திங்கள், 11 ஏப்ரல், 2022

வலை வாசல் வருக : நூலறிமுகம் Introduction to Valai Vasal Varuka

சுருக்கம்

வலை வாசல் வருக எனும் நூல் 2019இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு 2020இல் வந்துள்ளது. இதன் ஆசிரியர்கள் முனைவர் பா.சிதம்பரராஜன், க.சண்முகம் ஆவர். இந்நூல் எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வெளியீடாக வந்துள்ளது. கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள இந்நூல் படகு போன்றது. தொல்காப்பியக் கடலை எப்படிக் கடப்பதற்கு நேமிநாதம் படகு போன்றதாக அமைந்ததோ அது போன்றது இந்நூல். அத்தகு இந்நூலினை அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Abstract

The first edition of the book 'Valai Vasal Varuka' had been released in 2019. The second edition has been released by Dr. P. Chidambararajan and K. Shanmugam team in 2020. This book has been published by SRM Valliyamai College of Engineering. It is a nursery to kindle the thoughts of the learners who love their Mother Tongue. The person who knows the Tholkappiyam may seems  this is like a Neminatham, which sails as a boat.

செவ்வாய், 15 மார்ச், 2022

155. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

155. பாலை

(இது, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது)

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் 
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் 
பொருளின் ஆகும் புனையிழை என்றுநம் 
இருளேர் ஐம்பால் நீவி யோரே

சனி, 12 மார்ச், 2022

34.முல்லை - ந.சி. கந்தையா

(இது, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது) சிறுகளும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்

கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன இருதிரி மருப்பின் அண்ணல் இரலை

வெள்ளி, 11 மார்ச், 2022

15. கையும் பொய்யும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

வரக் கூடாத இடம். வரத் தகாத நேரம். வராத விருந்தினன். வந்து விட்டான். வீட்டிலே விருந்து இருக்கிறது; ஆனால் பலருடன் அதைப் பகிர்ந்து உண்ணல் முடியாது. எனினும் ஒரு பகுதியை ருசி பார்க்கின்றான் விருந்தினன். இது போன்றதொரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைத் தலைவி

வியாழன், 10 மார்ச், 2022

53.நகையும் பகையும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

"விரோதிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறாயே!" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் தோழி.

“என்ன?” என்றான் அவன்.

“ஒன்றுமில்லை. உலகத்திலே சிலர் உளர். நண்பனைப் போல நடிப்பர். எதுவரை? பையிலே பைசா இருக்கிற வரையில். செல்வாக்கு இருக்கிற வரையில். காசு கரைந்துபோனால் செல்வாக்குப் போய்விட்டால் - தூற்றுவதற்குத் தொடங்கி விடுவர். யார்? இதே பேர்வழிகள்தான். வேறு எவருமில்லை."