ஞாயிறு, 3 டிசம்பர், 2023

இனம் ஆய்விதழ் மீதான மதிப்பீடு

இனம் ஆய்விதழுக்கு வந்த மதிப்பீடு
....................................
ஒன்பதாண்டு உழைப்பிற்குக் கிடைத்த பலன் இதுபோன்ற கருத்துரைகளே... இனம் ஆய்விதழின் பத்தாம் ஆண்டுத் தொடக்கப் பதிப்பிலிருந்து (இதழ் 37) முன்னணி கணினி அறிவியல் ஆய்விதழான இசுபிரிங்கர் நேச்சர் லிங்க் இதழின் தரம் போன்று வரவிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
............................
மகிழ்ச்சி சத்தியராஜ் மற்றும் மூனிஸ்
என்னுடைய கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. சில பிழைகள் இருக்கின்றன. என்னுடைய தட்டச்சு மற்றும் கணினி முறையே தவறுகளுக்குக் காரணம் என அறிந்து கொண்டேன்.
அகல்யாவின் ‘மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு’, சத்தியராின் ‘வள்ளலார் திருவருட்பா தெலுங்கு மொழிபெயர்ப்பு - பன்முகப்பார்வை”, இராசையா தேவேந்திரனின் ‘க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டலின் வினைத்திறனின்மையானது அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம்’ ஆகிய கட்டுரைகளையும் வாசித்தேன். மூன்றும் ஒரு திறத்தன. தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் நெறியில் ஆய்வு செய்யப்பட்டவை. ஆய்வேட்டிற்குரிய முறைமைகளையும் கட்டமைப்பையும் கொண்டிருக்கின்றன. இதுபோல் ஆழமிக்கக் கட்டுரைகள் தமிழ் ஆய்விதழ்களின் வெளி வருவதில்லை. நமது இனம் அதற்கு முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சி. தொடரட்டும் இப்பணி. வாழ்த்துக்கள்.

Dr. M.BALASUBRAMANIAN
ASSOCIATE PROFESSOR
TAMIL STUDIES & RESEARCH
ANNAMALAI UNIVERSITY
ANNAMALAI NAGAR
9488013050

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன