சனி, 12 மார்ச், 2022

34.முல்லை - ந.சி. கந்தையா

(இது, வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது) சிறுகளும் பிடவின் வெண்டலைக் குறும்புதல்

கண்ணியின் மலரும் தண்ணறும் புறவில் தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன இருதிரி மருப்பின் அண்ணல் இரலை

வெள்ளி, 11 மார்ச், 2022

15. கையும் பொய்யும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

வரக் கூடாத இடம். வரத் தகாத நேரம். வராத விருந்தினன். வந்து விட்டான். வீட்டிலே விருந்து இருக்கிறது; ஆனால் பலருடன் அதைப் பகிர்ந்து உண்ணல் முடியாது. எனினும் ஒரு பகுதியை ருசி பார்க்கின்றான் விருந்தினன். இது போன்றதொரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைத் தலைவி

வியாழன், 10 மார்ச், 2022

53.நகையும் பகையும் - சக்திதாசன் சுப்பிரமணியன்

"விரோதிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறாயே!" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் தோழி.

“என்ன?” என்றான் அவன்.

“ஒன்றுமில்லை. உலகத்திலே சிலர் உளர். நண்பனைப் போல நடிப்பர். எதுவரை? பையிலே பைசா இருக்கிற வரையில். செல்வாக்கு இருக்கிற வரையில். காசு கரைந்துபோனால் செல்வாக்குப் போய்விட்டால் - தூற்றுவதற்குத் தொடங்கி விடுவர். யார்? இதே பேர்வழிகள்தான். வேறு எவருமில்லை."

சனி, 26 பிப்ரவரி, 2022

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 3

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள் - வேட்லி

அழகுள்ள பெண் ஓர் அணியவாள்; நல்ல பெண் ஒரு கருவூலமாவாள் - லா அதி

ஒரு நாட்டின் நலம் அந்நாட்டுப் பெண்களின் நிலையைப் பொறுத்ததே - திரு.வி.க.

ஒரு நல்ல பெண்ணுடைய காலடியில் போலி பழிச் சொற்கள் மடிகின்றன - கடாலின்

ஒரு பெண்ணின் முதன்மையான பெருமை ஆடவர்கள் தன்னைப் பற்றி எந்தவிதமான விமர்சனமும் செய்யாமல் பார்த்துக் கொள்வதுதான் - பெரிக்ளிஸ்

KRV

வியாழன், 20 ஜனவரி, 2022

இருளர் வாழ்வியல் - அணிந்துரை

அணிந்துரை

இந்திய நாட்டில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என மொழியியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். இவற்றுள் சில இலக்கியம் கண்டவை; பல இலக்கியம் காணாத, திருந்தாத மொழிகள்: ஒருசில, மொழிகள் என கருதப்படத்தக்கவை; பல கிளை மொழிகளாகக் கரந்து வாழ்பவை; ஒருசில மொழிகள் இலக்கியப் பாரம்பரியத்தையும் இலக்கணச் செல்வத்தையும் கொண்டவை; ஆனால் பல மொழிகள் இலக்கியத்தையோ அல்லது இலக்கணத்தையோ காணாதவை; சில வியக்கத்தக்க நாகரிகத்தையும் அரிய கலைகளையும் கொண்ட மக்களால் பேசப்படுபவை; ஆனால் பல மொழிகளோ பழங்குடி மக்கள் என்று கருதப்படுகின்ற, சாதாரண, சமானிய மக்களால் பேசப்படுகின்ற நிலைமையினைக் கொண்டவை.