[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
பக்கங்கள்
- முகப்பு
- Diclaimer
- About us
- Conduct
- Privacy Policy
- தொல்காபை ஆய்வி
- Tamil Poets
- ஒப்பிலக்கணம்
- ஒப்பிலக்கியம்
- கவிதை
- கவிதை
- ஆங்கிலம்
- படைப்புகள் வெளியிட
- பன்மொழியாளர்
- கன்னடம்
- தெலுங்கு
- தமிழ்ப் புலவர்
- நூலறிமுகம்
- அகர முதலி
- என்னைப்பற்றி
- தொல்காப்பியச் செயலி
- வினாடி-வினா (Quizzes)
- வினாடி - வினா (TRB, UGC-Quiz)
- MiLifeStyle Products
- பகுதி 1 தமிழ்
சனி, 13 ஜூலை, 2019
வியாழன், 13 டிசம்பர், 2018
மதிப்பிற்குரிய ஆசிரியரைப் போற்றுகின்ற ஒரு மாண்புமிகு மாணவனின் கவிதை
நான் அறிவைப் பெற்றேன்
உன்னை ஆசானாய்ப் பெற்றதால் உங்கள் உரையாடல்
இந்த உலகத்தின் உண்மையை உணர்த்தின
உங்கள் கேள்விகள்
எங்கள் உள்ளத்தைப் பாதித்தன என்ன தவம் பெற்றேன்
என அறிய இயலேன்
என்னால் முடிந்தவரை
இதனைப் பிறர்க்கு
எடுத்துரைக்க முயல்வேன்
- மாணவன் விக்னேஷ் பிரபு
பி.காம்.சி.ஏ., இ பிரிவு
முதலாம் ஆண்டு
வணிகவியல் துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
உன்னை ஆசானாய்ப் பெற்றதால் உங்கள் உரையாடல்
இந்த உலகத்தின் உண்மையை உணர்த்தின
உங்கள் கேள்விகள்
எங்கள் உள்ளத்தைப் பாதித்தன என்ன தவம் பெற்றேன்
என அறிய இயலேன்
என்னால் முடிந்தவரை
இதனைப் பிறர்க்கு
எடுத்துரைக்க முயல்வேன்
- மாணவன் விக்னேஷ் பிரபு
பி.காம்.சி.ஏ., இ பிரிவு
முதலாம் ஆண்டு
வணிகவியல் துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
சனி, 27 அக்டோபர், 2018
பாலபோதினி 3
அஃறிணைப்பால்.-ஒன்றன்பால், பலவின்பாலென விரண்டும் அஃறிணைக்குரியவைகளாம். அஃறிணையில் ஆண் பெண் என்ற பகுப்பில்லை. ஆணாயிருந்தாலும் அல்லாததாயிருந்தாலும் ஒன்றைக் குறித்தால் ஒன்றன் பாலென்றும், மேற்பட்டவற்றைக் குறித்தாற் பலவின் பாலென்றுஞ் சொல்லப்படும்.
உ - ம். அது வந்தது - ஒன்றன்பால்.
அவை வந்தன - பலவின்பால்.
ஒருமை - பன்மை; எந்தத் திணையிலும் ஒருபொருளைக் குறிப்பது ஒருமையென்றும், மேற்பட்ட பொருளைக் குறிப்பது பன்மையென்றும் சொல்லப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பாலிம் மூன்றும் ஒருமை. பலர்பால், பலவின்பால் இவ்விரண்டும் பன்மை.
இடம். -இடமாவது, சொற்கள் நிகழ்கின்ற ஸ்தானம். அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.
சொல்லுபவன் தன்மையிடம்.
உ-ம்.
நான் வந்தேன்.
கேட்பவன் அதாவது முன்னிற்பவன் முன்னிலையிடம்.
உ - ம். நீ வந்தாய்.
பேசப்படும் பொருள் அதாவது யாரை, அல்லது எதைப்பற்றிப் பேசப்படுகிறதோ அப்பொருள் படர்க்கையிடம்.
உ - ம். அவன் வந்தான்; மரம்
வளர்ந்த்து.
சொற்கள்.- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனத் தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும்.
வியாழன், 25 அக்டோபர், 2018
பாலபோதினி 2
பாலபோதினி.
முதலாவது
சொல்லதிகாரம்.
சொல்.-சொல்லாவது, இருதிணையிலும், ஐந்துபாலிலும் உள்ள பொருள்களை மூன்றிடங்களிலும் நின்று விளக்குவதாம்.
திணை.-திணையென்றால் ஜாதி. அது உயர்திணை, அஃறிணையென இருவகைப்படும். உயர்திணை உயர்வாகிய ஜாதி. அஃறிணை = அல்+திணை,
=அல்லாத ஜாதி. அதாவது தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவை.
உயர்திணை.-மக்கள், தேவர், நரகர் உயர்திணையாம். மக்கள் = மனிதர்கள்.
அஃறிணை.-அம்மக்கள் தேவர் நரகரையல்லாதவை உயிருள்ளவையா யிருந்தாலு மில்லாதவையா யிருந்தாலு மஃறிணையாம்.
பால்.-பாலென்பது, மேற்சொல்லிய உயர்திணை அஃறிணைப் பொருள்களின் பகுப்பு. அது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும்.
உயர்திணைப்பால்.-ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்குரியவைகளாம்.
உ - ம். அவன் வந்தான் - ஆண்பால்.
அவள் வந்தாள்
- பெண்பால்.
அவர் வந்தார்
- பலர்பால்.
ஒரு ஆணைக் குறித்தால் அது ஆண்பாலென்றும், ஒரு பெண்ணைக் குறித்தால் அது பெண்பாலென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ் சொல்லப்படும்.
ஒரு ஆணைக் குறித்தால் அது ஆண்பாலென்றும், ஒரு பெண்ணைக் குறித்தால் அது பெண்பாலென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ் சொல்லப்படும்.
பாலபோதினி 1
பாலபோதினி.
கோயமுத்தூர், தமிழ்ப்பண்டிதர்
ச. தி ரு
ச் சி ற் ற ம் ப ல ம் பி ள் ளை
அவர்களால் இயற்றப்பட்டு,
க.சுப்பிரமணியமுதலியாரால்,
சென்னை :
வெ. நா.
ஜூபிலி அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
1900.
(All Rights Reserved)
வெள்ளி, 29 ஜூன், 2018
திங்கள், 25 ஜூன், 2018
யாப்பியலும் கணக்கியலும்
இலக்கணச் செம்மை மிக்க மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. இதன் மரபிலக்கணங்கள் செய்யுளாக்கம் குறித்துத் தனிச்சிறப்பாகப் பேசியுள்ளன. குறிப்பாகத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்பதே அளவில் பெரிய பிரிவாகும். இவ்வியலுள் பாடுபொருளும் யாப்பும் இயைபுடன் விளக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர் எழுந்த இலக்கண நூல்கள், பாடுபொருளிலிருந்து யாப்பிலக்கணத்தை மட்டும் பிரித்துத் தனியாக இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விரு நிலைகளிலும் யாப்புறுப்புகளைத் தொகைவகை செய்தும் உறழ்ந்தும் காட்டும் முறைமைகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் கணக்கியல் எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பொதுவாக, மொழியை (அ) செய்யுளை ஆராயப் புகும் இலக்கணம் என்பது ஓர் அறிவியல் துறையாகும். அதன் அடிப்படையில் பிற அறிவியல் துறைகளைப் போல யாப்பியலிலும் கணக்கியல் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர்க்க இயலாதது.
தமிழில் நவீன உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வளரத் தொடங்கியது. அதுவரை அனைத்துத் துறைசார்ந்த கருத்துகளும் செய்யுள் வடிவத்தில் தாம் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது தமிழர்கள் உரைநடையைவிடச் செய்யுட்களைக் குறுகிய நேரத்திற்குள் பாடி முடித்துவிடும் பழக்கத்தில் இருந்துள்ளனர். தமிழில் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு கணக்கதிகாரம், வானியல் நூல்கள் முதலானவை எழுதப்பட்டுள்ளன. இங்கு அவை குறித்துப் பேசாமல் யாப்பிலக்கணத்தில் கணக்கியலின் பயன்பாடு குறித்து மட்டும் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.
https://www.inamtamil.com/yappiyalum-ka%E1%B9%87akkiyalum/
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு: ஒரு முழுமையான கையேடு தமிழ் மொழியின் சொற்களஞ்சியமாகத் திகழும் நிகண்டு நூல்களில் 'சூடாமணி நிக...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
