Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும்
இலவசமாக நூல் வெளியிடுவதற்கு
வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி
நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தமிழ் மரபுச் சொல் சரிபார்ப்புக் கருவி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- தமிழ்த் தகுதித் தேர்வு வினாடி-வினா
- இலக்கிய வரலாறு வினாடி-வினா
- இலக்கண வினாடி-வினா
- தமிழ்க் களஞ்சியம் வினாடி-வினா
திங்கள், 29 மே, 2017
வியாழன், 18 மே, 2017
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்
2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
வியாழன், 27 ஏப்ரல், 2017
முதற்றாய்மொழி: சில புரிதல்கள்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க
மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில்
எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக
மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு
வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த
வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய
செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள்
(Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி
(Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி
(Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர்
(ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து
கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம்,
தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து
ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி
உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி
தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட
கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி
தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.
முல்லைப்பாட்டில் உளவியல்
ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும்
ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
சங்கஇலக்கியங்கள்
தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள்
வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும்.
ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும்,
நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும்
சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில்
இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
குறுந்தொகையில் உள்ளப்போராட்டம்
ஜெ.ஜென்சிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும்
ஓப்பிலக்கிய பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
தமிழ்
இலக்கியம் தொன்மையானது, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது என்று தோன்றி வளர்ந்தது
என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியமான சங்கஇலக்கியத்தினை
எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டடுள்ளன. அகமும் புறமும்
இதன் உட்பிரிவாகும். இவற்றில் அகநூல்கள் ஐந்து புறநூல்கள் இரண்டும், அகமும் புறமும்
கலந்து வருவது ஒன்று. இதைப்போல் தமிழில் இலக்கியம் என்று எண்ணும்போது பல்வேறு சிந்தனைகள்
நம் சிந்தனையைத் தொடும். அவற்றில் ஒன்று இலக்கியத்தோடு தொடர்புடைய உளவியல் துறையும்
ஒன்றாகும். அவ்வுளவியலில் பல கூறுகளும் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் உள்ளத்தைச் சிதைக்கும்
கூறுகளில் ஒன்றாக உள்ளப்போராட்டம் என்ற உளவியல்கூறு
எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் எத்தன்மையில் இடம்பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையின்
மூலம் அறியலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்
இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
