திங்கள், 21 அக்டோபர், 2019

5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம்

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து ஒருங்கிணைக்கும் 5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம் திசம்பர் 12, 2019 அன்று நிகழவுள்ளது. இதின் இனம் இணைய ஆய்விதழும் பங்கேற்கிறது. இனம் பதிப்புக்குழுவால் தெரிவுசெய்யப்பெறும் கட்டுரைகள் இனம் இணையப் பக்கத்தின் சிறப்பு வெளியீட்டுப் பக்கத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற வேண்டும் என எண்ணுபவர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றித் தரம் மிக்க ஆய்வுக் கட்டுரையாக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கவும். இதற்கு வாய்ப்பளித்த கல்லூரி நிருவாகத்தாருக்கும், முதல்வர் (முனைவர் கார்த்திகேயன்) அவர்களுக்கும், துறைத்தலைவர் அவர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும் நன்றி உரியது.

சித்திரம் பேசுதடி

காலத்தை   வென்றுநிற்கும்   மல்லப் பாடி

    கற்பாறை   குகையொளிரும்   சித்தி ரங்கள்

ஞாலத்தின்   மூத்தகுடி தமிழர்  என்னும்

    ஞாயத்தைப்  பேசுகின்ற ஆவ   ணங்கள்

கோலத்தைக்   கண்டின்றும்   வியந்து போகக்

    கொலுவிருக்கும்   பல்லவர்தம் மாமண்   டூரும்

சீலமுடன்   மாமல்ல புரத்தி   ருக்கும்

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

தமிழ் தேடல்

(6.10.19) இன்று செயங்கொண்ட சோழபுரம் மருத்துவர் இரா.அன்பழகன் அவர்களின் கடின முயற்சியில் உருவாகியிருக்கும் தமிழ் தேடல் வலைத்தளம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்குந்தர்புரம் அன்னை தெரசா மகளிர் பள்ளியில் நிகழ்ந்தது. இவ்வலைத்தளம் ஒரு தொடக்கப் புள்ளி.  இதில் 72 நூல்கள் பதிவேற்றம் செய்யப் பெற்றுள்ளது. இவ்வலையேற்றத்தின் சிறப்பு என்னவெனில் படிப்பதற்கு, தேடுவதற்கு, பதிவேற்றுவதற்கு/திருத்துவதற்கு எனக் கட்டமைக்கப்பெற்றுள்ளமை ஆகும்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

சிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(PANDIYAS MYTH BASED ON THE INDUS CIVILIZATION – MEGALITHIC EVIDENCES)

முனைவர் க.பாலாஜி/Dr.G.Balaji

Abstract: The myths of the Pandya’s are prevalent in Indian literature. The Pandya’s myths are explicitly represented in the Chinnamanur copper plate, the Shatapathapramana,  Mahabharata, and the Tamil Talapuranas. The references to the tsunami reported in the Tamil literature can be considered as oral myths. The Pandiya’s are the symbolic fish symbols found in the Indus Valley script and the Tamil Nadu megalithic Pottery. The above two archaeological places are directly related to the same linear codes. These codes are still available in excavations in Sri Lanka and Tamil Nadu. In his excavations, Harappa archaeologist Vasant Shinde has clearly established that the genomes of the irulas and thodas ethnic groups living in South India match the bones found in Harappa. The Pandya’s have migrated north due to a tsunami that occurred around the same time. The event has become a mythical stories in Indian literature and mythology.

இனம்: மலர் - 5, இதழ் -18

இனம்:
பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
Inam:
International E-Journal of Tamil Studies
--------------------------------------------
e-ISSN : 2455 - 0531
UAN.TN03D0061112 
.................................................
ஆகஸ்ட் 2019
மலர் : 5    இதழ் : 18
August 2019
Volume V Issue 18
..............................................
உள்ளே ...

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (மலர் - 5, இதழ் - 17)

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் ஐந்தாம் ஆண்டில் தடம் பதிக்கிறது.
பல்வேறு மாற்றங்களுடன் பதினேழாம் பதிப்பை வெளிக்கொணர்ந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெறும் கட்டுரைகளின் பட்டியல் வருமாறு:

வியாழன், 13 டிசம்பர், 2018

மதிப்பிற்குரிய ஆசிரியரைப் போற்றுகின்ற ஒரு மாண்புமிகு மாணவனின் கவிதை

நான் அறிவைப் பெற்றேன்
உன்னை ஆசானாய்ப் பெற்றதால் உங்கள் உரையாடல்
இந்த உலகத்தின் உண்மையை உணர்த்தின
உங்கள் கேள்விகள்
எங்கள் உள்ளத்தைப் பாதித்தன என்ன தவம் பெற்றேன்
என அறிய இயலேன்
என்னால் முடிந்தவரை
இதனைப் பிறர்க்கு
எடுத்துரைக்க முயல்வேன்

- மாணவன் விக்னேஷ் பிரபு
பி.காம்.சி.ஏ., இ பிரிவு
முதலாம் ஆண்டு
வணிகவியல் துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்

சனி, 27 அக்டோபர், 2018

பாலபோதினி 3


அஃறிணைப்பால்.-ஒன்றன்பால், பலவின்பாலென விரண்டும் அஃறிணைக்குரியவைகளாம். அஃறிணையில் ஆண் பெண் என்ற பகுப்பில்லை. ஆணாயிருந்தாலும் அல்லாததாயிருந்தாலும் ஒன்றைக் குறித்தால் ஒன்றன் பாலென்றும், மேற்பட்டவற்றைக் குறித்தாற் பலவின் பாலென்றுஞ் சொல்லப்படும்.
- ம். அது வந்தது - ஒன்றன்பால். 
அவை வந்தன - பலவின்பால்.

ஒருமை - பன்மை; எந்தத் திணையிலும் ஒருபொருளைக் குறிப்பது ஒருமையென்றும், மேற்பட்ட பொருளைக் குறிப்பது பன்மையென்றும் சொல்லப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பாலிம் மூன்றும் ஒருமை. பலர்பால், பலவின்பால் இவ்விரண்டும் பன்மை.

இடம். -இடமாவது, சொற்கள் நிகழ்கின்ற ஸ்தானம். அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.
சொல்லுபவன் தன்மையிடம்.
-ம். நான் வந்தேன்.
கேட்பவன் அதாவது முன்னிற்பவன் முன்னிலையிடம்.
- ம். நீ வந்தாய்.
பேசப்படும் பொருள் அதாவது யாரை, அல்லது எதைப்பற்றிப் பேசப்படுகிறதோ அப்பொருள் படர்க்கையிடம்.
- ம். அவன் வந்தான்; மரம் வளர்ந்த்து.

சொற்கள்.- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனத் தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும்.

வியாழன், 25 அக்டோபர், 2018

பாலபோதினி 2

பாலபோதினி.

முதலாவது
சொல்லதிகாரம்.

சொல்.-சொல்லாவது, இருதிணையிலும், ஐந்துபாலிலும் உள்ள பொருள்களை மூன்றிடங்களிலும் நின்று விளக்குவதாம்.

திணை.-திணையென்றால் ஜாதி. அது உயர்திணை, அஃறிணையென இருவகைப்படும். உயர்திணை உயர்வாகிய ஜாதி. அஃறிணை = அல்+திணை, =அல்லாத ஜாதி. அதாவது தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவை.

உயர்திணை.-மக்கள், தேவர், நரகர் உயர்திணையாம். மக்கள் = மனிதர்கள்.

அஃறிணை.-அம்மக்கள் தேவர் நரகரையல்லாதவை உயிருள்ளவையா யிருந்தாலு மில்லாதவையா யிருந்தாலு மஃறிணையாம்.

பால்.-பாலென்பது, மேற்சொல்லிய உயர்திணை அஃறிணைப் பொருள்களின் பகுப்பு. அது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும்.

உயர்திணைப்பால்.-ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்குரியவைகளாம்.
  உ - ம்.   அவன் வந்தான் - ஆண்பால்.
        அவள் வந்தாள்  - பெண்பால்.
        அவர் வந்தார்     - பலர்பால்.
ஒரு ஆணைக் குறித்தால் அது ஆண்பாலென்றும், ஒரு பெண்ணைக் குறித்தால் அது பெண்பாலென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ் சொல்லப்படும்.

பாலபோதினி 1

பாலபோதினி.


கோயமுத்தூர், தமிழ்ப்பண்டிதர்
. தி ரு ச் சி ற் ம் ம் பி ள் ளை
அவர்களால் இயற்றப்பட்டு,


.சுப்பிரமணியமுதலியாரால்,


சென்னை :
வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
 


1900.
(All Rights Reserved)

வெள்ளி, 29 ஜூன், 2018

Life is a Game


Life is a Game,
                ……… Enjoy it!
                ……… Play it!
                ……… Win it!

“Love yourself,
   All the great things Love you”

“Delete your enemy list,
By adding friendship with them”

“Think all of them are your BROTHERS and SISTERS,
Then it will be very easy to lead a LIFE”

திங்கள், 25 ஜூன், 2018

யாப்பியலும் கணக்கியலும்

இலக்கணச் செம்மை மிக்க மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. இதன் மரபிலக்கணங்கள் செய்யுளாக்கம் குறித்துத் தனிச்சிறப்பாகப் பேசியுள்ளன. குறிப்பாகத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்பதே அளவில் பெரிய பிரிவாகும். இவ்வியலுள் பாடுபொருளும் யாப்பும் இயைபுடன் விளக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர்  எழுந்த இலக்கண நூல்கள், பாடுபொருளிலிருந்து யாப்பிலக்கணத்தை மட்டும் பிரித்துத் தனியாக இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விரு நிலைகளிலும் யாப்புறுப்புகளைத் தொகைவகை செய்தும் உறழ்ந்தும் காட்டும் முறைமைகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் கணக்கியல் எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பொதுவாக, மொழியை (அ) செய்யுளை ஆராயப் புகும் இலக்கணம் என்பது ஓர் அறிவியல் துறையாகும். அதன் அடிப்படையில் பிற அறிவியல் துறைகளைப் போல யாப்பியலிலும் கணக்கியல் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர்க்க இயலாதது.
தமிழில் நவீன உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வளரத் தொடங்கியது. அதுவரை அனைத்துத் துறைசார்ந்த கருத்துகளும் செய்யுள் வடிவத்தில் தாம் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது தமிழர்கள் உரைநடையைவிடச் செய்யுட்களைக் குறுகிய நேரத்திற்குள் பாடி முடித்துவிடும் பழக்கத்தில் இருந்துள்ளனர். தமிழில் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு கணக்கதிகாரம், வானியல் நூல்கள் முதலானவை எழுதப்பட்டுள்ளன. இங்கு அவை குறித்துப் பேசாமல் யாப்பிலக்கணத்தில் கணக்கியலின் பயன்பாடு குறித்து மட்டும் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.
https://www.inamtamil.com/yappiyalum-ka%E1%B9%87akkiyalum/

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை

எந்த ஒரு படைப்பாளியும்ஒரு படைப்பில் அடைய வேண்டிய உச்ச நிலையை நோக்கியதேடலில் ஈடுபடாமல் இருக்க இயலாதுஅத்தகைய அவர்களின் தேடல்கள்பிற படைப்பாளியைப்பற்றிக் கூறுகிற கூற்றுக்கள்இலக்கியம் பற்றிய ஆழமான கணிப்புக்களாக அமைந்துகிடக்கின்றன என்று .பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார்அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறதுஇருப்பினும் சிற்சில முரண்களும்பிழைகளும் இல்லாமல் இல்லைஇது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறதுதொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும்அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (ONE BELT ONE ROAD) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு

இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேண்தகு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கை நாடானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அந்நிய நாட்டவரின் கைக்குள் சொல்பேச்சுக் குழந்தையாகிச் சிக்கித் தவித்தது. அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் என்ன பயன்? இன்று சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி என்னும் பெயரில் உலக நாடுகளின் சதிவலைகளில் இலங்கையும் வீழ்ந்திருக்கிறது.

வாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்

இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல் காணப்பெறவில்லை. ஆனால், இச்சொல் ஒரு தெளிவான பொருளுடையது. இருப்பினும், இது தீண்டத்தகாத, கெட்ட வார்த்தையாக மாறியது எப்போது? என்ற வினா ஆய்ந்து சிந்தித்தற்குரியது.
பாலியல் = பால் + இயல். இச்சொல் ஒவ்வொரு பாலுக்குமான (ஆண்பால், பெண்பால்) இயல்பைக் குறிக்கக்  கூடியது என்று இதற்குப் பொருள் குறிக்கலாம். உயிரினங்களின் இயல்புகள் குறித்து நோக்கினால், அவற்றின் முக்கிய இயல்பாகக் கருதப்பெறுவது இனப்பெருக்கமாகும். இந்த இனப்பெருகத்திற்குப் பாலியலறிவு கட்டாயம் தேவை. இந்த அளவிற்கு முக்கியமான சொல்லைத் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியது நம் அறியாமையன்றி வேறென்ன?

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

சங்ககால மக்களின் வாழ்வியலில் மனிதம்

மனிதம் மண்ணுலத்தில் இருப்பதால் இன்னும் உலகம் எழிலாகவும் வளமாகவும் இருக்கிறது. மனித செயல்பாடுகளில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் காட்டும் அன்பு தான் மனிதம் எனலாம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் மிகச் சரியாகக் கணிக்கிறார். சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் வெளிப்படுத்தும் மனிதப்பண்புகளை இனங்கண்டு வெளிப்படுத்துகின்றது இக்கட்டுரை.

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்

ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும்  இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால், வயது முதலியவற்றின் அடிப்படையில் ஒரு மொழியில் கிளைமொழிகள் அமைவதை மொழியியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தமிழ்ச்சூழலில் வட்டாரம், சமூகம் சார்ந்த கிளைமொழிகள் தெளிவாக அமைந்துள்ளன. அதாவது, சென்னையில் பேசப்படும் தமிழுக்கும் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் தமிழுக்கும் காவிரி டெல்டா பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிளைமொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு

செவ்விலக்கிய நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகைக்குப் பல பதிப்புக்களும் உரைகளும் வெளிவந்துள்ளன. அதேபோல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருப்பத்தோராம் நூற்றாண்டு வரையிலும் அந்நூல் குறித்துக் கட்டுரைகளும், நூல்களும் பல எழுதப்பட்டுள்ளன. நூல்களின் அமைப்பு நிலைகளுக்கேற்ப அவற்றினை அறிமுக நூல்களாகவும், விளக்கவியல் நூல்களாகவும், இரசனைசார் நூல்களாகவும், திறனாய்வு நூல்களாகவும் வகைப்படுத்தலாம். அவ்வகையில்  ஆ.மணி என்பவர் ‘குறுந்தொகைத் திறனுரைகள்’ எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது எவ்வகை நூல் என்பதனை அறிமுகப்படுத்தி, மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.