செவ்வாய், 28 ஜனவரி, 2020

மொழிபெயர்ப்புக் கலை

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தேன்தமிழ் மன்றம் சார்பாக "மொழிபெயர்ப்புக்கலை"
எனும் தலைப்பில்  மாணவர்களுக்கு மொழித்திறன் வளர்க்கும் விதமாக சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செல்வநாயகி வரவேற்றார். இந்நிகழ்விற்கு நமது கல்லூரியின் முதல்வர் முனைவர். செ.பழனியம்மாள் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராகப்
பேராசிரியர் முனைவர்.பி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பின் வழிமுறைகளைக் கற்பித்தார். தமிழ், மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு மாணவர்கள் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பின் தேவையையும் பயன்களையும் வேலைவாய்ப்பையும் அறிந்துகொண்டு பயன் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன