[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- இனம் கற்பிப்பகம் (Inam Karppippagam)
- தொல்காபை ஆய்வி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- வினாடி-வினா (Quizzes)
- வினாடி - வினா (TRB, UGC-Quiz)
- பகுதி - 1, 4 தமிழ் வினாடி - வினா
- MiLifeStyle Products
வெள்ளி, 21 அக்டோபர், 2016
திங்கள், 20 ஜூன், 2016
speech to text software
Speech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வந்து ஆச்சர்யாமூட்டும் சீன நிறுவனம்
பல மென்பொருள்
நிறுவனங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனம் செலுத்தி வரும்
தொழில்நுட்பங்களுள் ஒன்று “பேச்சு புரிந்துணர்வு
தொழில்நுட்பமாகும் “(Speech Recognition ).
கூகுள் , ஆப்பிள், அமேசான்,மைக்ரோசாப்ட் உட்பட அமெரிக்காவில் மட்டும்
26 மென்பொருள் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி புதிய மென்
பொருட்கள் வெளியிட்டு வருகின்றன . பேச்சு கட்டளைகள் மூலம் இணையத்தில்
தேடும் வசதி நம் ஆன்டிராய்டு கைபேசி , ஐபோன் கைபேசியில் Siri,
மைக்ரோசாப்ட்டின் கார்டானா போன்றவற்றில் உள்ளதை நாம் அறிவோம். உண்மையில்
ஆங்கிலம் தவிர வேறு அனைத்து மொழிகளிலும் கணினியில் தட்டச்சு செய்வது
கடினமாகத்தான் உள்ளது. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள். ஆனால் ஆசியாவில் உள்ள
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் ஆனால் ஆசியாவில் உள்ள மொழிகளில்
நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. இங்கு உள்ள மக்கள் இணைய வெளியில் தேட
அவரவர் மொழியில் பேச்சு கட்டளைகளின் மூலம் தேடுவது மிகவும் எளிதாக
இருக்கும். இணையவழி தேடுதல் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் கூகுள்
நிறுவனத்தின் இதயத் துடிப்பு போன்றது. இதனால் இந்தத் தொழில்நுட்பத்தில்
அக்கறையுடன் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்திற்கு ஆசியாவில்
போட்டியாக சீனாவின் பெய்டு (Baidu) நிறுவனம் தொடர்ந்து புதிய
தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகிறது.
புதன், 20 ஏப்ரல், 2016
ஆய்வுத்திட்ட உதவியாளர் பணி
மொழித்துறை
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 028
தேதி : 20.04.2016
செம்மொழி ஆய்வுத்திட்ட உதவியாளர்
பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கீழ்வரும் தகுதிகள்
இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வுத்திட்டம் :
செம்மொழி ஆய்வுத்திட்டம்
(இந்தி மொழியில் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள்)
பணியிடம் :
1
கல்வித்தகுதி :
இந்தியில் பிரவீன் மற்றும் தமிழில் இளங்கலை
மொழிபெயர்ப்பில் ஆர்வமும் அனுபவமும் இருத்தல்
வேண்டும்.
விண்ணப்பம்
அனுப்பவேண்டிய முகவரி :
முனைவர்
இரா. இரமேஷ்குமார்
செம்மொழி
ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளர்
மொழித்துறை
இந்துஸ்தான்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர்
- 641 028
குறிப்பு:
நேர்முகத்
தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது.
ஆய்வுத்திட்ட உதவியாளர் பணி

மொழித்துறை
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 028
தேதி : 20.04.2016
செம்மொழி ஆய்வுத்திட்ட உதவியாளர்
பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கீழ்வரும் தகுதிகள்
இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வுத்திட்டம் :
செம்மொழி ஆய்வுத்திட்டம்
(திராவிட மொழிகளின் முதல் இலக்கணங்கள் : இலக்கணவியல்
நோக்கு)
பணியிடம் :
1
கல்வித்தகுதி :
தமிழில் முதுகலை (M.A.) அல்லது ஆய்வியல்
நிறைஞர் (M.PHIL.)
அல்லது ஒப்பிலக்கியத்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.PHIL.)
பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பம்
அனுப்பவேண்டிய முகவரி :
முனைவர்
த. சத்தியராஜ்
செம்மொழி
ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளர்
மொழித்துறை
இந்துஸ்தான்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர்
- 641 028
குறிப்பு:
நேர்முகத்
தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது.
திங்கள், 4 ஏப்ரல், 2016
ஒப்பியல் உள்ளும் புறமும்
வாசித்தால்… வாசிக்கச் சொல்லும்…
பேரா. த. திலிப்குமார்
துறைத்தலைவர்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 28
துறைத்தலைவர்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 28
மந்தையாய் வாழ்ந்து மடிந்து போகும் மனித சமூகத்தில் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் எதிர்த் திசையில் பயணம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும் பயணம் புது அனுபவத்தோடு வாழ்வியலைப் பார்க்க நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.
படைப்பாளிகள் தமது படைப்பின்வழிப் பதிவு செய்யும் பனுவலின் தன்மையைச் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அமைக்கிறார்கள். அப்படி ஒப்பியல் உள்ளம் புறமும் என்ற நூல் பதினொரு ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட பனுவலாகப் பல வகையிலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. இந்நூல் தட்டை மனநிலையிலிருந்து பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு வேறு ஒரு வடிவத்தில் சிந்திக்கச் சொல்லிக் கொடுக்கின்றது.
இலக்கிய வாசிப்பில் போகிற போக்கில் நாம் வாசித்ததைக் கொஞ்சம் நின்று நிதானித்து வாசிக்கும் பொழுது சத்தியராசுவின் வார்த்தைகள் நின்று பார்க்கச் சொல்கின்றன. இதை நாம் இப்படிப் பார்க்கவில்லையே என்று யோசிக்க வைக்கின்றன.
இலக்கியம் நம் இதயத்தோடு இணக்கமாக, நம்மோடு பேசுவது; நம்மைப் பேசாமல் செய்வது; நம்மை எப்பொழுதும் இம்சிப்பது. படைத்தவனின் மனநிலையோடு நாம் பயணிக்க இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகள் ஆற்றுப்படுத்தும். விலைமகளிர் நெறிகள் என்ற கட்டுரையை வாசித்தபோது பரத்தை – விலைமகள் இவர்களின் நிலைப்பாட்டை அறியமுடிந்தது. ஓஷோவின் காமத்திலிருந்து கடவுள் வரை என்ற நூலில் இடம்பெறும் காம இன்பம் மனதளவில் ஒரு அங்கம் எனும் கருத்து இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
நமது இலக்கியம் காட்டும் வாழ்வியல் முறையும் பிறமொழி இலக்கியம் சொல்லும் வாழ்வியல் முறையும் உலகளவில் மனித சமூகம் அன்பு என்ற ஒரு புள்ளியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன.
மாற்றுச் சிறந்தனையாளர்கள் மந்தையாய் அலைந்து திரிந்து மடிந்து போவதில்லை. அவர்கள் இந்தச் சமூகத்திற்குத் தமது வாழ்வில் கண்டவற்றை அடுத்த தலைமுறைக்குப் பங்களித்துவிட்டுச் செல்கிறார்கள். அடர்ந்த இருள்படர்ந்த காடு, செல்லவேண்டிய தூரம் பல காததூரம். நீ கடக்க வேண்டியது வெகுதூரம் ராபர்ட் ப்ராஸ்ட் சொன்ன இந்த வாக்கியத்தை மனதில் கொண்டு சத்தியராஜ் பயணித்துக் கொண்டிருக்கிறார். உன் உச்சத்தை உடனே தொட்டு விடாதே. தொட்டு விட்டோம்னு நினைப்பு வந்துட்டா வளர்ச்சி இல்லைனு பாலுமகேந்திரா கூறுகிறார். உச்சத்தை நோக்கிய பயணம் தொடர வேண்டும்.
வாசிப்பு வசப்பட்டால்தான் ஒப்பியலோடு உறவாட முடியும். அந்த வகையில் இலக்கணத்தில் தனித்துவம், இலக்கியத்தில் தொடர்வாசிப்பு தான் கற்றதையும் பெற்றதையும் சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பாங்கு, வார்த்தைக்கு வலிக்காமல் உரையாடும் தனித்தன்மை, தனித்தமிழ் மீது கொண்ட காதல் இவரைச் சரியாக அடையாளம் காட்டும். இப்படித்தான் வாழவேண்டும் எப்படியும் அல்ல என்பதற்கும் எளிமையோடு எல்லோரும் உறவாடுவதற்கும் எளிய மனிதர். இவரது முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
தோழமையுடன்…
த. திலிப்குமார்
த. திலிப்குமார்
நூலை வாசிக்க ... http://sathiyaraj.pressbooks.com/ இத்தளத்திற்குச் செல்க.
விருதும் நம்மவருக்கு வியப்பும்
சிலரை இருக்கும்போது
கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இறந்தபின் விருது வழங்கும் கூத்தும் நம் நாட்டில்
அரங்கேறும். இராணுவ வீரர்களுக்கு மட்டுமே இத்தகைய இறப்புக்குப்பின் விருது
வழங்குவது பொருத்தமாக இருக்கும்.
பத்ம விருதுகள் என்பவை தேசிய
முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளாகும். இவ் விருதுகளுக்குத்
தேர்ந்தெடுக்கப்படுவோர் அவரவர் துறையில் தகுதி வாய்ந்த சான்றோர் பெருமக்களாக இருக்க
வேண்டும். ஆனால் அதிலும் அரசியல் புகுந்து விட்டது. சில சமயங்களில் இவருக்கா
விருது கிடைத்திருக்கிறது என புருவங்களை உயர்த்தி இருக்கிறோம் அல்லவா?
விருதுப் பட்டியல் வெளியானதும்
விமர்சனப் புயல் கிளம்பும். பட்டியல் வெளியானபோது அதில் சாய்னா நேவால் பெயர்
இடம்பெறவில்லை. அவர் அழுது புலம்பவில்லை.
மாறாக பத்திரிகையாளர்களை அழைத்துத் தன்னை விருதுக்குத் தேர்ந்தெடுக்காததை
எதிர்த்து வினா எழுப்பினார். உடனே தொடர்புடைய
அமைச்சர் சாய்னா நேவாலின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக அறிவித்தார்.
பத்மபூஷன் விருதினை வழங்கி தேநீர் கோப்பையில் எழுந்த புயலைச் சமாளித்தது நடுவண்
அரசு. உலக அரங்கில் இந்தியக் கொடியை உயரத்தில் பறக்கச் செய்யும் சானியா நேவால்
விருதுக்குத் தகுதியானவர்தான்.
இரு தினங்களுக்கு முன் குடியரசுத்
தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. எல்லோரும் விலை உயர்ந்த
ஆடை அணிகளை அணிந்து செல்ல ஒருவர் மட்டும் எளிய உடை அணிந்து எவருடைய கவனத்தையும்
கவராமல் மேடை ஏறி விருதை பெற்றுக்கொண்டு இறங்கினார். ஒரு கரும யோகியைப் போல சென்று பய பக்தியுடன் விருதினைப் பெற்றுக்
கொண்டார். போட்டோகிராபர்களுக்கு போஸ் எதுவும் தரவில்லை; மற்ற எல்லோரும் போஸ்
கொடுக்கத் தவறவில்லை!
யார் அந்த எளிய
மனிதர்? ஒடிசா மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் ஓர் ஏழைமையான குடும்பத்தில் 1950
ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே தந்தை இறந்ததால் மூன்றாம்
வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டர். பாத்திரம் கழுவும் வேலை பின்னர் ஒரு
பள்ளியில் மதிய உணவுப் பிரிவில் சமையல்
வேலை என அவரது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது. பிறகு அந்தப் பள்ளிக்கு அருகில்
ஒரு பெட்டிக்கடையைத் தொடங்கினார். ஓய்வு நேரத்தில் படிக்கவும் எழுதவும் செய்தார்.
சிறு சிறு கவிதைகளை அவர் தாய் மொழியான கொசாலி மொழியில் எழுதினார். ஒரு பழைய ஆலமரம்
என்னும் தலைப்பில் அவர் எழுதிய கவிதை ஒன்று உள்ளூர் நாளேட்டில் அச்சு வாகனம்
ஏறியது. தொடர்ந்து கவிதை, கதை, காவியம் என எழுதிக் குவித்தார். நம் ஊர்
பாரதிதாசனைப் போல ஒடுக்கப் பட்டவர்களுக்காகக் கவிதை பாடினார்; சாடினார்.
அவருடைய
கவிதைகள் பல்கலைக் கழகங்களில் பாடங்கள் ஆயின. தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர்
இவரது கவிதைகளை ஆராய்ந்து பிஎச்.டி பட்டங்கள் பெற்றனர். இலக்கிய ஆர்வலர்களின் நிதி
உதவியால் அவருடைய எழுத்துகள் நூல்வடிவம் பெற்றன.
இன்னொரு
அசாத்தியமான திறமை அவரிடம் உள்ளது. தான் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களை ஒரு
பிழையில்லாமல் மணிக்கணக்கில் சொல்கிறார்.
இவரின்
அடியொற்றி, எளிய அதே சமயம் காரசாரமான கவிதை எழுதும் இளங்கவிஞர் பட்டாளம் உருவானது.
ஆனாலும் அரசுத் தரப்பில் எந்த அங்கீகாரமும் இல்லை. திடீர் என ஒருநாள் இலண்டன்
பிபிசி காரர்கள் காமிராவும் கையுமாக வந்து இவரைப் பற்றி ஒரு செய்திப் படத்தைத் தயாரித்து இவரை உலகத்திற்கு
அறிமுகப்படுத்தினார்கள்.. பிறகுதான் நம்மவரின் அருமை அரசுக்குத் தெரியவந்து பத்ம
ஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்தது.
இப்படியாக
பத்ம ஸ்ரீ விருது தகுதியான ஒருவரின் கரங்களில் தவழ்ந்து தனக்குப் பெருமையத்
தேடிக்கொண்டது.
கல்யாண
சந்தடியில் தாலிகட்ட மறந்த கதையாக, இந்த விருது புராணத்தில் கதா நாயகரின் பெயரைக்
குறிப்பிட மறந்துவிட்டேன்.
அவருக்கு
ஒரு மகள் உள்ளாள்; மனைவியின் பெயர் மாலதி.
சரி சரி அவருடைய பெயர் என்ன என்று நீங்கள் கேட்பது
என் காதில் விழுகிறது.
ஹால்தார் நாக் என்பது அவர்
பெயராகும்.
அவர் சொல்கிறார்: “ஒரு
வகையில் எல்லோரும் கவிஞர்களே. தாம்
எழுதும் கவிதைகளுக்கு வடிவம் கொடுப்பதில்தான் வேறுபடுகிறார்கள்.”
நன்றி : http://iniangovindaraju.blogspot.in/2016/03/blog-post_31.html?showComment=1459762944750#c7743307853064190269
ஞாயிறு, 13 டிசம்பர், 2015
ஏழைகளின் நாயகன் = இளைஞர்களின் நாயகன்
இவர்களுக்கு லைக்கும் வராது, கமெண்ட் வராது,,,,,,,, ஏன்னா!!!இவங்க நடிகர் இல்ல............... தமிழா,தமிழனின் திறமையை தரணியில் பரப்ப ஓர்_புதிய_முயற்சி
#காமராஜர்(LIKE)
#அப்துல்கலாம்(SHARE)
நடிகர்கள் எனில் லைக் சேர் வரும்,மக்களால் நேசிக்கப்பட்டு,மக்களால் மறக்க முடியாத நல்ல தலைவர்களுக்கு Like-Share வருமா என எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
ஏழைகளின் நாயகன்--------------இளைஞர்களின் நாயகன்
கையில் ரொக்கம்-100ரூ----------புத்தகங்கள் -2500
வங்கியில் ரொக்கம்-125ரூ-------கை கடிகாரம் -1
கதர் வேட்டி,துண்டு,சட்டை-4---முழுகை சட்டை -6
பேனா---1------------------------------கால் சட்டை -4
கண்கண்ணாடி---1------------------சூட் - 3
காலணி---2ஜோடி------------------ஷூ - 1 ஜோடி
இவர்கள் போல் மக்கள் தலைவர்கள் இனி இருக்கவும் போவதில்லை,பிறக்கவும் போவதில்லை
கோடி கோடியாய் ஊழல்செய்யும் தலைவருக்கு மத்தியில் இப்படியும் வாழ்ந்தனர் இந்தியனாய்/தமிழனாய்.நல்ல தலைவனாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
நாள் 31 - தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு (Automated Answer Sheet Grading using AI)
நாள் 31: தானியங்கி விடைத்தாள் மதிப்பீடு - AI மூலம் தானியங்கி மதிப்பெண் & பின்னூட்டம் ...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்: ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி அணியிழை தன...



