இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய “இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும்” எனும் பொருண்மையிலான உரையரங்கம்
25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக
அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்
கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா.த.திலிப்குமார்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல்
மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து
ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும்,
ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை
வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் த.அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.
[மெய்வந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
திங்கள், 25 செப்டம்பர், 2017
செவ்வாய், 6 ஜூன், 2017
அம்பேத்கர்
பாரத நடுவில்
பிறந்த
சாதி
வலியின் பேரிடியே
ஆகாய அகல
அளவாய்
விரிந்துநின்ற
ஆல விருச்சமே
கோடி கோடி
கருப்பர்களின்
முதன்
முதல் தாயே
கடல்வழியினும் உலக
வழியினும்
வழிந்து
முழங்கிய கோசமே
குழந்தையில் யான்
கண்ட
போராட்டத்தின்
வழியினை
அழைத்து அழைத்துக்
காட்டுகிறேன்
ஸ்ரீபுரந்தரதாசர்
மூலம்
- கன்னடம்
தமிழில்
- சே.முனியசாமி
புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.
வெள்ளி, 2 ஜூன், 2017
கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்
கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில்
மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால்
இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர்
அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது.
எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.
திங்கள், 29 மே, 2017
பொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்
Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும்
இலவசமாக நூல் வெளியிடுவதற்கு
வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி
நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
வியாழன், 18 மே, 2017
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்
2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
வியாழன், 27 ஏப்ரல், 2017
முதற்றாய்மொழி: சில புரிதல்கள்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க
மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில்
எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக
மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு
வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த
வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய
செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள்
(Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி
(Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி
(Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர்
(ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து
கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம்,
தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து
ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி
உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி
தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட
கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி
தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.
முல்லைப்பாட்டில் உளவியல்
ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும்
ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
சங்கஇலக்கியங்கள்
தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள்
வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும்.
ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும்,
நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும்
சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில்
இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
குறுந்தொகையில் உள்ளப்போராட்டம்
ஜெ.ஜென்சிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும்
ஓப்பிலக்கிய பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
தமிழ்
இலக்கியம் தொன்மையானது, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது என்று தோன்றி வளர்ந்தது
என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியமான சங்கஇலக்கியத்தினை
எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டடுள்ளன. அகமும் புறமும்
இதன் உட்பிரிவாகும். இவற்றில் அகநூல்கள் ஐந்து புறநூல்கள் இரண்டும், அகமும் புறமும்
கலந்து வருவது ஒன்று. இதைப்போல் தமிழில் இலக்கியம் என்று எண்ணும்போது பல்வேறு சிந்தனைகள்
நம் சிந்தனையைத் தொடும். அவற்றில் ஒன்று இலக்கியத்தோடு தொடர்புடைய உளவியல் துறையும்
ஒன்றாகும். அவ்வுளவியலில் பல கூறுகளும் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் உள்ளத்தைச் சிதைக்கும்
கூறுகளில் ஒன்றாக உள்ளப்போராட்டம் என்ற உளவியல்கூறு
எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் எத்தன்மையில் இடம்பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையின்
மூலம் அறியலாம்.
ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
தமிழ்க் கணிமையில் இனி…
இந்தியாவில் இருபத்திரண்டு மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுக்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்குவதில் நடுவண்நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கணினியில் தேவையான தன்னிறைவு பெற்றுவிட்டனவா? இல்லை என்பது விடையாக இருக்கும். சரி, இனித் தமிழ்க்கணிமை குறித்துச் சில எதிர்கால நோக்கங்களை இங்குக் காண்போம்.
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!
நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html )
இற்கான எமது பணியில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை
வெளியிட முன்வந்தோம். அதற்குத் தனது பதிவை முனைவர் இரா.குணசீலன் அவர்கள்
அனுப்பியுள்ளார்.
ஞாயிறு, 26 மார்ச், 2017
தரக்குறியீட்டு எண் பெறும்முறை
முனைவர் த.சத்தியராஜ்
உதவிப்
பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயம்புத்தூர் -
641 028
தரக்குறியீட்டு எண் என்பது என்ன? உலகளாவிய நிலையில் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நூலிற்கோ அளிக்கப்பொறும் அடையாளம் எனலாம். இது இப்பொழுது துவையானது. இது கருத்துத் திருட்டைக் குறைப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. அது ஒருவரின் சிந்தனைத் தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்பதை இப்பகுதி விளக்குகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம்
தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம் இலக்கணம் என்றால் என்ன? இலக்கு + அணம் = இலக்கணம். இலக்கு என்றால் கு...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
