வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் அரத்தக் கொடை முகாம்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கமும் IMA Masonic Rotary Midtown Mahaveers Blood Bank சேவையகமும்  கோவை மாவட்ட இந்தியச் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து 21.02.2020 அன்று அரத்தக்கொடை முகாமை (Blood Donation) நடத்தின. கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள்  தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்வில் 62 மாணவர்கள் அரத்தக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வினை இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முனைவர் த.சத்தியராஜ் அவர்களும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவர் தீபக்குமார் ( கணிதத் துறை) அவர்களும் ஒருங்கிணைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன