செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

நுண்கடன் திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள்

அறிமுகம்
பண்டமாற்றுப் பொருளாதார முறைமைக்குள் முடங்கிக் கிடந்த பொருளாதாரச் செயற்பாடுகள், பணப்பரிவர்த்தனை பொருளாதார உருவாக்கத்தின் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தில் வீறுநடை போடத் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகமுமே பலவகையான சமூகப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முன்னேற்றகரமானதாகவோ அல்லது பின்னடைவானதாகவோ காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகத்தினது முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற மாற்றங்கள் சிலவேளைகளில் பல தாக்க விளைவுகளினை ஏற்படுத்தக்கூடும்.

வெண்ணீர்வாய்க்கால் இரா.பாண்டிப்புலவர் வாழ்வும் வரலாறும்

தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தனை வகை எண்ணிக்கைகளான இலக்கியங்கள்தான் உண்டு அல்லது படைக்கப்பட்டுள்ளதென அறுதியிட்டு வரையறுக்க இயலாது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைத்த போதிலும் அவற்றைக் கையிற்கிடைத்த, அழிந்து போன நூல்களென இருவகையாகப் பிரிக்கலாம். அதிலும் சுவடி வாயிலாகவே பெரும்வாரியான   இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை பாதுகாக்கப்படாததன் நிமித்தம் பல இலக்கியங்கள் மறைவு தினத்தைச் சூட்டிக்கொண்டன. இன்றும் சங்க இலக்கிய நூல்கள் உருப்பெற்று நம் கரங்களில் நிலைப்பதற்கு முழுமுதற்காரணம் உ.வே.சா எனினும் அது மிகையாகா. சி.வை.தா. போன்ற   ஆளுமைகளின் தளராது சோர்ந்துபோகாது  இடைவிடாது முயன்றதன் விளைவால் சங்க இலக்கியங்கள் தத்தம் பிறந்த தினத்தைத் தக்க வைத்துக் கொண்டன.  1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கியங்களைத் தனியொருவனாகத் தேடி அலைந்து சேகரித்த நிலைப்பாடுகளை ‘என் சரித்திரத்தில்’ படிக்கும்போது உ.வே.சா. தமிழ்மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் கொண்ட உன்னதமான அன்பிற்கு ஈடுயிணை ஏதுமில்லை என்பதை உணர முடிந்தது.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

செவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]

தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற போரியல் நடவடிக்கைகளன்றிப் பண்பாட்டுப் படையெடுப்புகளும் மிகுதியாக நிகழ்ந்துள்ளன. வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், வேளாண் சமூகம், நிலவுடைமைச் சமூகம், வாரிசு சொத்துரிமைச் சமூகம், அரசுருவாக்கம் என்ற சமூகப் படிநிலை வளர்ச்சியினை ஆங்காங்குச் சங்க இலக்கியங்கள் பரவலாகச் சுட்டிச் செல்கின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்களில் சிலவற்றில் மட்டுமே கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபு [school of thought] காணப்பெறுகின்றன எனக் கருத இடமுண்டு. ஏனைய பல செவ்வியல் தொகுப்புப் பனுவல்களில் கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபற்ற இனக்குழுக்களின் வாழ்நிலை விழுமியங்கள் தனித்து அடையாளப் படுத்தப் பெற்றுள்ளன. அரிய சில இனக்குழுக்களின் பல பண்பாட்டு அசைவுகள் ஆய்வாளர்களால் வெளிக்கொண்டு வரப்பெறாமல் சங்க இலக்கியங்களை ஒரே வெற்றுத்தளத்தில் வைத்து நோக்கி ஆய்வு செய்து வருவதென்பது தமிழியல் ஆய்வுக்குறை. மூலநூலான தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்ற சொற்பயன்பாடுகள், வழக்காறுகள், பொருள்கொள்ளல் முறைமைகள், தொல் சடங்குமுறைகள், பண்பாட்டுக் கூறுகள் பல செவ்வியல் பிரதிகளில் காணப்பெறாமல் விடுபட்டமை அல்லது காலவட்டத்தில் திரிக்கப் பெற்றமை இதற்குத் தக்க சான்று. குறிப்பிட்ட பனுவல் புனையப்பெற்ற காலத்திற்கும் அப்பனுவலுக்கு உரையெழுந்த காலக்கட்டத்திற்கும் உண்டான சமூகவியல் வேறுபாடறியாமல் ஆய்வுகளை நகர்த்திச் செல்லும் சில ஆய்வாளர்களால் சில தவறான வரலாற்றுக் கருத்துகள் முன்வைத்துச் செல்லப் பெறுகின்றன. இவ்வகையில் பரத்தை, பரத்தமை, காமக்கிழத்தி என்ற சொல்லாடல்கள் குறித்த சமூக வரலாற்றுப் பார்வையினை இலக்கண, இலக்கியப் பதிவுகள் வழி ஆய்வு செய்யும் முகமாக இக்கருத்துரை அமைகின்றது.


திங்கள், 25 செப்டம்பர், 2017

இலக்கணவியல் உரையரங்கம்

   இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும் எனும் பொருண்மையிலான உரையரங்கம் 25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத்  தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா..திலிப்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல் மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் .அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.

செவ்வாய், 6 ஜூன், 2017

அம்பேத்கர்


பாரத நடுவில் பிறந்த
     சாதி வலியின் பேரிடியே
ஆகாய அகல அளவாய்
     விரிந்துநின்ற ஆல விருச்சமே
கோடி கோடி கருப்பர்களின்
     முதன் முதல் தாயே
கடல்வழியினும் உலக வழியினும்
     வழிந்து முழங்கிய கோசமே
குழந்தையில் யான் கண்ட
     போராட்டத்தின் வழியினை
அழைத்து அழைத்துக் காட்டுகிறேன்

ஸ்ரீபுரந்தரதாசர்

மூலம் - கன்னடம்
தமிழில் - சே.முனியசாமி

      புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
      ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.

வெள்ளி, 2 ஜூன், 2017

கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்

      கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில் மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால் இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர் அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது. எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.

திங்கள், 29 மே, 2017

பொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்


      Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும் இலவசமாக நூல் வெளியிடுவதற்கு வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

வியாழன், 18 மே, 2017

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்

2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.

பேரூர் நூலக நூல் அட்டைகள்

நன்றி  - பேரூர் தமிழ்க் கல்லூரி நிருவாகம்





வியாழன், 27 ஏப்ரல், 2017

முதற்றாய்மொழி: சில புரிதல்கள்

முனைவர் த.சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில் எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள் (Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி (Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி (Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர் (ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம், தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.

முல்லைப்பாட்டில் உளவியல்

                                          ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
      சங்கஇலக்கியங்கள் தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள் வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும். ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும், நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும் சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில் இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறுந்தொகையில் உள்ளப்போராட்டம்

                                    ஜெ.ஜென்சிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கிய பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
      தமிழ் இலக்கியம் தொன்மையானது, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது என்று தோன்றி வளர்ந்தது என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியமான சங்கஇலக்கியத்தினை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டடுள்ளன. அகமும் புறமும் இதன் உட்பிரிவாகும். இவற்றில் அகநூல்கள் ஐந்து புறநூல்கள் இரண்டும், அகமும் புறமும் கலந்து வருவது ஒன்று. இதைப்போல் தமிழில் இலக்கியம் என்று எண்ணும்போது பல்வேறு சிந்தனைகள் நம் சிந்தனையைத் தொடும். அவற்றில் ஒன்று இலக்கியத்தோடு தொடர்புடைய உளவியல் துறையும் ஒன்றாகும். அவ்வுளவியலில் பல கூறுகளும் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் உள்ளத்தைச் சிதைக்கும் கூறுகளில் ஒன்றாக உள்ளப்போராட்டம் என்ற  உளவியல்கூறு எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் எத்தன்மையில் இடம்பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தமிழ்க் கணிமையில் இனி…

இந்தியாவில் இருபத்திரண்டு மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுக்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்குவதில் நடுவண்நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கணினியில் தேவையான தன்னிறைவு பெற்றுவிட்டனவா? இல்லை என்பது விடையாக இருக்கும். சரி, இனித் தமிழ்க்கணிமை குறித்துச் சில எதிர்கால நோக்கங்களை இங்குக் காண்போம்.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!

நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) இற்கான எமது பணியில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்தோம். அதற்குத் தனது பதிவை முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஞாயிறு, 26 மார்ச், 2017

தரக்குறியீட்டு எண் பெறும்முறை

முனைவர் .சத்தியராஜ்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (.)
கோயம்புத்தூர் - 641 028
            தரக்குறியீட்டு எண் என்பது என்ன? உலகளாவிய நிலையில் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நூலிற்கோ அளிக்கப்பொறும் அடையாளம் எனலாம். இது இப்பொழுது துவையானது. இது கருத்துத் திருட்டைக் குறைப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. அது ஒருவரின் சிந்தனைத் தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்பதை இப்பகுதி விளக்குகிறது.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

செவ்வியல் உலாவி


பதிப்புரை
        இன்று தமிழ் இலக்கியங்கள் மீதான ஆய்வுப் பார்வை விரிந்துள்ளது. நூல் பதிப்புத் தொடங்கி இணையப்பதிப்பு என அதன் தளம் வளர்ந்துள்ளது. அவ்வளர்ச்சியில் இலக்கியப்படியின் (Literary Text) மீதான வாசிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற வாசிப்பிற்குத் தொடக்க காலத்தில்  (நூலகம் எனும் சிந்தனை உருவான பிறகு) அடிப்படையாக இருந்தது நூலகம் ஆகும். ஆகவே, முதற்கட்டப் பகுப்பு சிதம்பர அடிகள் நூலகத்தை அறிமுகப்படுத்தும் முகமாக இடம்பெறுகின்றது.

SITRITHAZHGAL ULAGAM: டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

SITRITHAZHGAL ULAGAM: டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

திங்கள், 20 ஜூன், 2016

speech to text software

             Speech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வந்து ஆச்சர்யாமூட்டும் சீன நிறுவனம்        

பல மென்பொருள் நிறுவனங்களும்  பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தொழில்நுட்பங்களுள் ஒன்று “பேச்சு புரிந்துணர்வு தொழில்நுட்பமாகும் “(Speech Recognition ).
download (1)கூகுள் , ஆப்பிள், அமேசான்,மைக்ரோசாப்ட் உட்பட அமெரிக்காவில் மட்டும் 26 மென்பொருள் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி புதிய மென் பொருட்கள் வெளியிட்டு வருகின்றன . பேச்சு கட்டளைகள் மூலம் இணையத்தில் தேடும் வசதி நம் ஆன்டிராய்டு கைபேசி , ஐபோன் கைபேசியில் Siri, மைக்ரோசாப்ட்டின்  கார்டானா போன்றவற்றில்  உள்ளதை நாம் அறிவோம். உண்மையில் ஆங்கிலம் தவிர வேறு அனைத்து மொழிகளிலும் கணினியில் தட்டச்சு செய்வது கடினமாகத்தான் உள்ளது. ஆங்கிலத்தில்  26 எழுத்துக்கள். ஆனால் ஆசியாவில் உள்ள ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் ஆனால் ஆசியாவில் உள்ள மொழிகளில் நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. இங்கு உள்ள மக்கள் இணைய வெளியில் தேட அவரவர் மொழியில் பேச்சு கட்டளைகளின் மூலம் தேடுவது மிகவும் எளிதாக இருக்கும். இணையவழி தேடுதல் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் கூகுள் நிறுவனத்தின் இதயத் துடிப்பு   போன்றது. இதனால் இந்தத் தொழில்நுட்பத்தில்   அக்கறையுடன் செயல்பட்டு வரும்   கூகுள் நிறுவனத்திற்கு  ஆசியாவில் போட்டியாக சீனாவின் பெய்டு (Baidu) நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகிறது.