சனி, 25 ஏப்ரல், 2026

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்துப் பாடல் | இளங்கோவடிகள்

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்துப் பாடல் | இளங்கோவடிகள்
🏵️ சிலப்பதிகாரம் · மங்கல வாழ்த்துப் பாடல்
இளங்கோவடிகள் அருளிய தமிழ்க் காப்பியம்
📖 சிந்தியல் வெண்பா & மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா 🎭 68 அடிகள் 🌸 கண்ணகி – கோவலன் மணவாழ்த்து

🌿 1. சிந்தியல் வெண்பாக்கள் – இயற்கை வாழ்த்து

பாடல் 1 ✨ திங்கள் வாழ்த்து
📜 சீர் பிரிக்காத அடிகள்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ்
வங்கண் உலகளித்தலான்
🔍 சீர் பிரித்த அடிகள் (சொற்பிரிப்பு)
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்தலான்
பாடல் 2 ☀️ ஞாயிறு வாழ்த்து
📜 சீர் பிரிக்காத அடிகள்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரிதலான்
🔍 சீர் பிரித்த அடிகள்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்
பாடல் 3 🌧️ மாமழை வாழ்த்து
📜 சீர் பிரிக்காத அடிகள்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேனின்று தான் சுரத்தலான்
🔍 சீர் பிரித்த அடிகள்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
பாடல் 4 🏯 பூம்புகார் வாழ்த்து
📜 சீர் பிரிக்காத அடிகள்
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுகலான்
🔍 சீர் பிரித்த அடிகள்
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்

🎋 2. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா – புகார், கண்ணகி, கோவலன், திருமணம்

பாடல் 5 🏔️ பொதியில் · இமயம் · புகார் சிறப்பு
📜 சீர் பிரிக்காத அடிகள்
ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பதல்லதை
ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே
🔍 சொற்பிரிப்பு
ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே
பாடல் 6 🐉 நாகநாடும் புகாரும்
📜 சீர் பிரிக்காத அடிகள்
அதனால்,
நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
🔍 சொற்பிரிப்பு
அதனால்,
நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு
போகம் நீள் புகழ் மன்னும் புகார்நகர் அது தன்னில்
பாடல் 7 💎 கண்ணகியின் குலமும் நலமும்
📜 சீர் பிரிக்காத அடிகள்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண்டு அகவையாள்
அவளும்தான்
🔍 சொற்பிரிப்பு
மாகவான் நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகை வான் கொடி அன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
அவளும் தான்
பாடல் 8 🌟 கண்ணகி – திருவுருவும் பெருமையும்
📜 சீர் பிரிக்காத அடிகள்
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென்பாள் மன்னோ
🔍 சொற்பிரிப்பு
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
பாடல் 9 👑 கோவலனது பெருநலம் (செல்வம்)
📜 சீர் பிரிக்காத அடிகள்
ஆங்கு,
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக்குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு நிதிக்கிழவன் மகன் ஈரெட்டாண்டு அகவையான்
அவனும்தான்
🔍 சொற்பிரிப்பு
ஆங்கு,
பெரு நிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு நிதிக் கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான்
அவனும் தான்
பாடல் 10 🎶 கோவலன் – புகழும் சிறப்பும்
📜 சீர் பிரிக்காத அடிகள்
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலனென்பான் மன்னோ
🔍 சொற்பிரிப்பு
மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம்
பண் தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கிக் காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ
பாடல் 11 💒 திருமணச் செய்தி அறிவித்தல்
📜 சீர் பிரிக்காத அடிகள்
அவரை,
இரு பெருங்குரவரும் ஒருபெரு நாளால்
மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்
🔍 சொற்பிரிப்பு
அவரை,
இரு பெரும் குரவரும் ஒரு பெரு நாளால்
மண அணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ
மா நகர்க்கு ஈந்தார் மணம்
பாடல் 12 🥁 முரசு, பணிலம், மங்கல ஒலிகள்
📜 சீர் பிரிக்காத அடிகள்
அவ்வழி,
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
அரசெழுந்தது ஒர்படியெழுந்தன அகலுள் மங்கல அணியெழுந்தது
🔍 சொற்பிரிப்பு
அவ்வழி,
முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன, முறை எழுந்தன பணிலம், வெண்குடை
அரசு எழுந்தது, ஒர்படி எழுந்தன, அகலுள் மங்கல அணி எழுந்தது
பாடல் 13 🪷 நித்திலப் பூம்பந்தர் & திருமண மண்டபம்
📜 சீர் பிரிக்காத அடிகள்
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க்கீழ்
வானூர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
🔍 சொற்பிரிப்பு
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து
நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க் கீழ்
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
பாடல் 14 🔥 மாமுது பார்ப்பான் மறைவழி – தீவலம்
📜 சீர் பிரிக்காத அடிகள்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார் கண்நோன்பு என்னை
🔍 சொற்பிரிப்பு
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
பாடல் 15 🌸 மங்கல வாழ்த்து – மகளிர் அணிவகுப்பு (முதற்பகுதி)
📜 சீர் பிரிக்காத அடிகள்
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
🔍 சொற்பிரிப்பு
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
பாடல் 16 🕊️ அருந்ததி அன்னாளை மங்கல அமளியில் ஏற்றுதல்
📜 சீர் பிரிக்காத அடிகள்
முளைக்குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறுக எனவேத்திச் சில்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்
🔍 சொற்பிரிப்பு
முளை குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார்
காதலன் பிரியாமல் கவவுக் கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்திச் சில மலர் கொடு தூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார்
பாடல் 17 ⚔️ செம்பியன் – ஒருதனி ஆழி உருட்டுவோன்
📜 சீர் பிரிக்காத அடிகள்
தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே
🔍 சொற்பிரிப்பு
தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன் கோட்டு உழையதா எப்பாலும்
செரு மிகு சின வேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

கம்பராமாயணம் – கங்கைப் படலம் (பாடல் 1-27)

கம்பராமாயணம் - கங்கைப் படலம் (1-27) | கம்பர் 🏞️ கம்பராமாயணம் - கங்கைப் படலம் கம்பர் அருளிய இராமகாதை | பாடல...