மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 2 செப்டம்பர், 2014
வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
முத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்
திராவிடமொழி
இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம்
மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக்
கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய
உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்),
சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்)
காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய
எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது
இக்கட்டுரை.
செவ்வாய், 17 ஜூன், 2014
ஏருழவு - நேரிசை ஆசிரியப்பா
சாணம் தெறித்த வாசலில்
பூச்சூடி
சாந்து வைத்து புதுப்பெண்
ணாகக்
காட்சித் தந்திட காளைகள்
மூவிரு
கம்பீ ரமாக
நின்றிட கழுத்திலே
ஒய்யா ரமாய்வீற்
றிருக்கும் ஏரே
வயல்வந் தவுடனே ஆண
மங்கே
வயல்மண் ணுள்ளே
சென்றிட அறுவர்
வரிசை மாறா துழுதி
டுவாரே
வரிசை மாறா
சால்கள் அழகாய்
வானவி லொத்த
நெளிவாய்
அமைந்தி டுமீர்
வரப்புக் கிடையிலே - நேயக்கோ
திங்கள், 16 ஜூன், 2014
அருகிவரும் குதிர்ப் பயன்பாடு
இன்று
அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப்
பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும்
இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது
நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும்
கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது.
அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது.
இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.
குதிர்
எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என
அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம்
தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து
வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக்
கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு
பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.
சனி, 17 மே, 2014
புதன், 7 மே, 2014
தாமோதரர்கள்
கள்
எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின்
குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில்
தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும்
பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த
சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே – குறுந். 92
ஞாயிறு, 4 மே, 2014
தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு
தமிழில்
தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும்
அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும்
வருவனவாம். தொல்காப்பியம் கி.மு.5ஆம்
நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு
வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன.
இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக
இக்கட்டுரை அமைகின்றது.
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
திங்கள், 7 ஏப்ரல், 2014
ஞாயிறு, 6 ஏப்ரல், 2014
சனி, 5 ஏப்ரல், 2014
வெள்ளி, 4 ஏப்ரல், 2014
தமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலரின் பங்களிப்புகள்
தஞ்சை,
தமிழ்ப்பல்கலைக் கழக இந்திய மொழிகள் மற்றும்
ஒப்பிலக்கியப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் திங்கள் மூன்றாம் நாள் நிகழ்த்தப்
பெறும் அறக்கட்டளைச் சொற்பொழிவு இந்த ஆண்டும் நிகழ்த்தப் பெற்றது. நிகழ்வின் தொடக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் அத்துறைத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை
நல்குமாறு அமைந்தது. மேனாள் மொழியியல் துறைத்தலைவர் பேரா. கி. அரங்கன் அவர்கள் வாழ்த்துரையுடன்
செந்தமிழ்க் காவலர் முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பெயர் சொல்ல
நிற்பது ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியமே எனவும், அவர் கடமை, காலம் தவறாமையும்
உணர்வுகளுக்குச் சரியான குறியீடாகவும் திகழ்கின்றார் எனவும், இன்று கல்விப்
பணிக்கு ஊதியம் நிறைவு; ஆனால் அதற்குரிய வேலைகளை யாரும் செய்ய முன்வருவதில்லை
எனவும் கூறி அமைந்தார்.
திங்கள், 24 மார்ச், 2014
கல்வெட்டும் விழிப்புணர்வும்
கல்வெட்டாவது
வரலாற்றிற்கு முதன்மைச் சான்றுகள். அது குறித்த அறிவு தமிழறிந்த அனைவருக்கும்
தேவை. ஏனெனின் வரலாறுகளை மீட்டுருவாக்கி கூறவேண்டுமெனில் நம்முன்னோர் விட்டுச்
சென்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்கல்வெட்டுக் குறித்த அறிவு மக்களிடையே உள்ளதா
எனில் இல்லை. இருந்திருந்தால் சான்றுகளை அழித்திருக்கமாட்டோம்; அழித்துக்
கொண்டிருக்க மாட்டோம். இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்க பல்கலைக் கழகங்களும் அரசும் ஓரளவு தான் முயற்சி செய்துள்ளன; செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பாதுகாக்க
வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.
வெள்ளி, 14 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)