- தருமர்
- மணக்குடவர்
- தாமத்தர்
- நச்சர்
- பரிதி
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வெள்ளி, 11 அக்டோபர், 2013
உருவம்
மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
- இரா. நித்யா சத்தியராஜ்
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
- இரா. நித்யா சத்தியராஜ்
வியாழன், 10 அக்டோபர், 2013
தாய்மை
தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
- இரா. நித்யா சத்தியராஜ்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
- இரா. நித்யா சத்தியராஜ்
தந்தைமொழி
குழந்தையாக இருந்தபோது
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
- இரா. நித்யா சத்தியராஜ்
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
- இரா. நித்யா சத்தியராஜ்
சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு
- த. சத்தியராஜ்
கி.பி.19ஆம் நூற்றாண்டில்
சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு
நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர்.
சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு
இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும்
விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம்.
பெரும்பான்மையான இடங்களில், தெலுங்கு
சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்
பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி
எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை.
இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute)
என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி
காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து
மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை
ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும்
வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html
செவ்வாய், 8 அக்டோபர், 2013
கணவன் மனைவி உறவு
சிறு சிறு கண்டிப்பு
சிறு சிறு அரவணைப்பு
சிறு சிறு கேலிப்பேச்சு
சிறு சிறு கிண்டல் பேச்சு
சிறு சிறு அறிவுரை
சிறு சிறு அரவணைப்பு
சிறு சிறு கேலிப்பேச்சு
சிறு சிறு கிண்டல் பேச்சு
சிறு சிறு அறிவுரை
காதற்கிழவன்
என்னால் முடியாது
உங்கள் உதவியில்லையேல்
என் காதற்கிழவனே
எனது முன்னேற்றத்தில்
உங்கள் பாங்கு முக்கியப் பங்கு
- இரா.நித்யா சத்தியராஜ்
உங்கள் உதவியில்லையேல்
என் காதற்கிழவனே
எனது முன்னேற்றத்தில்
உங்கள் பாங்கு முக்கியப் பங்கு
- இரா.நித்யா சத்தியராஜ்
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
Truth
Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
- R. Nithya Sathiyaraj
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
- R. Nithya Sathiyaraj
சனி, 5 அக்டோபர், 2013
மழலைச் செல்வம்
என் குழந்தாய்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
- இரா. நித்யா சத்தியராஜ்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
- இரா. நித்யா சத்தியராஜ்
வெள்ளி, 4 அக்டோபர், 2013
பிரதான குருவின்(போப்பின்) தரிசனம் - The Pope's Visit
வாடிகனிலிருக்கும் பிரதான குருவே
அவரது பாதையிலிருக்கும் விமானம்
ஆயிரமைல் தொலைவினிலே
அவரது களங்கமற்ற அங்கியில் தாக்க செய்து
வழுக்கைக் குல்லாய் அணிந்த தலையையும்
அன்பு கனிந்த முகத்தையும்
ஆராய்ச்சியும் ஆர்வமிக்கக் கண்களையும்
சுருண்ட பட்டின்மேல் ஓரடியில்
அவரது பாதையிலிருக்கும் விமானம்
ஆயிரமைல் தொலைவினிலே
அவரது களங்கமற்ற அங்கியில் தாக்க செய்து
வழுக்கைக் குல்லாய் அணிந்த தலையையும்
அன்பு கனிந்த முகத்தையும்
ஆராய்ச்சியும் ஆர்வமிக்கக் கண்களையும்
சுருண்ட பட்டின்மேல் ஓரடியில்
வியாழன், 3 அக்டோபர், 2013
திங்கள், 30 செப்டம்பர், 2013
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்
உரைநடை
வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில்
தான்
வளர்ச்சிப்
பாதையே
நோக்கிப்
பயணமாகியது.
இந்நூற்றாண்டில் அரசியலாரும்,
கிறித்துவ
மதக்குருக்களும் நாடு
முழுவதும்
பல்கலைக்
கழகங்களையும்,
பாடசாலைகளையும் நிறுவினர்.
ஐரோப்பிய
முறைப்படி
மாணவர்களுக்குப் பற்பல
பாடங்களைக்
கற்பித்தனர்.
சென்னைக்
கல்விச்சங்கம்(Madras
College) என்பதை
நிறுவிப்
பாடப்
புத்தகங்களையும்,
உரைநடைப்
புத்தகங்களையும் எழுதி
வெளியிட்டனர்.
இதே
காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம்
(The madras school society) என்பதை
1850இல்
நிறுவி
சிறந்த
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு
இக்கழகத்தார்
தகுந்த
பரிசுகளை
வழங்கி
உரைநடை
இலக்கிய
வளர்ச்சிக்குப் பெரிதும்
தொண்டாற்றினர்.
சனி, 28 செப்டம்பர், 2013
பயம்
கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்
இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
- இரா. நித்யா சத்தியராஜ்
உயர் கல்வியின் நிலைப்பாடுகள்
அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 27 செப்டம்பர், 2013
தமிழில் விழிப்பே இல்லை
சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.
புதன், 25 செப்டம்பர், 2013
மனித இயல்பு
அனுபவ
வார்த்தைகளை
கேட்க மறுக்கும் மனமே
அனுபவித்து
அறிந்து கொள்வது ஏனோ?
- இரா. நித்யா சத்தியராஜ்
வார்த்தைகளை
கேட்க மறுக்கும் மனமே
அனுபவித்து
அறிந்து கொள்வது ஏனோ?
- இரா. நித்யா சத்தியராஜ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)