வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு


செல்லுலகில் செல்ல
செவிகெடுக்கும் இன்னிசை
மூளைச் சலவை செய்யும்
நீலவண்ணக் காவியம்
பகுத்தறிவைப் பகடையாக்கும்
பற்பல செயலி விளையாட்டு
மதியை மதிப்பிழக்கச் செய்வன...
உணர்ந்திடு! எழுந்திடு!! விரைந்திடு!!!
வந்தோரை வரவேற்று
வருவிருந்து சிறுதானியமாம்
குழுவாய் அமர்ந்து உண்ண
குறியறிந்து கூடும்!
உழுது உழுது ஓடாய்த் தேய்ந்து
உள்ளதை இல்லையெனாது
அள்ளி அள்ளி வழங்கிய
வள்ளலே அருந்தமிழர்
உலகார் அறிய
வலைப்பூ தொடங்கு!
தமிழரின் அரிய உணவுப் பண்பாட்டைத்
தமிழால் அறிவி!
பானி பொறிக் கலவை
சுவைஞர்கள் மறக்க
சுவைத்தே வலையேற்று
சுவைக்கட்டும் சுவைக்கனியாய்
வலைப்பூ கண்ணே!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


     வலைப்பூவில் உலவட்டும் தமிழர்தம் உணவுப் பண்பாடு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

4 கருத்துகள்:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம்

தமிழ் இலக்கணத் தகவல் களஞ்சியம் இலக்கணம் என்றால் என்ன? இலக்கு + அணம் = இலக்கணம். இலக்கு என்றால் கு...