புதன், 29 ஏப்ரல், 2020

ஆட்டிப்படைக்கும் நுண்ணுயிரிகள்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இன்று (28.04.2020) ஆட்டிப்படைக்கும் நுண்ணுயிரிகள் எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு இணையவழி நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூழலியாளர் திரு.சதாசிவம்  அவர்கள் நுண்ணுயிரிகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும், கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறை பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும் இவர் மாணவர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாகப் புரியும்படி பதிலளித்தார் என்பதும் இந்நிகழ்வில் சென்னை, விழுப்புரம், குற்றாலம், திருப்பூர் கோவை போன்ற நகரப் பகுதியைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன