செவ்வாய், 21 ஜனவரி, 2020

சிகரங்களைச் செதுக்குவோம்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக "சிகரங்களைச் செதுக்குவோம்"
எனும் தலைப்பில்  மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கைப் பேச்சாளர்,
பேராசிரியை முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவர் தனது சிறப்புரையில் இன்றைய தலைமுறை மாணவர்களின் கவனச்சிதைவு மற்றும் அவற்றின் காரணிகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீண்டு எவ்வாறு வாழ்வில் உயரலாம் எனவும்,
மாணவர்கள் தங்களைத் தாங்களே  செதுக்கிக் கொண்டு, தங்களுடைய  வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் மேதகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலானவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிகரங்களைப்போல் செதுக்கிக் கொண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய நிலையை அடைந்தனர் என்பது பற்றியும் அருமையாகப் பேசி மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சிகரங்களைச்செதுக்க ஊக்கப்படுத்தினார்.

செய்தியாக்கம்: பேரா.ப.இராஜேஷ்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020

“ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கிராமியப் பொங்கல் விழா 2020” கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள்  தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். தமிழர் பாரம்பரியப்படி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். வழிபாட்டின் போது மாணவிகள் கும்மியடித்தல் போன்ற கிராமிய நடனங்களை ஆடிப்பாடிக் கொண்டாடினார்கள். இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு கோலம் போடுதல், ரங்கோலி வரைதல், கயிறு இழுத்தல், உறியடித்தல், சாக்குப்போட்டி, லெமன் மற்றும் ஸ்புன், பலூன் உடைத்தல், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கிப் பொங்கல்  வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் தமிழர் பாரம்பரிய அங்காடிகள் திறக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய பொருட்கள் விற்கப்பட்டன.  

செய்தி ஆக்கம் : பேரா.ப.இராஜேஷ்

வியாழன், 9 ஜனவரி, 2020

ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 09.01.2020 இன்று “ஆதித்யா கணித்தமிழ் யுகம் மன்றம் தொடக்கவிழா” நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள்  தலைமையுரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினராக முனைவர் இரா.குணசீலன்(இணையத்தமிழ் ஆய்வாளர்) அவர்கள் கலந்துகொண்டு “இணையத்தமிழ் நுட்பங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வலைப்பதிவு, விக்கிப்பீடியா, யுடியுப், குறுஞ்செயலிகள், தமிழ் எழுத்துருக்கள், இணையவழிக் கல்வி, இ-புக் ஆகியவற்றை இணையங்கள் மூலம்  தமிழில் பதிவேற்றவும் தரவிறக்கம் செய்வதற்கும், தமிழ் மொழியை உலகளாவில் வளர்ச்சி அடைய செய்யக்கூடிய செயல்கள் குறித்து தன் கருத்துரையில் விளக்கினார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவாக சான்றுகளுடன் விளக்கினார். இக்கருத்தரங்கம் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தது.

ஆக்கம் :
பேரா.ப.இராசேசு

வியாழன், 2 ஜனவரி, 2020

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஐந்தாவது பன்னாட்டு ஆய்வரங்கம் இணைய உள்ளடக்கங்கள் உருவாக்குதலும் பரவலாக்கமும்


கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு - 15
ஐந்தாவது பன்னாட்டு ஆய்வரங்கம்
இணைய உள்ளடக்கங்கள் உருவாக்குதலும் பரவலாக்கமும்
Fifth International Colloquium on Development and Hosting of E-Content

ஆய்வு மலர்


செப்டம்பர் 2019 மலர் : 5   இதழ் : 20
September 2019 Volume V Issue 20
உள்ளே ...

புதன், 11 டிசம்பர், 2019

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்

வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டது. மீண்டும் முதலிடத்தைத் தக்கவைக்க நீங்களும் வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு சென்னையில் நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நீச்சல் காரன்

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இனம் ஆய்விதழுக்குக் கட்டுரை வழங்குவோர் கவனத்திற்கு

இனம் ஆய்வுநெறியை அறிந்து முறைப்படி கட்டுரையைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதற்கான காணொளிகளும் நெறிகளும் வருமாறு;
  1. உறுப்பினர் புகுபதிவு;https://www.youtube.com/watch?v=Mto19BmCseo
  2. கட்டுரையாளர்கள் குறிப்பு; https://www.youtube.com/watch?v=TIfUgV1_z_A
  3. கட்டுரை வழங்கும் முறை; https://www.youtube.com/watch?v=j1CIDqqcZmM&t=27s
  4. கட்டுரை வடிவமைப்பு முறை; https://www.youtube.com/watch?v=AK9xESiU5os
  5. இனம் நெறி;  https://inamtamil.com/instructions/
  6. இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும்.
  7. ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.

தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/பிறப்பியல்

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்: பிறப்பியல் 📜 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் — ...