ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Truth

Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
                                              - R. Nithya Sathiyaraj

சனி, 5 அக்டோபர், 2013

மழலைச் செல்வம்

என் குழந்தாய்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
                                       - இரா. நித்யா சத்தியராஜ்  

வெள்ளி, 4 அக்டோபர், 2013

பிரதான குருவின்(போப்பின்) தரிசனம் - The Pope's Visit

வாடிகனிலிருக்கும் பிரதான குருவே
அவரது பாதையிலிருக்கும் விமானம்
ஆயிரமைல் தொலைவினிலே
அவரது களங்கமற்ற அங்கியில் தாக்க செய்து
வழுக்கைக் குல்லாய் அணிந்த தலையையும்
அன்பு கனிந்த முகத்தையும்
ஆராய்ச்சியும் ஆர்வமிக்கக் கண்களையும்
சுருண்ட பட்டின்மேல் ஓரடியில்

வியாழன், 3 அக்டோபர், 2013

செல்லரித்த அட்டையாய்.....

மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

முத்துக் குற்றம்

  1. காற்றேறு
  2. மணலேறு
  3. கல்லேறு
  4. நீர்நிலை
ஆகிய நால்வகை முத்துக் குற்றங்கள் காணப்படுகின்றன.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்


உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது. இந்நூற்றாண்டில்  அரசியலாரும், கிறித்துவ மதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும், பாடசாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப் பற்பல பாடங்களைக் கற்பித்தனர். சென்னைக் கல்விச்சங்கம்(Madras College) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும், உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
      இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.

சனி, 28 செப்டம்பர், 2013

பயம்

கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
 மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்

இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
                                               -  இரா. நித்யா சத்தியராஜ்


சூடாமணி நிகண்டு

சூடாமணி நிகண்டு: ஒரு முழுமையான கையேடு தமிழ் மொழியின் சொற்களஞ்சியமாகத் திகழும் நிகண்டு நூல்களில் 'சூடாமணி நிக...