சனி, 22 பிப்ரவரி, 2014

மதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு


மு. அய்யனார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் உயராய்வு நடுவம்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி -24
தமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார் முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும் முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார். குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர் கொண்ட இலக்கியமாக விளங்குவது காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும் இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,

புதன், 29 ஜனவரி, 2014

கழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு


                                                                   குபேந்திரன்
                                                                       இளம் ஆய்வாளர்
                                                                       அழகப்பா பல்கலைக் கழகம்
                                                                       காரைக்குடி
முன்னுரை
          சங்க இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில் ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர் தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள  திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும் இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்


முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழ் நெடுங்கணக்கு:  தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்.
பதிவுகள் இதழில் 2014 சனவரித் திங்கள் 19ஆம் நாள் வெளியிடப் பெற்றது.

கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

1.0. முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,
1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு

2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

களாபூரணோதயத்தில் உவமைகள்

                                                                                                                                - இரா. நித்யா
1.0 முன்னுரை
தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2.0 பிங்களிசூரனாரும் களாபூரணோதயமும்
தெலுங்கு இலக்கிய பிரபந்தங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கிருட்டிணத்தேவராயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சார்ந்த  சேச்சுப்பியருக்குச் சமகாலத்தவரும் ஆவார். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரானாலும் வைணவக் கருத்துகள் மிகுந்த களாபூரணோதயத்தை (திருமாலை வழிபடக்கூடிய கிருட்டிணத்தேவராயரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது) எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கவிதைப்போக்கு பிரபந்தம் இயற்றுவதாகும். இது இலக்கியத்தின் உயிர்நாடி போன்றது. இதனை இயற்றுவதில் அட்டதிக்கசங்கள் (எண்திசைப் புலவர்கள்) என்றழைக்கப்பட்ட புலவர்களே சிறந்து விளங்கினர். அவ்வட்டதிக்கசங்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் இராகவபாண்டவியம் (சிலேடைக் காவியம்), பிரபாவதி பிரத்தியுமனம், களாபூரணோதயம் ஆகிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.
மேலும் வாசிக்கhttp://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1840:2013-11-23-05-28-07&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19 (பதிவுகள் இதழில் வெளியிடப்பெற்ற கட்டுரை)

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலு என இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம். அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோக வடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருவள்ளுவரும் கிரேக்க அறிஞர்களும் [சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ]

முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டு. மொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம். மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர். இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புதன், 20 நவம்பர், 2013

எதற்கு?

                                                                                                                                  - த. சத்தியராஜ்
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் புரட்சி மிகுந்த சிந்தனைகளைத் தெலுங்கு மக்களிடையே பரப்பி வந்தார் வேமனா. இவரின் சிந்தனைகளை அறியாத தெலுங்கரே இல்லை எனலாம் என்பர். அந்த அளவிற்கு அவருடைய கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. அவர் சிறந்த ஞானியாகவும் திகழ்ந்துள்ளார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கேடு


முகப்பு
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சனி, 9 நவம்பர், 2013

தாயின் கண்ணீரும் குமுறலும்


பாலூட்டி சோறூட்டி 
தாலாட்டி சீராட்டி 
என் செல்லத்தை வளர்த்தேனடா 
இழவுக்குப் போய் திரும்ப 
இழவடா எம் இல்லத்து 
மானத்தைப் பறித்த கயவனே 
உயிரையும் அல்லவா பறித்திட்டாயடா 

சனி, 2 நவம்பர், 2013

விழாவா? உடல் நலமா?

சுவாசத்துக்குக் கேடு
செவிக்குக் கேடு
திடமனத்திற்குக் கேடு
காற்றுக்குக் கேடு
பட்டாசெனும் வெடியாம்! - அதை

சில்லரை மனிதனடா

எனக்குத் தீபஒளி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை

அவனின் உருவாக்கம்

அவனின் எல்லையிலாக் காதல்
அவனை உருவாக்கியது
குற்றமுள்ள மனிதர்களால் கிளித்தெரியப்படவில்லை
பாலைவனத்தில் வீசும் காற்றினால் சுத்தம் செய்யப்படவில்லை

சனி, 26 அக்டோபர், 2013

கடிகாரம்


மூலம்: கன்னடம் (தினகர தேசாயி)
தமிழில்: சே. முனியசாமி
                
நேரத்துக்குச் சொந்தமே கடிகாராம்
வெள்ளியின் நிறத்து வட்ட உருவமே
நேரத்தை அறிவதற்கு நீ ஆதாரம்
டிக் டிக் நண்பனே டிக் டிக் டிக்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஆதிகவி பம்பா

மூலம்: கன்னடம்
தமிழில்: சே. முனியசாமி
இந்தியாவில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. பல மொழிகள் காணப்படினும் அதில் சிறப்பு வாய்ந்தவை சிலவே. ஏனெனில் பல மொழிகள் பேச்சுமொழிகளாக  காணலாகின்றன. இத்தகைய மொழிகளுக்கு   எழுத்து வடிவம் இல்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனிச்சிறப்பு உண்டு.  இம்மொழி  கர்நாடக மாநிலத்தில் பேசப்படுகிறது. இக்கன்னட மொழியில் பழமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்கள் மிகுந்து காணலாகின்றன. இருப்பின் அம்மொழியின் முதல் கவியாக திகழ்பவர் பம்பா.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஒன்பான் துளைகள்

நம் உடலில் ஒன்பது வகைத் துளைகள் உள்ளன. அவை:

  1. கண் - 2
  2. காது - 2
  3. மூக்கு
  4. வாய்
  5. குதம்
  6. குய்யம்
  7. கொப்பூழ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்ன? என்பதையும், அக்காலத்தில் தமிழ்ச்சூழல், தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வியாழன், 17 அக்டோபர், 2013

மனநோய்

                                                                                                  - த. சத்தியராஜ்
    இவ்வுலகில் வாழும் மனிதர் அனைவரும் மனநோய் உடையவர்களே. அந்நோயின் வெளிப்பாடு அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும். அவ்விருப்பம் மட்டுமே மனநோயாகாது. தற்சிந்தனையின்மையும் அதன்பாற்படும் என்பது தெலுங்குக் கவிஞர் வேமனாவின் எண்ணம். அவர்,

வெள்ளி, 11 அக்டோபர், 2013

திருக்குறளின் பழைய உரையர் பதின்மர்


  1. தருமர்
  2. மணக்குடவர்
  3. தாமத்தர்
  4. நச்சர்
  5. பரிதி

உருவம்

மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
                                                 - இரா. நித்யா சத்தியராஜ்

வியாழன், 10 அக்டோபர், 2013

தாய்மை

தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
                                                   - இரா. நித்யா சத்தியராஜ்

தந்தைமொழி

குழந்தையாக இருந்தபோது
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
                                         - இரா. நித்யா சத்தியராஜ்

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு



-       . சத்தியராஜ்

கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்

பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை. இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute) என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும் வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும்  பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கணவன் மனைவி உறவு

சிறு சிறு கண்டிப்பு
சிறு சிறு அரவணைப்பு
சிறு சிறு கேலிப்பேச்சு
சிறு சிறு கிண்டல் பேச்சு
சிறு சிறு அறிவுரை

காதற்கிழவன்

என்னால் முடியாது
உங்கள் உதவியில்லையேல்
என் காதற்கிழவனே
எனது முன்னேற்றத்தில்
உங்கள் பாங்கு முக்கியப் பங்கு
                                                              - இரா.நித்யா சத்தியராஜ்


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Truth

Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
                                              - R. Nithya Sathiyaraj

சனி, 5 அக்டோபர், 2013

மழலைச் செல்வம்

என் குழந்தாய்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
                                       - இரா. நித்யா சத்தியராஜ்  

வெள்ளி, 4 அக்டோபர், 2013

பிரதான குருவின்(போப்பின்) தரிசனம் - The Pope's Visit

வாடிகனிலிருக்கும் பிரதான குருவே
அவரது பாதையிலிருக்கும் விமானம்
ஆயிரமைல் தொலைவினிலே
அவரது களங்கமற்ற அங்கியில் தாக்க செய்து
வழுக்கைக் குல்லாய் அணிந்த தலையையும்
அன்பு கனிந்த முகத்தையும்
ஆராய்ச்சியும் ஆர்வமிக்கக் கண்களையும்
சுருண்ட பட்டின்மேல் ஓரடியில்

வியாழன், 3 அக்டோபர், 2013

செல்லரித்த அட்டையாய்.....

மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்


உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது. இந்நூற்றாண்டில்  அரசியலாரும், கிறித்துவ மதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும், பாடசாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப் பற்பல பாடங்களைக் கற்பித்தனர். சென்னைக் கல்விச்சங்கம்(Madras College) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும், உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
      இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.

சனி, 28 செப்டம்பர், 2013

பயம்

கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
 மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்

இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
                                               -  இரா. நித்யா சத்தியராஜ்


உயர் கல்வியின் நிலைப்பாடுகள்


அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தமிழில் விழிப்பே இல்லை

  சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

மனித இயல்பு

அனுபவ
வார்த்தைகளை
கேட்க மறுக்கும் மனமே
அனுபவித்து
அறிந்து கொள்வது ஏனோ?
                                                           - இரா. நித்யா சத்தியராஜ்  

ஐவகைக் கூந்தல்


  1. முடி
  2. கொண்டை
  3. சுருள்
  4. குழல்
  5. பனிச்சை

கொடைஞர் 21பேர்

முதல் ஏழு கொடைஞர்
  1. குமணன்
  2. சகரன்
  3. சகாரன்
  4. செம்பியன்
  5. துந்துமாரி
  6. நளன்
  7. நிருதி

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

திங்கள், 23 செப்டம்பர், 2013

நெல்லையும் முல்லையும்

கூட்டுடன்படிக்கை அல்ல அது
நாட்டை அடக்கும் படையெடுக்கை
கூவி கூவி கூறு போட்டு விற்கும்
அந்நியன்தானே சூதுள்ள சூனியக்காரன்
ரஷ்யா ஒப்பந்தம்
ராட்சத நிர்பந்தம்

மொழிகள்

இளமையில் காதல்
மொழிகள்...
முதுமையில் அனுபவ
மொழிகள்...
                                            - இரா. நித்யா சத்தியராஜ் 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

முத்துப் பிறக்குமிடங்கள்


  1. நந்து
  2. சங்கு
  3. மீன்தலை
  4. கொக்கு
  5. தாமரை
  6. மகளிர் கழுத்து
  7. செந்நெல்
  8. மூங்கில்
  9. கரும்பு
  10. பசுவின்பால்
  11. பாம்பு
  12. இப்பி
  13. மேகம்
  14. யானைக் கொம்பு
  15. பன்றிகொம்பு
  16. கமுகு
  17. வாழை
  18. சந்திரன்
  19. உடும்பு
  20. முதலை

பெரியோருக்குரிய இயல்பான ஏழு குணங்கள்


  1. அறம்
  2. பொருள்
  3. இன்பம்
  4. அன்பு
  5. புகழ்
  6. மதிப்பு
  7. பொறுமை

சனி, 21 செப்டம்பர், 2013

செத்தும் பிழைத்தும்

உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
என் கவிதை
பிழைத்துக் கொண்டிருக்கிறது.
                                                                  - சே. முனியசாமி

தமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில

 இந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனம் வழங்கும் மென்பொருள்கள் பயனுடயதாகவே அமைவதைக் காணலாம். மேலும் அந்நிறுவனம் இலவயமாக மென்பொருள் அடங்கிய குறுந்தட்டையும் அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவிறக்கம் செய்யக்கூடிய சில மென்பொருள்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மெழுகுவர்த்தியே வெளிச்சம் கொடு (Light a Candle)

நீ எங்களிடம் கடிந்துகொள்
நீ எங்களை நல்நெறியில் செலுத்து
நீ எங்களுக்கு மாறாக செயல்படு
நீ எங்களை எதிர்த்து நில்
இந்த உலகமே உன்னிடம் பைத்தியம்

ஒரு மணி நேரம்

நிர்ணயிக்கப்பட்ட
நேரம் பேச
ஒப்புக்கொண்டாய்.
ஒரு மணி நேரம்
முன்னதாகவே - என்
பணிகளை ஒத்திக்கு விடுகிறேன்
நீ.....  நீ.......
பேசியது
சில நிடங்கள் மட்டும்.
பேசிய பின்பு
அடுத்த ஒருமணி நேரத்தை
பேசப்பட்ட
உம் நினைவால் கழிக்கிறேன்
ஏன்?
                                                                - சே.முனியசாமி(muniyasethu@gmail.com)

வியாழன், 19 செப்டம்பர், 2013

உபரியாய்...

எந்த பணியும்
முழுதாய் செய்யவில்லை
என்ன பணி செய்தாலும்
என் நேரத்தை
நீ முக்கால் வாசி பங்கு போடுகிறாய்
ஆனால்...
உனது பணி பூர்த்தியாய் விடுகிறது
எனது பணி உபரியாகிவிடுகிறது
ஏன்?          
                          - சே. முனியசாமி 

கருத்துப் புலப்பாட்டு நிலையில் கொடிச்சி


-       த.சத்தியராஜ்
 
சங்கப் பாடல்களில் கொடிச்சி, கொடிச்சியர் என்றாயிரு சொல்லாட்சிகள் காணப்பெறுகின்றன.  அவற்றிற்கு உரையாசிரியர்கள் கொடிச்சி, குறப்பெண், குறமகளிர், குறிஞ்சிநிலப் பெண் என்பதாகப் பொருளமைவு கொண்டுள்ளனர்அகர முதலிகளோ குறத்தி, கொடிச்சி, இடைச்சி முதலியப் பல்வேறு பொருள்கள் தந்து விளக்கம் அளித்துள்ளன.  எனவே, ஈண்டு கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப் பெண்டிரைக் குறித்து வந்தனவா அல்லது இடைச்சி என்ற அளவில் நின்றனவா என இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றது.

புதன், 18 செப்டம்பர், 2013

மகளிரால் மலரும் பத்து மரங்கள்


  1. மகிழம் (மகளிர் சுவைத்தால் மலர்வது)
  2. ஏழிலைம் பாலை (நட்பாட மலர்வது)
  3. பாதிரி (நிந்திக்க மலர்வது)
  4. முல்லை (நகைக்க மலர்வது)
  5. புன்னை (ஆடுவதால் மலர்வது)
  6. குரா (அணைக்க மலர்வது)
  7. அசோகு (உதைக்க மலர்வது)
  8. குருகத்தி (பாட மலர்வது)
  9. மரா (பார்க்க மலர்வது)
  10. சண்பகம் (நிழல்பட மலர்வது)

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

திங்கள், 16 செப்டம்பர், 2013

தெலுங்கும் அதன் இலக்கணங்களும்


தென்னிந்திய ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற மொழியாக விளங்குவது தெலுங்கு. இம்மொழிஇந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்று. இது தமிழ்நாடுகர்நாடகம் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9,30,00,000 (93மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். இம்மொழி 2008ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிற்கு எழுத்து வடிவிலான இலக்கிய (ஆந்திர மகாபாரதம்) இலக்கண வளங்களின் தொடக்கம் கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டு என்பது அதன் வரலாறு காட்டும் உண்மை. அதன்பின்பு அதன் வளர்ச்சி அளவிடமுடியாத அளவிற்கு பரந்து விரிந்தது/ விரிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பும் இலக்கிய இலக்கண வளங்கள் இருந்தமையையும் சுட்டத் தவறவில்லை. அதன் இலக்கிய வரலாற்றை,
  1. நன்னயருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை, 2
  2. புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
  3. ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
  4. பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
  5. தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
  6. நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை
எனப் பாகுபடுத்திப் பார்ப்பர்.
 இலக்கண வளத்தின் தொடர்ச்சி ஆந்திரசத்தசிந்தாமணியிலிருந்து தொடங்குகிறது. எவ்விதம் இருப்பினும் அதற்கு முன்பும் ஒரு பரந்துபட்ட இலக்கணமரபு உண்டென்பது அதன் வரலாறு காட்டும் மற்றொரு உண்மை (லலிதா, தெலுகு வியாகரண சரித்திரம், 1996). இக்கட்டுரை தெலுங்கு மொழிக்குரிய இலக்கணங்களை லலிதா அவர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தித் தமிழில்  பட்டியலிட்டுக்காண்பிக்க முயலுகிறது. 
  இக்கட்டுரை கீற்று இதழில் 9/9/2013(திங்கள்) அன்று வெளியிடப் பட்டுள்ளது. அக்கட்டுரையை மேலும் வாசிக்க:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24867:2013-09-09-08-21-30&catid=1:articles&Itemid=264 எனவரும் பக்கதிற்குச் செல்லவும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

1.0 முகப்பு
ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

 இக்கட்டுரை 10. 09. 2013 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியிடப் பெற்றதாகும். ஆக, அக்கட்டுரையை மேலும் வாசிக்க: http://www.geotamil.com/pathivukalnew/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=1708:2013-09-10-03-09-03&tmpl=component&print=1&layout=default&page= என வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.




வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வேமனாவின் பார்வையில் பறையர்

வேமனா தெலுங்கு இலக்கியப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சாதிமுறையைக் கண்டித்தவர். இவர் ஆந்திர நாட்டில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் கவிகளில் இலக்கணத்தைக் காணவியாலது. இருப்பினும் படிக்கப்படிக்க இன்பம் தருபவை. இவருடைய மணிமொழிள் அவரின் சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. அவற்றுள் சில மணிமொழிகள் பறையர் பற்றிக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

பறையன் இறைச்சியைப் புசிக்க
மற்றவர் நெய்(கொழுப்பு) குடிக்கிறாரன்றோ
குலமனைத்தும் ஓர் குலம் என அறிவீர்!
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 49

பறையன் அல்லன் பறையன்
பேச்சு தவறுபவன் பறையன்
அவனைப் பறையன் என்பவன் பறையன்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 50

பறையனை ஏன் இகழ்வது
உடலிலுள்ள இறைச்சி ஒன்றல்லவோ!
அவனுள் ஒளிக்குமவன் குலம் என்ன?
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 51

வைக்கோலைத் தின்னும் பசுவின் இறைச்சியை உண்ணப்
பறையனவன் என்று கூறுவர் மக்கள்.
பன்றி கோழிகளை உண்ணுபவனை நல்லவனென்பர்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 102


பார்வை: சர்மா சி.ஆர்., 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம், ஐதராபாத்து.




   

வியாழன், 12 செப்டம்பர், 2013

அகச்சமயங்கள் ஆறு

1. பாடாணவாத சைவம்
2. பேதாவத சைவம்
3. சிவசமவாதி சைவம்
4. சிவ சங்கிராந்தவாத சைவம்
5. ஈசுவர அவிகாத சைவம்
6. சிவாத்துவித சைவம்

புதன், 11 செப்டம்பர், 2013

திங்கள், 9 செப்டம்பர், 2013

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சனி, 7 செப்டம்பர், 2013

அட்டபந்தனம்

  1. கருங்குங்கிலியம்
  2. வெள்ளைக் குங்கிலியம்
  3. சுக்காங்கல்
  4. தேன்மெழுகு
  5. செம்பஞ்சு
  6. கொம்பரக்கு
  7. காவிக்கல்
  8. வெண்ணெய்
இந்த எட்டையும் முறைப்படி சேர்த்து செய்வதே அட்டபந்தனம் எனும் கலவையாகும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

எண்வகைச் செல்வங்கள்


  1. தனலட்சுமி
  2. தானியலட்சுமி
  3. தைரிய லட்சுமி
  4. சௌரிய லட்சுமி
  5. வித்தியா லட்சுமி
  6. விசய லட்சுமி
  7. கீர்த்தி லட்சுமி
  8. இராச்சிய லட்சுமி

வியாழன், 5 செப்டம்பர், 2013

அட்டமா சித்தி


  1. அணிமா(ஆன்மாப் போலாதல்)
  2. மகிமா(பேருக் கொள்ளுதல்)
  3. கரிமா(இரும்பு மலையினும் கனத்தல்)
  4. இலகிமா(பஞ்சினும் இலேசாதல்)
  5. பிராத்தி(வேண்டுவன அடைதல்)
  6. பிராகாமியம்(நினைத்த போகமெல்லாம் பெறுதல்)
  7. ஈசத்துவம்(யாவர்க்கும் தேவனாதல்)
  8. வசித்துவம்(யாவரும் வணங்க நிற்றல்)

புதன், 4 செப்டம்பர், 2013

இந்திய தேசிய உடைமை வங்கிகள்


  1. அலகாபாத்து வங்கி - கல்கத்தா
  2. ஆந்திரா வங்கி - ஐதராபாத்து
  3. இந்தியன் ஓவர்சிசு வங்கி - சென்னை
  4. இந்தியன் வங்கி - சென்னை
  5. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - புதுதில்லி
  6. கனரா வங்கி - பெங்களூர்
  7. கார்ப்பரேசன் வங்கி - உடுப்பி
  8. சிண்டிகேட் வங்கி - மணிபால்
  9. செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  10. தேனா பாங்க் - பம்பாய்
  11. நியூ பாங்க் ஆப் இந்தியா - புதுதில்லி
  12. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி - அமிர்தசரசு
  13. பஞ்சாப் நேசனல் பாங்க் - புதுதில்லி
  14. பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  15. பேங்க் ஆப் பரோடா - பரோடா
  16. பேங்க் ஆப் மகாராட்டிரம் - புனா
  17. யுனைடெட் கர்சியல் பேங்க் - கல்கத்தா
  18. யுனைடெட் கர்சியல் பேங்க் ஆப் இந்தியா - கல்கத்தா
  19. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  20. விஜயா பேங்க் - பெங்களூர்
இவையாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஐவகை மெத்தைகள்


  1. அன்னத்தூவி
  2. இலவம்பஞ்சு
  3. செம்பஞ்சு
  4. மயில்தூவி
  5. வெண்பஞ்சு

எவ்வாறு வாசிக்க வேண்டும்?

  பொதுவாக, எப்படிப் படிக்க வேண்டும் என்ற கருத்துக்களை எந்தவொரு தமிழ்த் தொகை நூல்களும் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் பிராக்கிருதம் போல்வன மொழிகளில் தொகுக்கப் பெற்ற தொகைநூல்கள் அத்தொகை நூல்களை எவ்வாறு வாசிக்கவேண்டும் என சுட்டத் தவறவில்லை எனலாம். இப்பணியைத் தமிழில் இலக்கணங்கள்தான் செய்து வந்தன. இலக்கியங்களில் திருக்குறள் போல்வன கல்வி என்ற தலைப்பில் பதிவு செய்கின்றமையைக் காணலாம்.
     பிராக்கிருத மொழியில் எழுதப் பெற்ற நூலே வஜ்ஜாலக்கம். இதனைத் தமிழில் வைரப்பேழை எனக் கூறலாம் என்பார் மு. கு.ஜகந்நாதராஜா. இக்கவித் தொகுப்பில் இடப்பெறுவதே எவ்வாறு ஒரு கவிதை நூலை வாசிக்க வேண்டும் எனும் கருத்தியல். அக்கருத்தியல் வருமாறு:
        1. நிறுத்திப் படிக்க இயலாமை, சுவையறியாதிருத்தல், இடமறிந்து படிக்காமை, மூக்கால் வாசித்தல், விரைவாக வாசித்தல், வாய்தவறி வாசித்தல், ஈடுபாடின்மை - இவை படிப்பவரின் குறைபாடுகள் ஆகும்.(28)
    2. இயற்சொல், இன்சொல், சந்தம், நடை, மென்மை, தெளிவு, பொருட்புலப்பாடு இவற்றுடன் கூடியதாக பாகதக் கவிதைகளை படிக்கவேண்டும்.(29)
 இவ்வாறு இவை வரையறுத்துக் கூறவேண்டிய காரணம் ஒன்றே. அது இன்பத்துக் கவிகள் என்பதாலேயாம்.