தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற போரியல் நடவடிக்கைகளன்றிப் பண்பாட்டுப் படையெடுப்புகளும் மிகுதியாக நிகழ்ந்துள்ளன. வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், வேளாண் சமூகம், நிலவுடைமைச் சமூகம், வாரிசு சொத்துரிமைச் சமூகம், அரசுருவாக்கம் என்ற சமூகப் படிநிலை வளர்ச்சியினை ஆங்காங்குச் சங்க இலக்கியங்கள் பரவலாகச் சுட்டிச் செல்கின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்களில் சிலவற்றில் மட்டுமே கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபு [school of thought] காணப்பெறுகின்றன எனக் கருத இடமுண்டு. ஏனைய பல செவ்வியல் தொகுப்புப் பனுவல்களில் கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபற்ற இனக்குழுக்களின் வாழ்நிலை விழுமியங்கள் தனித்து அடையாளப் படுத்தப் பெற்றுள்ளன. அரிய சில இனக்குழுக்களின் பல பண்பாட்டு அசைவுகள் ஆய்வாளர்களால் வெளிக்கொண்டு வரப்பெறாமல் சங்க இலக்கியங்களை ஒரே வெற்றுத்தளத்தில் வைத்து நோக்கி ஆய்வு செய்து வருவதென்பது தமிழியல் ஆய்வுக்குறை. மூலநூலான தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்ற சொற்பயன்பாடுகள், வழக்காறுகள், பொருள்கொள்ளல் முறைமைகள், தொல் சடங்குமுறைகள், பண்பாட்டுக் கூறுகள் பல செவ்வியல் பிரதிகளில் காணப்பெறாமல் விடுபட்டமை அல்லது காலவட்டத்தில் திரிக்கப் பெற்றமை இதற்குத் தக்க சான்று. குறிப்பிட்ட பனுவல் புனையப்பெற்ற காலத்திற்கும் அப்பனுவலுக்கு உரையெழுந்த காலக்கட்டத்திற்கும் உண்டான சமூகவியல் வேறுபாடறியாமல் ஆய்வுகளை நகர்த்திச் செல்லும் சில ஆய்வாளர்களால் சில தவறான வரலாற்றுக் கருத்துகள் முன்வைத்துச் செல்லப் பெறுகின்றன. இவ்வகையில் பரத்தை, பரத்தமை, காமக்கிழத்தி என்ற சொல்லாடல்கள் குறித்த சமூக வரலாற்றுப் பார்வையினை இலக்கண, இலக்கியப் பதிவுகள் வழி ஆய்வு செய்யும் முகமாக இக்கருத்துரை அமைகின்றது.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
திங்கள், 26 பிப்ரவரி, 2018
திங்கள், 25 செப்டம்பர், 2017
இலக்கணவியல் உரையரங்கம்
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய “இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும்” எனும் பொருண்மையிலான உரையரங்கம்
25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக
அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்
கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா.த.திலிப்குமார்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல்
மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து
ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும்,
ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை
வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் த.அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.
செவ்வாய், 6 ஜூன், 2017
அம்பேத்கர்
பாரத நடுவில்
பிறந்த
சாதி
வலியின் பேரிடியே
ஆகாய அகல
அளவாய்
விரிந்துநின்ற
ஆல விருச்சமே
கோடி கோடி
கருப்பர்களின்
முதன்
முதல் தாயே
கடல்வழியினும் உலக
வழியினும்
வழிந்து
முழங்கிய கோசமே
குழந்தையில் யான்
கண்ட
போராட்டத்தின்
வழியினை
அழைத்து அழைத்துக்
காட்டுகிறேன்
ஸ்ரீபுரந்தரதாசர்
மூலம்
- கன்னடம்
தமிழில்
- சே.முனியசாமி
புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.
வெள்ளி, 2 ஜூன், 2017
கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்
கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில்
மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால்
இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர்
அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது.
எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
அறிவியலும் தொழில்நுட்பமும்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் (SCIENCE AND TECHNOLOGY: PROGRESS, ETHICS AND HUMAN FUTURE)
அறிவியல், தொழில்நுட்பம்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் கண்டுபிடிப்புகள், தார்மீகப் பொறுப்பு, எதிர்காலச் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...