

· பழம் பாடலில் உள்ள குறிப்புகளைச் சுட்டிக் காட்டுதலும், அப்பாடல்களை நடைமுறை வாழ்க்கையொடு ஒப்பிட்டுக் காட்டுதலும் அவர் உரையில் காணலாகின்றன.
· குறட்பாக்களை எவ்வாறு விளக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
· அவர்கள் முன்வைக்கும் வினாக்கள் உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்தவை.
· மிகைப்படச் செய்தல் கூறுகள் உள.
என்பன
போன்ற கருத்துகளைக் கூறி நிறைவு செய்தார்.
தமிழியல் ஆய்வுக்குச்
செந்தமிழ்க் காவலர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பங்களிப்புகள் எனும் தலைப்பிலான கருத்துரை அடுத்த நிகழ்வாக அமந்தது. இதன் கருத்துரையாளராக
மேனாள் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவர் பேரா. இராம.
சுந்தரம் அவர்கள் அமைந்தார்கள். அவர்கள்,
· முதன்முதல் தமிழில் பட்டம் பெற்றவர்.
· 1962இல் ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கித் தந்தார்.
· மொழியின் வளர்ச்சியைச் சமகாலத் தரவுகளுடன் ஒப்ப வைத்து விளக்கினார்.
· பன்மொழி. ஒருமொழி, உயிரியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.
· சிறுகதை, கவிதை ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
· வடமொழியில் தமிழ் போல்வன கட்டுரைகளை ஆக்கியுள்ளார்.
· முதன்முதல் தமிழில் பட்டம் பெற்றவர்.
· 1962இல் ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கித் தந்தார்.
· மொழியின் வளர்ச்சியைச் சமகாலத் தரவுகளுடன் ஒப்ப வைத்து விளக்கினார்.
· பன்மொழி. ஒருமொழி, உயிரியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்.
· சிறுகதை, கவிதை ஆகியவற்றைப் படைத்துள்ளார்.
· வடமொழியில் தமிழ் போல்வன கட்டுரைகளை ஆக்கியுள்ளார்.

-
த.
சத்தியராஜ்(நேயக்கோ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன