புதன், 22 ஜூன், 2022

தேவயானி - இயற்கைக்குத் திரும்புவோம்

விஞ்ஞானிகளே

விடை கூறுங்கள்.


உலகை வென்றுவிட்டதாய்

உவகை கொள்ளாதீர்!


சாபக்கற்களில்தான்

சந்தனம் அரைத்துப்

பூசிக் கொள்கிறீர்...

பழநிபாரதி - காடு

 கவிதை எழுத

காகிதம் எடுத்தேன்


உலகெங்கும்
காகிதத்திற்காக அழிக்கப்பட்ட
காடுகளின் மணம் 
துளைத்தது என் மூச்சை

செவ்வாய், 21 ஜூன், 2022

பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்

 

மொட்டை மாடியெங்கும் 
குரோட்டன்ஸ் படர்ந்து கிடக்கும்
இதோ
இந்த வீடிருக்கும் இடத்தில்தான் 
என் வயல் இருந்தது. 

வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

 

மகனே
வழக்கமான தாலாட்டை 
உனக்கு நான் 
வாசிக்க முடியாது

அவை 
மொழியின் ஆடம்பரங்கள்
கைது செய்து வைத்த 
கனாக்கள் 

தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

 

வருங்கால மனிதன் வருக!

புத்தர் நடந்த திசையிலே - அருள்
பொங்கி வழிந்த திசையிலே
சித்தம் மகிழ்ந்து நடந்திட - ஒரு
தெய்வ மனிதன் வருகிறான்!


விண்ணிற் பிறந்தவன் என்றிட - முகம்
விண்சுட ராகப் பொலிவுற
மண்ணிற் பிறந்த மனிதருள் - புது
மைந்தன் பிறந்து வருகிறான்!

சனி, 18 ஜூன், 2022

சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

 அழித்து எழுதமுடியாத

அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா

கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு - சில
கைகள் கனிந்த கனிவு - குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு - அதில்
இயற்கை கலந்த அழகு!

நாள் 31 - தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு (Automated Answer Sheet Grading using AI)

நாள் 31: தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு - AI மூலம் தானியங்கி மதிப்பெண் & பின்னூட்டம் ...