எட்டுத்தொகை நூல்கள்: ஓர் அறிமுகம்
சங்க இலக்கியத்தின் இரு கண்களில் ஒன்று எட்டுத்தொகை. இவை (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றின் வகைப்பாடு இதோ:
- 1. நற்றிணை
- 2. குறுந்தொகை
- 3. அகநானூறு
- 4. ஐங்குறுநூறு
- 5. கலித்தொகை
- 1. புறநானூறு
- 2. பதிற்றுப்பத்து
- 1. பரிபாடல்
1. நற்றிணை
அமைப்பு: 9 முதல் 12 அடிகள் கொண்ட 400 அகவல் பாடல்கள். (விதிவிலக்கு: 110, 379 பாடல்கள் 13 அடிகள்).
கடவுள் வாழ்த்து: பாரதம் பாடிய பெருந்தேவனார் (திருமால்).
தொகுப்பித்தவர்: பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.
நற்றிணை 'நல்+திணை' எனப் போற்றப்படுகிறது. இதில் 175 புலவர்கள் பாடியுள்ளனர். உண்மைக்காதல் பிறவிதோறும் தொடரும் என்பதை நற்றிணை மிக அழகாக எடுத்துரைக்கிறது.
பிறப்புப் பிறிதாகுவ தாயின்
மறக்குவென் கொல்என் காதலன் எனவே"
செல்வச் செழிப்பில் பிறந்த தலைவி, வறுமையுற்ற கணவனுடன் வாழ்ந்தாலும், தன் தந்தையின் உதவியை எதிர்பாராமல் வாழ்வது தமிழ்ப் பெண்களின் தன்மானத்தைச் சுட்டுகிறது.
2. குறுந்தொகை
அமைப்பு: 4 முதல் 8 அடிகள் கொண்ட 400 பாடல்கள்.
தொகுத்தவர்: பூரிக்கோ.
சிறப்பு: உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே"
மேலும், "வினையே ஆடவர்க்கு உயிரே" (135) என்று ஆடவரின் கடமையையும் எடுத்துரைக்கிறது.
3. ஐங்குறுநூறு
அமைப்பு: 3 முதல் 6 அடிகள். 500 பாடல்கள்.
தொகுத்தவர்: கூடலூர்கிழார் | தொகுப்பித்தவர்: யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
| திணை | பாடிய புலவர் |
|---|---|
| மருதம் | ஓரம்போகியார் |
| நெய்தல் | அம்மூவனார் |
| குறிஞ்சி | கபிலர் |
| பாலை | ஓதலாந்தையார் |
| முல்லை | பேயனார் |
4. அகநானூறு
அமைப்பு: 13 முதல் 31 அடிகள். 'நெடுந்தொகை' என்றும் அழைக்கப்படும்.
தொகுப்பித்தவன்: உக்கிரப்பெருவழுதி.
பாடல்களின் எண்ணை வைத்துத் திணையை அறியும் புதுமையான வைப்பு முறை கொண்டது:
- ஒற்றைப்படை எண்கள் (1, 3, 5...) - பாலை
- 2, 8 என முடிப்பவை - குறிஞ்சி
- 4 என முடிப்பவை - முல்லை
- 6 என முடிப்பவை - மருதம்
- 10, 20 என முடிப்பவை - நெய்தல்
5. கலித்தொகை
அமைப்பு: கலிப்பா வகையால் ஆன 150 பாடல்கள்.
தொகுத்தவர்: நல்லந்துவனார்.
ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) பற்றியும், கைக்கிளை, பெருந்திணை பற்றியும் பேசும் ஒரே எட்டுத்தொகை நூல் இதுவே.
இன்பமும் உண்டோ எமக்கு?"
6. புறநானூறு
சிறப்பு: தமிழரின் வாழ்வியல் பெட்டகம்.
மீட்டுத் தந்தவர்: உ.வே.சா.
7. பதிற்றுப்பத்து
சேர மன்னர்கள் பதின்மர் பற்றி பாடப்பட்ட நூல். முதல் மற்றும் இறுதிப் பத்துக்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய 80 பாடல்களே உள்ளன.
| பத்து | மன்னன் | புலவர் |
|---|---|---|
| 2-ம் பத்து | இமயவரம்பன் | குமட்டூர்க் கண்ணனார் |
| 3-ம் பத்து | பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | பாலைக் கௌதமனார் |
| 5-ம் பத்து | செங்குட்டுவன் | பரணர் |
| 7-ம் பத்து | செல்வக் கடுங்கோ வாழியாதன் | கபிலர் |
8. பரிபாடல்
சிறப்பு: இசையோடு பாடப்பட்ட நூல். அகமும் புறமும் கலந்தது.
திருமால், முருகன், வையை ஆறு, மதுரை நகர் ஆகியவற்றைப் பற்றிய பாடல்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாடலுக்கும் பண் வகுத்தவர் பெயரும், இசையமைத்தவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🧠 தன் மதிப்பீடு: வினாடி வினா
கீழே உள்ள வினாக்களுக்கு விடையளித்துவிட்டு, சரியான விடையைக் காண 'விடையைக் காட்டு' என்பதை அழுத்தவும்.
1. எட்டுத்தொகை நூல்களுள் மூன்றடிகள் (சிற்றெல்லை) கொண்ட அகவல் பாடல் இடம் பெற்ற நூல் எது?
விடையைக் காட்டு
2. எட்டுத்தொகையுள் முருகவேள் வணக்கத்தை வாழ்த்துச் செய்யுளாகப் பெற்ற நூல் எது?
விடையைக் காட்டு
3. 'குப்பைக்கோழியார்' பாடல் இடம்பெற்ற நூல் எது?
விடையைக் காட்டு
4. ஐங்குறுநூற்றைத் தொகுத்த சான்றோர் யார்?
விடையைக் காட்டு
5. கலித்தொகையைத் தொகுத்த புலவர் யார்?
விடையைக் காட்டு
- நன்றி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன