புதன், 22 நவம்பர், 2023

தொல்காப்பியக் குறுஞ்செயலிக்குப் பரிசு - 7500

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தமிழ் மொழியுடன் இணைக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கில் தொல்காப்பியக் குறுஞ்செயலி உருவாக்கம் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை அளித்திருந்தோம். அந்தக் கட்டுரையின் கருத்தைத் தகவல் தொழில்நுட்ப மாணவர் கோ.பூவேந்திரன் அவர்கள் கருத்தரங்க நாளன்று எடுத்துரைத்தார்கள். அது இரண்டு சுற்றளவில் நடைபெற்றது. இதிலும் வாகை சூடிய எங்கள் கருத்துரு முதல் பரிசைப் பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியதாய் அமைகின்றது. 
நன்றிக்குரியோர்
...........................
கல்லூரி நிருவாகம்
கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள்
முனைவர் அ.வினோத் (கட்டுரையாளர்)
கோ.பூவேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன