திங்கள், 16 ஜூன், 2014

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு


இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.

குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.

சனி, 17 மே, 2014

புதன், 7 மே, 2014

தாமோதரர்கள்


கள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே   – குறுந். 92

ஞாயிறு, 4 மே, 2014

தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு


தமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம்.  தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஏருழவு

அறிவியலும் தொழில்நுட்பமும்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் (SCIENCE AND TECHNOLOGY: PROGRESS, ETHICS AND HUMAN FUTURE)

அறிவியல், தொழில்நுட்பம்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் கண்டுபிடிப்புகள், தார்மீகப் பொறுப்பு, எதிர்காலச் ...