முனைவர் துரை. மணிகண்டன் (1973) ... தமிழ் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிற ஒரு துடிப்புள்ள தமிழ் ஆய்வாளர். கணினித்தமிழ் உலகில் வலைப்பூக்கள் மலர்ந்து மணம் தரவேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கில் இடைவிடாது தனது பயிலரங்கப் பயணத்தை மேற்கொண்டுவருபவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழில் இளங்கலை, முதுகலை , ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தேசியக் கல்லூரியில் ( பாரதிதாசன் பல்கலைக்கழகம்) 'இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். கணினிப்பிரிவிலும் சான்றிதழ் பெற்றவர். கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பேராசியராகத் திருவரங்கத்தில் ( ஸ்ரீரங்கம்) பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார். தமிழகத்தில் தமிழ் இணையம், வலைப்பூக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய எவருக்கும் இவரைத் தெரியாமல் இருக்கமுடியாது.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
திங்கள், 9 நவம்பர், 2015
சனி, 7 நவம்பர், 2015
தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்வேஜ்)
கணினி தமிழர்களுக்கு அறிமுகமான காலத்திலிருந்தே, தமிழிலும் ஒரு கணினி நிரலாக்க மொழி உருவாக்கிட முயற்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்று தான். பற்பல காரணங்களுகாகவும் இது முழுவதுமாக நிறைவேராத ஒன்றாகவே இருக்கிறது. "முழுவதுமாக நிறைவேராத ஒன்று" என நான் குறிப்பிட்டுள்ளதற்கு காரணம், பலரும் இதை செயற்படுத்த முனைந்துள்ளனர். கணினிசார் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களாலும் சில தொழிற்நுட்ப கல்விக்கூடங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களிலும் இது முயற்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் பலநேரம் ஒரு ஆய்வறிக்கையோடே நின்றுவிட்டது அல்லது இவ்வாய்வாளர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினையான அறிவுரைகளாலும் சரியான உக்குவிப்பு கிடைக்காததாலும் ஒரு சலிப்பு ஏற்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
தமிழறிஞர் முனைவர் ந. அரணமுறுவல்
முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.
நாடக நிலத்திலிருந்து
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.
பண்டைய தமிழரின் நெல் நாகரீகம்
பண்டைய தமிழரின் நெல் நாகரீகம் - கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு.
________________________________________________
வெள்ளி, 6 நவம்பர், 2015
விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்
விகிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு அழகிய அஞ்சல் அட்டைகளை வெல்லுங்கள்! கூடுதல் கட்டுரைகளை உருவாக்கி “விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்” என்ற சிறப்பினைப் பெறுங்கள்!
ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம்(Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2015 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
விக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.
ஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் “விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்” என சிறப்பிக்கப்படுவார்கள்.
வெள்ளி, 2 அக்டோபர், 2015
உறவு
வண்டுகள் ரீங்கார மிட்டனர்
வளர் பூக்களைக் கண்டு!
ஆடுகள் மெய் சிலிர்த்தனர்
ஆசைதரும் புட்களை உண்டு!
மாடுகள் மகிழ்வு எய்தினர்
மயக்கும் பசுந்தளிர் தின்று!
கிளிகள் கிள்ளைப் பேசினர்
கிணற்றுக் கண்ணாம் பொந்து கண்டு!
மைனாக்கள் மயக்கம் தெளிந்தனர்
மையலார் நட்ட பனை கண்டு!
கோழிகள் குதூகளித்தனர்
காலை வரவைக் கண்டு!
காக்கைகள் கூச்சலிட்டனர்
கருத்து உணவு கண்டு!
மனித சந்துகள் புலம்பின
மயக்கும் மது உண்டு!
மாலையும் மயங்கினர்
மையல்கள் குழுமிடக் கண்டு!
கொண்டவனும் கொக்கரிக்கும்
கொளுந்து உசுப்பிவிடக் கண்டு!
குருதி உறவும்
குதறிப் போகுதே இன்று
அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
மச்சான் மச்சினி
உறவுகளே ஆக்கும் நின்று
இதை அறியடா மண்டு! மண்டு!!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
உறவு எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
வியாழன், 1 அக்டோபர், 2015
முற்றம்
மாலை மயங்கி
மலரும் வாடி
மழலைகள் ஆட
மயங்கும் வானம்!
ஊரார் உறங்க
ஊர்ப்பெண் சங்கதி
மறைவாய் அம்பல்!
அம்பல் அடங்குமுன்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததே!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததே!
அழகு ஆடல்
மலையைத் தழுவும்
மேகங்கள் முழங்க...
வானத்திரி வருது! மயிலாட வருது!
ஏந்திரி வருது! எதுக்க நின்னு
கதக்க வாய பொள...
கலைகள் ஆயிரம்
மனதை மயக்க
குழுப்பண்பும் குதிராய்!
முற்றம்
முள்வேலியாக
சுவராக
சூரிய கிரகணம் ஆனதே!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
முற்றம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே
என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு
வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
புதன், 30 செப்டம்பர், 2015
மரபுக் காதலும்! நவீனக் காதலும்!
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவர்களைத்தான்
தோழியும் நோக்கினாள்
களவு கனிந்தது
கற்பாய் மலர்ந்தது
நனியுறும் சங்கக்
காதல்!
சீதையும் இராமனும்
சிலிர்த்து
நோக்க
சிறப்பாய்த்
திருமணம் நடத்தி
சீர்பெறச் சிறப்பித்தார்
காதல் நெஞ்சங்களை
அப்பனும் நோக்க
அடுத்தவனும்
நோக்க
அலறுமே! நெஞ்சங்கள்
கல்வி யுகத்திலே
கணினி யுகத்திலே
கல்லறைகளில்……
வீடும் சமூகமும்
சாதிசமயப் பண்பாடுகளைச்
சாட்டைகளாய்
அணிந்து கொள்ள
பகுத்தறிவு
கொண்டு விரட்டு!
மலரட்டும் காதல்
மனிதம்
வாழ்த்தும்
மலர்த்தூவி
மேகங்கள் மழைத்துளிகளாய்!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
மரபுக் காதலும்! நவீனக் காதலும்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே
என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு
வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.
திங்கள், 28 செப்டம்பர், 2015
நம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்!
கும்பா குண்டா கூடவே
கம்பு கேப்பை குருதாளி
காணாது போயிற்றே!
நம்பு அதுவே
நலம்தரும் நல்லுணவு!
முன்னோர் எளிய உணவு
பர்க்கரும் பீசாவும்
பானிப் பூரியும்
பிரைடுரைசும்
நூடூல்சும் பரோட்டாவும்
புதுவரவு இன்று!
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இதுதானோ?
சாலையோரம் காட்சியாய்
எளிய உண்டி பவனி வருதே –
நன்று
கண்டு நீபோய் உண்டு
கண்ட நோய்கள் ஓட்டு!
நாக்குச் சுவைதேடும்
நாவடக்கம் கொள்வாய்
நலம்தருமே என்றும்
உரைத்திடு!
விதைத்திடு!!
நலம்பெறட்டும்
நல்லுணவால்
நானிலமும் வளம்பெறவே!
நானில மக்கள்
நலம்பெறவே!
வள்ளுவன் சொன்ன
உழவுச் சிந்தை
ஒளிரட்டுமே!
முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ),
தமிழ் - உதவிப்
பேராசிரியர்,
இந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரி,
கோவை – 640 028,
தமிழ்நாடு, இந்தியா,
9600370671
நம் உணவு
நல்லுணவு! நலம் தருமே நவில்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும்
உறுதியளிக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)