ஞாயிறு, 6 ஜூன், 2021

பாலபோதினி 2

பாலபோதினி.

முதலாவது

சொல்லதிகாரம்.

சொல்லியல்.

1.சொல்.-சொல்லாவதுஇருதிணையிலும்ஐந்துபாலிலும் உள்ள பொருள்களை மூன்றிடங்களிலும் நின்று விளக்குவதாம்.
2.   திணை.-திணையென்றால் ஜாதிஅது உயர்திணைஅஃறிணையென இருவகைப்படும்உயர்திணை உயர்வாகிய ஜாதிஅஃறிணை = அல்+திணை, =அல்லாத ஜாதிஅதாவது தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவை.
3.   உயர்திணை.-மக்கள்தேவர்நரகர் உயர்திணையாம்மக்கள் = மனிதர்கள்.
4.   அஃறிணை.-அம்மக்கள் தேவர் நரகரையல்லாதவை உயிருள்ளவையா யிருந்தாலு மில்லாதவையா யிருந்தாலு மஃறிணையாம்.
5.   பால்.-பாலென்பதுமேற்சொல்லிய உயர்திணை அஃறிணைப் பொருள்களின் பகுப்புஅது ஆண்பால்பெண்பால்பலர்பால்ஒன்றன்பால்பலவின்பால் என ஐந்து வகைப்படும்.
6.   உயர்திணைப்பால்.-ஆண்பால்பெண்பால்பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்குரியவைகளாம்.
 - ம்.      அவன் வந்தான் - ஆண்பால்.
அவள் வந்தாள்  - பெண்பால்.
அவர் வந்தார்     - பலர்பால்.
ஒரு ஆணைக் குறித்தால் அது ஆண்பாலென்றும்ஒரு பெண்ணைக் குறித்தால் அது பெண்பாலென்றும்ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ் சொல்லப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன