 6 அடிகள். 500 பாடல்கள்.
தொகுத்தவர்: கூடலூர்கிழார் | தொகுப்பித்தவர்: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

திணைபாடிய புலவர்
மருதம்ஓரம்போகியார்
நெய்தல்அம்மூவனார்
குறிஞ்சிகபிலர்
பாலைஓதலாந்தையார்
முல்லைபேயனார்

4. அகநானூறு

அமைப்பு: 13 முதல் 31 அடிகள். 'நெடுந்தொகை' என்றும் அழைக்கப்படும்.
தொகுப்பித்தவன்: உக்கிரப்பெருவழுதி.

பாடல்களின் எண்ணை வைத்துத் திணையை அறியும் புதுமையான வைப்பு முறை கொண்டது:

  • ஒற்றைப்படை எண்கள் (1, 3, 5...) - பாலை
  • 2, 8 என முடிப்பவை - குறிஞ்சி
  • 4 என முடிப்பவை - முல்லை
  • 6 என முடிப்பவை - மருதம்
  • 10, 20 என முடிப்பவை - நெய்தல்

5. கலித்தொகை

அமைப்பு: கலிப்பா வகையால் ஆன 150 பாடல்கள்.
தொகுத்தவர்: நல்லந்துவனார்.

ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) பற்றியும், கைக்கிளை, பெருந்திணை பற்றியும் பேசும் ஒரே எட்டுத்தொகை நூல் இதுவே.

"ஆற்றிடை நும்மொடு துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?"
- கலித்தொகை (6)

6. புறநானூறு

சிறப்பு: தமிழரின் வாழ்வியல் பெட்டகம்.
மீட்டுத் தந்தவர்: உ.வே.சா.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- கணியன் பூங்குன்றனார் (192)
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
- குடபுலவியனார் (18)

7. பதிற்றுப்பத்து

சேர மன்னர்கள் பதின்மர் பற்றி பாடப்பட்ட நூல். முதல் மற்றும் இறுதிப் பத்துக்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய 80 பாடல்களே உள்ளன.

பத்துமன்னன்புலவர்
2-ம் பத்துஇமயவரம்பன்குமட்டூர்க் கண்ணனார்
3-ம் பத்துபல்யானைச் செல்கெழுகுட்டுவன்பாலைக் கௌதமனார்
5-ம் பத்துசெங்குட்டுவன்பரணர்
7-ம் பத்துசெல்வக் கடுங்கோ வாழியாதன்கபிலர்

8. பரிபாடல்

சிறப்பு: இசையோடு பாடப்பட்ட நூல். அகமும் புறமும் கலந்தது.

திருமால், முருகன், வையை ஆறு, மதுரை நகர் ஆகியவற்றைப் பற்றிய பாடல்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடலுக்கும் பண் வகுத்தவர் பெயரும், இசையமைத்தவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.


🧠 தன் மதிப்பீடு: வினாடி வினா

கீழே உள்ள வினாக்களுக்கு விடையளித்துவிட்டு, சரியான விடையைக் காண 'விடையைக் காட்டு' என்பதை அழுத்தவும்.

1. எட்டுத்தொகை நூல்களுள் மூன்றடிகள் (சிற்றெல்லை) கொண்ட அகவல் பாடல் இடம் பெற்ற நூல் எது?

விடையைக் காட்டு
விடை: ஐங்குறுநூறு

2. எட்டுத்தொகையுள் முருகவேள் வணக்கத்தை வாழ்த்துச் செய்யுளாகப் பெற்ற நூல் எது?

விடையைக் காட்டு
விடை: குறுந்தொகை

3. 'குப்பைக்கோழியார்' பாடல் இடம்பெற்ற நூல் எது?

விடையைக் காட்டு
விடை: குறுந்தொகை

4. ஐங்குறுநூற்றைத் தொகுத்த சான்றோர் யார்?

விடையைக் காட்டு
விடை: புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்

5. கலித்தொகையைத் தொகுத்த புலவர் யார்?

விடையைக் காட்டு
விடை: நல்லந்துவனார்

- நன்றி -

செவ்வாய், 25 நவம்பர், 2025

பிள்ளைச் சிறு விண்ணப்பம் - வள்ளலார்

திருவருட்பா

ஆறாம் திருமுறை - 19. பிள்ளைச் சிறு விண்ணப்பம்
அருளியவர்: வள்ளலார் (இராமலிங்க அடிகளார்)

"பிள்ளைச் சிறு விண்ணப்பம்" என்பது வள்ளலார் பெருமான் இறைவனிடம் ஒரு குழந்தையைப் போல உரிமையுடன் முறையிடும் அற்புதமான பதிகமாகும். தாயும் தந்தையுமான இறைவனிடம், தன் பிழைகளைப் பொறுத்து அருளுமாறு அவர் வேண்டும் இப்பாடல்கள், படிப்பவர் மனதை உருக்கக்கூடியவை.


குறிப்பு: இப்பாடல்கள் "எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்" வகையைச் சார்ந்தவை.
பாடல் 1
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: ஒரு மகனைத் தந்தை அடித்தால், தாய் அவனை அணைத்து ஆறுதல் கூறுவாள். தாய் அடித்தால், தந்தை அவனை அணைத்துக் கொள்வார். ஆனால் எனக்குத் தந்தையும் தாயும் நீயே (சிவபெருமானே)! திருநீறு அணிந்த திருமேனியுடன் அம்பலத்தாடும் புனிதனே! நீ என்னைச் சோதித்து அடித்தது போதும்; இனி தாங்க மாட்டேன். என்னை அணைத்து அருள வேண்டும்.
பாடல் 2
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான் குறிக்கொண்ட கொடியனேன்குணங்கள் முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென் முனிவுதீர்ந்தருளே.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: பிள்ளைகளின் குணங்களைப் பெற்றவர்களே அறிவார்கள்; மற்றவர் அறிய மாட்டார்கள். என்னைப் பெற்றெடுத்த வள்ளலே! மன்றிலே நடிக்கும் அரசே! எண் குணங்களை உடையவனே! தீய குணங்களைக் கொண்ட என் குணங்களை நீ முழுமையாக அறிவாய். அப்படி அறிந்திருந்தும் என் மீது நீ கோபம் கொள்வது ஏன்? சினத்தைத் தவிர்த்து எனக்கு அருள் செய்வாயாக.
பாடல் 3
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச் சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன் செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: கொடுமையான புத்தியை உடைய மகன், தீய செயல்களைச் செய்ய விரும்பினாலும், அவன் விருப்பத்திற்காகப் பெற்றோர்கள் சில நேரம் சம்மதிக்கின்றனர். ஆனால், சிறிய அறிவை உடைய நான், என் விருப்பப்படி எதையும் விரும்பவில்லை. நீ எதை விரும்பச் செய்தாயோ, அதையே நான் விரும்பினேன். இதுவே கருணை மிகுந்த திருநெறி என்பதை உன் திருவுளம் அறியும்.
பாடல் 4
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால் செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: நான் பல பொய்களையும் பிழைகளையும் செய்கிறேன். ஆனால், ஒரு புல் நுனிக்குக் கூடத் தீங்கு விளைவிக்கும் பிழையை நான் செய்ததில்லை. உயிர்களிடத்தில் கொண்ட கருணையால், பிழைகள் செய்யாமல் இருக்கவே கருதுகிறேன். உன் திருவடிகளை மட்டுமே விரும்புகிறேன். இதைத் தவிர வேறு எந்தப் பிழையும் நான் அறியேன்; இதை உன் திருவுளம் அறியும்.
பாடல் 5
அப்பணி முடிஎன் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பொருள்: கங்கையைத் தாங்கிய சடையை உடைய அப்பனே! ஆனந்த நடனம் புரியும் அரசே! இந்த பூமியில் எனக்கு அறிவு வந்தது முதல் இன்று வரை, நீ எனக்கு என்ன பணியை இட்டாயோ, அதை மட்டுமே செய்தேன். என் விருப்பப்படி நான் எதையும் செய்யவில்லை. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நான் செய்த அனைத்தையும் உன் திருவுளம் அறியும்.
- அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி -

குணங்குடி மஸ்தான் சாகிபு - பராபரக்கண்ணி

பராபரக்கண்ணி
குணங்குடி மஸ்தான் சாகிபு

குணங்குடி மஸ்தான் சாகிபு (1792–1838) தமிழ்நாட்டின் சிறந்த இஸ்லாமிய இறைஞானி மற்றும் சித்த புருஷர் ஆவார். இவர் உலகப் பற்றைத் துறந்து, வடசென்னையில் (ராயபுரம், தொண்டையார்பேட்டை) தவவாழ்க்கை மேற்கொண்டு, பல அற்புதங்களை நிகழ்த்தியவர். இவர் இயற்றிய "பராபரக்கண்ணி" இறைவனை நோக்கி வேண்டும் உன்னதமான பாடல்களைக் கொண்டது.


வாழ்க்கைக் குறிப்பு:

பிறப்பு: 1792-ம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு அருகிலுள்ள "குணங்குடி" என்னும் ஊர்.
இயற்பெயர்: சுல்தான் அப்துல்காதிர்.
துறவு: தனது 17-வது வயதில் இல்லற வாழ்வை வெறுத்துத் துறவறம் பூண்டார்.
தவம்: வடசென்னையின் ராயபுரம் பகுதியில் "லெப்பைக் காடு" என்ற முட்புதர்கள் நிறைந்த இடத்தில் தவவாழ்க்கை மேற்கொண்டார். இவரது சித்துக்களைக் கண்ட மக்கள் இவரை "மஸ்தான்" (இறை போதையில் திளைப்பவர்) என்றும், "தொண்டியார்" என்றும் அழைத்தனர். இவர் வாழ்ந்த பகுதியே இன்று "தண்டையார்பேட்டை" எனப்படுகிறது.
மறைவு: 1838-ம் ஆண்டு (வயது 47).

படைப்புகள்:

  • அகத்தீசர் சதகம்
  • ஆனந்தக் களிப்பு
  • நந்தீசர் சதகம்
  • நிராமயக்கண்ணி
  • பராபரக்கண்ணி
  • மனோன்மணிக்கண்ணி

பராபரக்கண்ணி - பாடல்கள் & விளக்கம்

பாடல் 1
அண்ட புவனமென்று ஆடுதிருக் கூத்தினையான் கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே! அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நான் கண்டு மகிழும்படி நீ காட்ட வேண்டும் பராபரமே!
பாடல் 2
ஆதியாய் ஆண்டவனாய் அஃபாதுவாய் நின்றபெருஞ் சோதியாய் நின்மலமாய்ச் சூழ்ந்தாய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
உலகத்து முதல்வனாய், என்னை ஆட்கொண்டு அருளினவனாய், அவ்வப் பொருளாய் நின்ற பெருஞ்சோதியே! குறைவில்லாதவனாய் எங்கும் சூழ்ந்திருக்கின்றவனே! பராபரமே!
பாடல் 3
வேத மறைப் பொருளை வேதாந்தத் துட்கருவை ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
வேதத்தின் மறைப்பொருளாகவும், வேதாந்தத்தின் உட்கருத்தாகவும் இருக்கின்ற உன்னை ஓதி அறிந்தவர்கள் யாருமில்லை பராபரமே!
பாடல் 4
அண்ட புவனம் உடன்ஆகாச மென்றுசும்பிக் கொண்டமெஞ் ஞானக் கூத்தே பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
அண்டங்களில் உள்ளோரும், உலகத்தில் உள்ளோரும், வானுலகில் உள்ளோரும் துதித்துக் கொண்டாடுகின்ற உண்மை ஞானக்கூத்தே! பராபரமே!
பாடல் 5
நாவாற் புகழ்கெட்டா நாயகனே நாதாந்தம் பூவாய் மலர்ந்திருக்கப் பூத்தாய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
நாவினால் புகழ்வதற்கு எட்டாத நாயகனாய் இருக்கின்றவனே! நாதாந்த பூவாய் மலர்ந்திருக்கின்றவனே! பராபரமே!
பாடல் 6
பேராற் பெரிய பெரும்பொருளே பேதைதனக்கு யாரிருந்து பலனாமோ பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
பேரால் புகழ் பெற்ற பெரிய பரம்பொருளே! ஏழையாகிய எனக்கு (நீயன்றி) யார் இருந்தும் எந்தப் பயனும் இல்லை பராபரமே!
பாடல் 7
மாறாய நற்கருணை மாவருள்சித் தித்திடவே பாராயோ வையா பகராய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
ஐயனே! எனக்கு உம்முடைய உயர்ந்த திருவருளானது கைகூடும்படி திருக்கண் திறந்து அருள வேண்டும். பராபரமே!
பாடல் 8
ஆனாலும் உன்பாதம் யாசித் திருப்பதற்குத் தானா யிரங்கியருள் தாராய் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எந்தச் சூழலில் நான் இருந்தாலும் உம்முடைய திருவடிகளை யாசித்துக் கொண்டே இருப்பதற்குக் கிருபையோடு அருள் செய்ய வேண்டும். பராபரமே!
பாடல் 9
நாதாந்த மூல நடுவீட்டுக் குள்ளிருக்கு மாதவத்தோர்க் கான மருவே பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
நாத தத்துவத்திற்கு அந்தமான மூல வீட்டினுள்ளே எழுந்தருளி இருக்கின்ற தவம் உடையவர்களுக்குத் தோழனாக விளங்குகின்றாய். பராபரமே!
பாடல் 10
உடலுக்கு உயிரேஎன் உள்ளமே உன்பதத்தைக் கடலும்மலை யும்திரிந்தும் காணேன் பராபரமே!
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
என் உடலில் இருக்கின்ற உயிரே! என் மனமே! உன் திருவடிகளைத் தேடிக் கடலிலும், மலைகளிலும் திரிந்தும் காண முடியவில்லை. பராபரமே!
பாடல் 11
மந்திரத்துக்கு எட்டா மறைப் பொருளே மன்னுயிரே சேர்ந்த எழு தோற்றத்தின் சித்தே பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எந்தவிதமான மந்திரத்திற்கும் எட்டா மறைபொருளாக விளங்குபவனே! நிலை பெற்ற உயிராக இருப்பவனே! உலகத்தின் எழுவகைப் பிறவிகளிலும் நிறைந்த சித்துப் பொருளே! பராபரமே!
பாடல் 12
தனியேனுக்கு ஆதரவு தாரணியில் இல்லாமல் அனியாயம் ஆவதும் உனக்கு அழகோ பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
இந்த உலகத்தில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக இருக்கின்ற நான், உன் அருளைப் பெறாமல் அநியாயமாய் அழிவது உனக்கு அழகாகுமோ! பராபரமே!
பாடல் 13
ஓடித் திரிந்து அலைந்து உன்பாதம் காணாமல் வாடிக் கலங்குகிறேன் வராய் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எங்கெங்கோ ஓடித் திரிந்து அலைந்து உன் திருவடியைக் காணாமல் வாடுகின்றேன். நீ வந்து எனக்கு அருள் செய்ய வேண்டும். பராபரமே!
பாடல் 14
தூராதி தூரம் தொலைத்து மதி உன் பாதம் பாராத பாவத்தாற் பயந்தேன் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
கடக்க வேண்டிய தூரங்களை எல்லாம் கடந்து, என் அறிவினால் உன் திருவடியை நோக்காத பாவத்தினால் அச்சம் கொண்டேன். பராபரமே!
பாடல் 15
தேடக் கிடையாத் திரவியமே தேன் கடலே ஈடுனக்கு உண்டோ இறையே பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
தேடியும் கிடைக்காத திரவியம் போன்றவன் நீ! உன்னை நம்பியிருக்கும் அடியவர்களுக்கு தேன் கடலாக விளங்குபவன் நீ! இவ்வுலகில் உனக்கு ஈடாக ஒருவரும் இல்லை இறைவனே! பராபரமே!
பாடல் 16
அரிய பெரும்பொருளே அன்பாய் ஒருவார்த்தை பரிபூரணமாய்ப் பகராய் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
அருமையான பெரும்பரம்பொருளே! அன்போடு என்னிடம் ஒரு வார்த்தை பேசினால் மகிழ்வேன்! பராபரமே!
பாடல் 17
ஐயோஎனக்கு உதவும் ஆதரவை விட்டுவிட்டுத் தையலரைத் தேடித் தவித்தேன் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
அந்தோ! அடியேனுக்கு உதவி செய்கின்ற உன்னை வணங்காமல், பெண்களைத் தேடிச் சென்று பரிதவித்தேன்! பராபரமே!
பாடல் 18
எத்திசையும் நோக்கி விசையாத் திருக் கூத்தாய் வித்தை விளையாட்டு விளைப்பாய் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எந்தத் திசையைப் பார்த்தாலும் பொருந்தாத திருக்கூத்தாய் வித்தை செய்யும் விளையாட்டைச் செய்கின்றவனே! பராபரமே!
பாடல் 19
எப்பொழுது முன்பதத்தில் என் கருத்தே பெய்துதலுக்கு இப்பொழுதே கைப்பிடித்தான் இறையே பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
எக்காலத்திலும் உன்னுடைய திருவடிகளில் என்னுடைய மனம் பதிவடைய இப்போதே அடியேனைக் கைப்பிடித்து அருள வேண்டும்! பராபரமே!
பாடல் 20
வாதுக் கடாவரும் வம்பரைப்போல் தோஷி மனம் ஏதுக் கடாவதியான் எளியேன் பராபரமே
விளக்கம் காணச் சொடுக்கவும் 👇
துன்பம் செய்யும் தொழில்களைச் செய்கின்ற வீண் வம்புக்காரர்களைப் போல என் மனம் எதை விரும்புகிறது? எதை நாடுகின்றது எனத் தெரியவில்லை. நான் எளியவனாக இருக்கின்றேன். நீ அருள் செய்வாய்! பராபரமே!
- பராபரக்கண்ணி நிறைவுற்றது -

நின்ற திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம்

ஆறாம் திருமுறை - திருத்தாண்டகம்
(நின்ற திருத்தாண்டகம் - பாடல்கள் 1 முதல் 5 வரை)
அருளியவர்: திருநாவுக்கரசர் (அப்பர்)
பண்: திருத்தாண்டகம்
நாடு/தலம்: பொது
ஓதுவார்: மதுரை முத்துக்குமரன்

திருநாவுக்கரசர் பெருமான் அருளிய ஆறாம் திருமுறையில், "நின்ற திருத்தாண்டகம்" என்பது இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையை (சர்வ வியாபி) விளக்கும் ஒப்பற்ற பதிகமாகும். இதில் உள்ள முதல் ஐந்து பாடல்களையும், அதன் விளக்கங்களையும் இங்கே காண்போம்.


பாடல் 1: அட்டமூர்த்தியாக நின்றவர்
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

எம்பெருமான் பெரிய நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களாகவும்; சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா (இயமானன்) ஆகிய எட்டு வடிவங்களாகவும் (அட்டமூர்த்தி) விளங்குகிறார்.

அவரே உலகில் உள்ள நன்மையாகவும், தீமையாகவும் (குற்றம்) உள்ளார். பெண்ணாகவும், ஆணாகவும், மற்றவர் உருவமாகவும், தம் உருவமாகவும் அவரே நிற்கிறார். நேற்று, இன்று, நாளை என்னும் முக்காலங்களாகவும் ஆகி, சிவந்த சடையை உடைய அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 2: அண்ட சராசரமாய் நின்றவர்
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

மண், விண், மலை என இயற்கையாகவும்; வயிரம், மாணிக்கம் என நவரத்தினங்களாகவும்; கண்ணாகவும், அக்கண்ணின் மணியாகவும் (பார்வை) ஆனவர்.

கலைகளாகவும், அக்கலைகள் உணர்த்தும் ஞானமாகவும்; பெண்ணாகவும், அப்பெண்ணுக்குத் துணையான ஆணாகவும்; பிரளய காலத்திற்கும் அப்பால் உள்ள அண்டமாகவும்; எண்ணாகவும், எழுத்துமாகவும், எழும் ஜோதியாகவும் எம் அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 3: இயற்கையும் உயிரினுமாய் நின்றவர்
கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப் புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெல்லாகி நிலனாகி நீரு மாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

கல்லாகவும், களிமண் நிலமாகவும், காடாகவும்; காவிரியாகவும், கால்வாயாகவும், உப்பங்கழியாகவும் ஆனவர்.

புல், புதர், பூண்டு எனத் தாவரங்களாகவும்; திரிபுரமாகவும், அப்புரத்தை எரித்தவனாகவும்; சொல்லாகவும், அச்சொல்லின் பொருளாகவும்; எங்கும் சுற்றி வரும் காற்றாகவும்; நெல், நிலம், நீர் என உயிர்காக்கும் பொருள்களாகவும், நெடிய சுடராகவும் அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 4: காலமும் கூற்றுவனாய் நின்றவர்
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

காற்று, மழைமேகம், மழைகாலம், பனிக்காலம், வெயில்காலம் என்னும் முக்காலங்கள்; கனவு, நனவு (விழிப்பு), இரவு (கங்குல்) என எல்லாம் ஆனவர்.

உயிரைக் கவரும் எமன் (கூற்று) ஆகவும், அந்த எமனை உதைத்தவனாகவும்; ஒலிக்கும் கடலாகவும், அக்கடலின் அரசனாகவும்; திருநீறு அணிந்த மேனியனாகவும்; நீண்ட ஆகாயமாகவும், அதன் உச்சியாகவும்; காளையை வாகனமாகக் கொண்ட செல்வனாகவும் அடிகள் நின்றவாறு என்னே!

பாடல் 5: உறவும் சுவையுமாய் நின்றவர்
தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
விளக்கம் (பொருள்) காண இங்கே சொடுக்கவும் 👇

விளக்கம்:

தீ, நீர் மற்றும் வலிமை (திண்மை) ஆகவும்; திசைகளாகவும், அத்திசைகளின் காவல்தெய்வங்களாகவும் ஆனவர். தாயும், தந்தையும், நாம் சார்ந்து இருக்கும் துணையும் அவரே.

நட்சத்திரம், சூரியன், சந்திரன் ஆகவும்; காய், பழம் மற்றும் பழத்தில் உள்ள சுவை (இரதம்) ஆகவும், அச்சுவையை நுகர்பவனாகவும் தானே ஆகி; நீயாகவும், நானாகவும், நேர்மையாகவும் அடிகள் நின்றவாறு என்னே!

குறிப்பு: இப்பாடல்கள் அனைத்தும் இறைவன் "எல்லாம் தானாகி" நிற்கும் அத்வைத நிலையையும், சர்வ வியாபித் தன்மையையும் உணர்த்துகின்றன.

இப்பாடல்களைக் கேட்க:

- திருச்சிற்றம்பலம் -

நாலடியார் - மெய்ம்மை

நாலடியார்

அறத்துப்பால்: துறவறவியல்
பன்னிரண்டாம் அதிகாரம்: மெய்ம்மை
[அஃதாவது, உண்மை கூறுதலாம்]

மெய்ம்மை என்பது உள்ளதை உள்ளவாறு கூறுதல் ஆகும். துறவறவியலில் பொய்ாமை மிக முக்கியமான அறமாகும். நாலடியார் கூறும் மெய்ம்மை அதிகாரத்தின் 10 பாடல்களையும், அதற்கான விளக்கங்களையும் இங்கே காண்போம்.


பாடல்: 111
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று வையத்து இயற்கை - நசைஅழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி கொன்றாரில் குற்றம் உடைத்து.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: நிரை தொடீஇ = வரிசையாக அணிந்த வளையல்களை உடையவளே!
இசையா = கிடையாத,
ஒரு பொருள் = ஒரு பொருளை,
இல் என்றல் = இல்லையென்று சொல்லல்,
யார்க்கும் = யாவர்க்கும்,
வசை அன்று = குற்றமல்ல,
வையத்து = பூமியில்,
இயற்கை = இயல்பாகும்;
நசை = ஆசை,
அழுங்க = கெட,
நின்று ஓடி = நெடுங்காலம் அலையவைத்து,
பொய்த்தல் = (இறுதியில்) இல்லை எனப் பொய்சொல்லல்,
செய் நன்றி கொன்றாரில் = பிறர் செய்த உதவியை மறந்தவரைப் பார்க்கிலும்,
குற்றம் உடைத்து = குற்றம் உடையதாம்.
கருத்துரை: பெண்ணே! ஒருவரைப் பலகால் திரியவைத்து இல்லையென்று சொல்லல் செய்ந்நன்றி அழித்ததிலும் குற்றமுடையதாம்.
விசேடவுரை: பொய்த்தல் - எழுவாய், குற்றமுடைத்து - பயனிலை.
பாடல்: 112
தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலுங் குன்றல் இலராவர் - அக்காரம் யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தக்காரும் = பெரியோரும்,
தக்கவர் அல்லாரும் = சிறியோரும்,
தம் நீர்மை = தமது குணங்களில்,
எ காலும் = எந்நாளும்,
குன்றல் இலர் ஆவர் = குறைதல் இல்லாதவராவர்;
அக்காரம் = வெல்லத்தை,
யாவர் தின்னினும் = எவர் தின்றாலும்,
கையாது = கசக்காது;
வேம்பு = வேம்பை,
தேவர் தின்னினும் = தேவர்கள் தின்றாலும்,
கைக்கும் = கசக்கும்.
கருத்துரை: பெரியோரும் சிறியோரும் தங்கள் குணங்களில் குறைவுபடார்கள் (மாறமாட்டார்கள்).
விசேடவுரை: குன்றல் - எழுவாய், இலராவர் - பயனிலை; ஆம், உம், ஏ - அசைகள்.
பாடல்: 113
காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்புடையேம் என்பார் சிலர்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: ஈர் குன்றம் நாட = குளிர்ந்த மலையையும் நாட்டையும் உடைய பாண்டியனே!,
ஒருவர் கால் ஆடு போழ்தில் = (செல்வமுற்று) சஞ்சரிக்கும் காலத்து,
கழி கிளைஞர் = மிகுந்த உறவினர்,
வானத்து மேல் ஆடு மீனில் = ஆகாயத்து மேலே சஞ்சரிக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கிலும்,
பலர் ஆவர் = அநேகராவார்,
ஏலா இடர் = பொருந்தாத துன்பங்களை,
உற்றக்கால் = அடைந்தால்,
தொடர்பு உடையோம் என்பார் = சம்பந்தம் உடையோம் என்று சொல்வார்கள்,
சிலர் = சிலர் மாத்திரம்.
கருத்துரை: பாண்டியனே! ஒருவர் செல்வச் செழிப்போடு திரியுங் காலத்துப் பலபேர் உறவினராவார்கள்; அவர் துன்பமடைந்த காலத்துச் சிலபேர் உறவினராவார்கள்.
விசேடவுரை: கிளைஞர் - எழுவாய், ஆவர் - பயனிலை; சிலர் - எழுவாய், என்பார் - பயனிலை.
பாடல்: 114
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவணது எய்த இருதலையும் - எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து அடுவது போலும் துயர்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: வடு இலா வையத்து = குற்றமில்லாத பூமியில்,
மன்னிய மூன்றில் = நிலைபெற்ற (அறம், பொருள், இன்பமென்னும்) மூன்றனுள்,
நடுவணது எய்த = நடுவாகிய பொருளைப் பொருந்த,
இருதலையும் = (முதல் மற்றும் கடையான) தருமமும் காமமும்,
எய்தும் = அடையும்;
நடுவணது எய்தாதான் = பொருளை அடையாதவன்,
உலை பெய்து = உலையில் போட்டு,
அடுவது போலும் துயர் = (ஆமையைக்) கொல்லுதல் போன்ற துன்பத்தை,
எய்தும் = அடைவான்.
கருத்துரை: பொருளை அடைந்தவன் புண்ணியத்தையும், இன்பத்தையும் அடைவான்; பொருளை அடையாதவன் துன்பத்தை அடைவான்.
பாடல்: 115
நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம் கல்லாரே ஆயினுஞ் செல்வர்வாய்ச் - சொற்செல்லும் புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: நல் ஆவின் கன்று ஆயின் = நல்ல பசுவின் கன்றானால்,
நாகும் விலை பெறூஉம் = இளங்கன்றும் விலை பெறும்;
கல்லாரே ஆயினும் = கல்லாதவரானாலும்,
செல்வர் வாய் சொல் செல்லும் = ஐசுவரியவான்கள் வாக்கிற் பிறக்கும் சொற்கள் செல்லும்;
நல்கூர்ந்தார் சொல் = வறியவர் வாக்கிற் பிறக்கும் சொற்கள்,
புல் ஈரம் போழ்தின் = அற்ப ஈரம் பொருந்திய காலத்தில்,
உழவே போல் = உழும் உழுபடைச் சால் போல,
மீது ஆடி செல்லா ஆம் = மேலாடிச் செல்ல மாட்டாவாம் (ஆழப் பதியாது).
கருத்துரை: செல்வவான்கள் சொற்கள் செல்லும் (எடுபடும்), தரித்திரர் சொற்கள் செல்லாவாம்.
பாடல்: 116
இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் மடங்காதார் என்றும் மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தடம் கண்ணாய் = விசாலம் பொருந்திய கண்களையுடையவளே!
உப்பொடு நெய் பால் தயிர் காயம் = உப்புடன் நெய்யும் பாலும் தயிரும் பல காயங்களும்,
பெய்து அடினும் = இட்டு சமைத்தாலும்,
பேய்ச்சுரையின் காய் கைப்பு அறா = பேய்ச்சுரைக்காயின் கசப்பு நீங்காது;
(அதுபோல), மெய் ஞானம் = உண்மை ஞான நூல்களை,
என்றும் இடம்பட கற்பினும் = எந்நாளும் விரிவாகக் கற்றாலும்,
அடங்காதார் என்றும் அடங்கார் = அடங்காதவர்கள் எந்நாளும் அடங்கார்.
கருத்துரை: பெண்ணே! அடங்காதவர்கள் எக்காலமும் அடங்கார்.
அவிநயர் சூத்திரம்:
“குறட்பா விரண்டவை நால்வகைத் தொடையாய்
முதற்பா தனிச்சொலி னடிமூஉ யிருவகை
விகற்பி னடப்பது நேரிசை வெண்பா.”
- இஃது இவ்விதியால் நேரிசை வெண்பா.

பாடல்: 117
தம்மை இகழ்வாரைத் தாம்அவரின் முன்இகழ்க என்னை? அவரொடு பட்டது - புன்னை விறல்பூ கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: புன்னை விறல் பூ கமழ் கானல் = புன்னையினது மிக்க பூக்களின் மணம் கமழ்கின்ற சோலையையும்,
வீங்கு நீர் சேர்ப்ப = நிறைந்த நீரினையும் கடற்கரையையும் உடைய பாண்டியனே!
உறல் பால யார்க்கும் உறும் = வருபவை யாவருக்கும் வருமாதலால்,
தம்மை இகழ்வாரை = தங்களை இகழ்பவர்களை,
தாம் அவரின்முன் இகழ்க = தாங்கள் அவர்களின் முன்பாக இகழக்கடவர்கள்,
அவரோடு பட்டது என்னை? = அவர்கள் பின்னால் இகழப்பட்ட தன்மை என்ன?
கருத்துரை: பாண்டியனே! தங்களை இகழ்ந்தவர்கள் முன்பாகத் தாங்கள் இகழக்கடவர்கள்! அவர்கள் பின் இகழ்வதென்ன?
பாடல்: 118
ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகும் அறநெறி ஆபோல் உருவு பலகொளல் ஈங்கு.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: ஆ வேறு உருவின ஆயினும் = பசுக்கள் வேறுபட்ட உருவங்களை உடையனவாயினும்,
ஆ பயந்த பால் = அப்பசுக்கள் கொடுத்த பாலெல்லாம்,
வேறு உருவின அல்ல ஆம் = வேறுபட்ட உருவங்களையுடையன அல்லனவாம் (ஒரே வெண்மை);
பால் போல் = அப் பால் போல,
அறம் நெறி = அறத்தினது வழி,
ஒரு தன்மைத்து ஆகும் = ஒரு தன்மையையுடையது ஆம்,
ஆ போல் ஈங்கு = அப் பசுக்கள் போல ஈங்கு உண்டாகிய சமயங்களும்,
பல உருவு கொளல் = பல வேடங்களைக் கொண்டிருக்கும்.
கருத்துரை: பசுக்களெல்லாம் வேறுருவானாலும் பாலெல்லாம் ஓருருவே; அதுபோல, சமயங்கள் பலவாயினும் அறநெறி ஒருவழியாகும்.
அகத்தியச் சூத்திரம்:
“முதலு மூன்று நாற்சீ ராகியும்
இரண்டு மீறு முச்சீ ராகியும்
தனிச்சொற் சீர்கொளு நேரிசை வெண்பா.”

பாடல்: 119
யாஅர் உலகத்தோர் சொல்லில்லார் தேருங்கால் யாஅர் உபாயத்தின் வாழாதார் - யாஅர் இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர் கடைபோகச் செல்வம்உய்த் தார்.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: தேரும்கால் = ஆராயுமிடத்து,
உலகத்து ஓர் சொல் இல்லார் யார் = உலகில் ஓர் நிந்தைச் சொல்லை இல்லாதவர் யாவர்?,
உபாயத்தின் வாழாதார் யார் = (முற்பிறப்பில் தவஞ்செய்த) உபாயத்தால் (இப்பிறப்பில்) வாழாதார் யாவர்?,
இடை ஆக இன்னாதது எய்தாதார் யார் = இதற்கு முன் துன்பத்தை அடையாதவர் யாவர்?,
கடைபோக செல்வம் உய்த்தார் யார் = முடிவளவும் செல்வத்தை செலுத்தினவர் யார்தாம்? (ஒருவருமில்லை).
கருத்துரை: உலகத்தில் ஒரு நிந்தையேனும் அடையாதார் யார்? வாழாதார் யார்? யார் துன்பம் அடையாதார்? யார் முற்றுஞ் செல்வம் பெற்றார்? (யாரும் இல்லை).
பாடல்: 120
தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று யாங்கணும் தேரில் பிறிதில்லை - ஆங்குத்தாம் போற்றிப் புனைந்த உடம்பும் பயன்இன்றே கூற்றம் கொண்டு ஓடும் பொழுது.
விளக்கம் & பதவுரை காணச் சொடுக்கவும் 👇
பதவுரை: கூற்றம் = கூற்றுவன் (எமன்),
கொண்டு ஓடும்பொழுது = தமது உயிரைக் கொண்டு போங் காலத்தில்,
ஆங்கு தாம் போற்றி புனைந்த உடம்பும் = அவ்விடத்து தாங்கள் காத்து அழகுசெய்த சரீரமும்,
பயன் இன்றி = பிரயோசனம் இல்லை;
யாங்கணும் தேரில் = எக்காலத்தாயினும் ஆராய்ந்தால்,
தாம் செய் வினை அல்லால் = தாங்கள் செய்த (நல்வினை தீவினை) இருவினையும் அல்லாது,
தம்மொடு செல்வது = தம்முடனே கூடப்போவது,
பிறிது இல்லை = வேறொன்றுமில்லை.
கருத்துரை: தாங்கள் செய்த நல்வினை தீவினையே தங்களோடுகூட வரும்; உடம்பு வராது.
விசேடவுரை: வினை - எழுவாய், பிறிதில்லை - பயனிலை.
- மெய்ம்மை அதிகாரம் முற்றும் -

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...