பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
செவ்வாய், 27 பிப்ரவரி, 2018
சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்
ஆய்வு அறிமுகம்
மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.
அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.
பதிற்றுப்பத்தில் உழவும் உழவரும்
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க உழவைப் போற்றி வளர்த்த நாடு தமிழ்நாடு. சங்கநூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றியது என்றாலும் வீரம் சார்ந்தது என்றாலும் உழவு சார்ந்த வேளாண்மைக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தில் நான்கில் ஒரு பங்கு உழவைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள உழவு குறித்தும், உழவர் குறித்தும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது (எண் செய்யுள்) திருக்கை வழக்கம், நெல் விடு தூது முதலான உழவை மையமிட்ட சிற்றிலக்கியங்களுக்கான வேர் சங்க இலக்கியத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும்.
அகநானூறு சுட்டும் மருதநிலச் சிறப்பு
சங்க இலக்கிய நூல்களுள் அகச் செய்திகளைக் கூறும் நூல்களில் ஒன்று அகநானூறு. மருதத்திணையின் உரிப்பொருளாக ஊடலைச் சுட்டுகின்றார் தொல்காப்பியர். மருதம், வயலும் வயல் சார்ந்த பகுதி என்று குறிப்பிடப்படுகின்றது. அவ்வகையில், அகநானூறு – மருதத்திணைப் பாடல்கள் சுட்டும் வயல்வெளிக் காட்சிகளை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வயலின் சிறப்புகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் வயல் பகுதி உணவளிக்கும் அமுதசுரபியாகும். மாதம் மும்மாரி மழைபொழிந்து, முப்போகம் நெல்விளைந்து ஏழை எளியோரின் வயிற்றினை நிரப்பும் வயல் பகுதியானது கொடைத்தன்மை பெற்றதாகும்.
வயல் என்பதற்கு “கழனி, மருதநிலம், வெளி” என்று கழகத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.
நாட்டுப்புறப் பாடல்களின் வளர்ச்சிப் படிநிலைகள்
தகவலைப் பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்லப் பயன்படும் கருவியே ஊடகமாகும். ‘ஊடகம்’ என்ற சொல்லும், ஊடகங்களும் தோன்றும் முன்னே தகவல் பரிமாற்றப் பணியினை நாட்டுப்புறக் கலைகள் செய்துவந்தன என்றால் அது மிகையாகாது.
சமிக்ஞைகளும் சப்தங்களும் மெருகூட்டப்பட்டு, செம்மையாக்கப்பட்டு, நாட்டுப்புறப் பாடலாகவும், கதைகூறல்களாகவும், கதைப்பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன. இதன்வழி தன் எண்ணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். பிற்காலத்தில் இதனை நாட்டுப்புற ஊடகங்கள் என்றும் அழைத்து வந்தனர். இவையே நவீன ஒலி, ஒளி ஊடகங்களின் தோற்றுவாய் எனலாம்.
இவ்வாறாக ஊடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நாட்டுப்புறக் கலைவடிவில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் ஊடகங்களில் பங்கு பெறும் விதம் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை
ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார். இவர் ஆதன்அவினி என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து, மருதத்தில் அமைந்த நூறு பாட்டுக்களைப் பத்துப்பத்தாகப் பகுத்துப் பாடியுள்ளார். அவை, ‘வேட்கைப்பத்து’ முதலாக எருமைப்பத்து ஈறாக அமைகின்றன. இத்தகு பாடல்களில் வெளிப்படும் தலைவன் – தலைவியின் உளநிலையை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
தன் தவற்றை உணர்ந்த தலைவன்
தலைவன் பரத்தையோடு நெடுநாள் பழகி வந்தான். அதை அறிந்த தலைவி மனம்வருந்தி உடல் மெலிந்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்த தலைவன் மீண்டும் தன் தலைவியோடு வாழவேண்டுமென வந்து சேர்ந்தான். பின் தோழியிடம் நான் பரத்தையோடு வாழ்ந்த காலங்களில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்றான். அதை அறிந்த தோழி காஞ்சிப் பூவோடு சினையுடைய மீன் எப்படி இருக்கும் அதுபோல் உயர்ந்த குடியில் பிறந்த தலைவி உன்னைத் தாழ்வாகக் கருதினாள் என்றாள், https://www.inamtamil.com/ai%E1%B9%85ku%E1%B9%9Funu%E1%B9%9Fu-marutatti%E1%B9%87aip-pa%E1%B9%ADalka%E1%B8%B7-ve%E1%B8%B7ippa%E1%B9%ADuttum-talaiva%E1%B9%89-talaiviyi%E1%B9%89-u%E1%B8%B7anilai/
ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)
நூல் : ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், ஆசிரியர் : மதுரை பாலன், பதிப்பு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பாண்டு : 2015(முதற்பதிப்பு), விலை : உரூபாய்120/-
மதுரை பாலன் – அறிமுகம்
இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் நேசனேரி கிராமத்தில் 10.06.1954 இல் இருளப்பன், தீத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைப் படைப்பாளராக அறிமுகமானார். முப்பத்தைந்து ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நிகழ்த்தி வருகிறார். இவரின் ‘முருக விஜயம்’ இன்றளவும் நாடக உலகினரால் கொண்டாடப்படும் நாடகமாகத் திகழ்கின்றது. மேலும், வழக்காடு மன்றம், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் சின்னத்திரையிலும் தனது தடத்தினை நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்.
ஆய்வாளர் அணுக வேண்டிய கருவி நூல்கள்
காலந்தோறும் பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றி இலக்கியங்களை ஆய்வு செய்யும் வேளையில், அடுத்த தலைமுறை ஆய்வாளர்க்கும் மாணாக்கர்க்கும் ஆய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, காணவேண்டிய நுட்பங்களைக் குறித்து அறிவுறுத்திச் செல்ல வேண்டியதும் தேவையான ஒன்றாகின்றது. அவ்வகையில், பழந்தமிழிலக்கிய ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை முன்வைப்பதாக இவ்வுரை அமைகின்றது.
(இக்கட்டுரையைப் படங்களுடன் வாசிக்க கையாவண நூல் (PDF) பார்க்கவும்)
நுண்கடன் திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள்
அறிமுகம்
பண்டமாற்றுப் பொருளாதார முறைமைக்குள் முடங்கிக் கிடந்த பொருளாதாரச் செயற்பாடுகள், பணப்பரிவர்த்தனை பொருளாதார உருவாக்கத்தின் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தில் வீறுநடை போடத் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகமுமே பலவகையான சமூகப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முன்னேற்றகரமானதாகவோ அல்லது பின்னடைவானதாகவோ காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகத்தினது முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற மாற்றங்கள் சிலவேளைகளில் பல தாக்க விளைவுகளினை ஏற்படுத்தக்கூடும்.
வெண்ணீர்வாய்க்கால் இரா.பாண்டிப்புலவர் வாழ்வும் வரலாறும்
தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தனை வகை எண்ணிக்கைகளான இலக்கியங்கள்தான் உண்டு அல்லது படைக்கப்பட்டுள்ளதென அறுதியிட்டு வரையறுக்க இயலாது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைத்த போதிலும் அவற்றைக் கையிற்கிடைத்த, அழிந்து போன நூல்களென இருவகையாகப் பிரிக்கலாம். அதிலும் சுவடி வாயிலாகவே பெரும்வாரியான இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை பாதுகாக்கப்படாததன் நிமித்தம் பல இலக்கியங்கள் மறைவு தினத்தைச் சூட்டிக்கொண்டன. இன்றும் சங்க இலக்கிய நூல்கள் உருப்பெற்று நம் கரங்களில் நிலைப்பதற்கு முழுமுதற்காரணம் உ.வே.சா எனினும் அது மிகையாகா. சி.வை.தா. போன்ற ஆளுமைகளின் தளராது சோர்ந்துபோகாது இடைவிடாது முயன்றதன் விளைவால் சங்க இலக்கியங்கள் தத்தம் பிறந்த தினத்தைத் தக்க வைத்துக் கொண்டன. 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கியங்களைத் தனியொருவனாகத் தேடி அலைந்து சேகரித்த நிலைப்பாடுகளை ‘என் சரித்திரத்தில்’ படிக்கும்போது உ.வே.சா. தமிழ்மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் கொண்ட உன்னதமான அன்பிற்கு ஈடுயிணை ஏதுமில்லை என்பதை உணர முடிந்தது.
திங்கள், 26 பிப்ரவரி, 2018
செவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]
தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற போரியல் நடவடிக்கைகளன்றிப் பண்பாட்டுப் படையெடுப்புகளும் மிகுதியாக நிகழ்ந்துள்ளன. வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், வேளாண் சமூகம், நிலவுடைமைச் சமூகம், வாரிசு சொத்துரிமைச் சமூகம், அரசுருவாக்கம் என்ற சமூகப் படிநிலை வளர்ச்சியினை ஆங்காங்குச் சங்க இலக்கியங்கள் பரவலாகச் சுட்டிச் செல்கின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்களில் சிலவற்றில் மட்டுமே கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபு [school of thought] காணப்பெறுகின்றன எனக் கருத இடமுண்டு. ஏனைய பல செவ்வியல் தொகுப்புப் பனுவல்களில் கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபற்ற இனக்குழுக்களின் வாழ்நிலை விழுமியங்கள் தனித்து அடையாளப் படுத்தப் பெற்றுள்ளன. அரிய சில இனக்குழுக்களின் பல பண்பாட்டு அசைவுகள் ஆய்வாளர்களால் வெளிக்கொண்டு வரப்பெறாமல் சங்க இலக்கியங்களை ஒரே வெற்றுத்தளத்தில் வைத்து நோக்கி ஆய்வு செய்து வருவதென்பது தமிழியல் ஆய்வுக்குறை. மூலநூலான தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்ற சொற்பயன்பாடுகள், வழக்காறுகள், பொருள்கொள்ளல் முறைமைகள், தொல் சடங்குமுறைகள், பண்பாட்டுக் கூறுகள் பல செவ்வியல் பிரதிகளில் காணப்பெறாமல் விடுபட்டமை அல்லது காலவட்டத்தில் திரிக்கப் பெற்றமை இதற்குத் தக்க சான்று. குறிப்பிட்ட பனுவல் புனையப்பெற்ற காலத்திற்கும் அப்பனுவலுக்கு உரையெழுந்த காலக்கட்டத்திற்கும் உண்டான சமூகவியல் வேறுபாடறியாமல் ஆய்வுகளை நகர்த்திச் செல்லும் சில ஆய்வாளர்களால் சில தவறான வரலாற்றுக் கருத்துகள் முன்வைத்துச் செல்லப் பெறுகின்றன. இவ்வகையில் பரத்தை, பரத்தமை, காமக்கிழத்தி என்ற சொல்லாடல்கள் குறித்த சமூக வரலாற்றுப் பார்வையினை இலக்கண, இலக்கியப் பதிவுகள் வழி ஆய்வு செய்யும் முகமாக இக்கருத்துரை அமைகின்றது.
திங்கள், 25 செப்டம்பர், 2017
இலக்கணவியல் உரையரங்கம்
இந்துஸ்தான்
கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய “இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும்” எனும் பொருண்மையிலான உரையரங்கம்
25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக
அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்
கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா.த.திலிப்குமார்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல்
மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து
ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும்,
ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை
வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் த.அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.
செவ்வாய், 6 ஜூன், 2017
அம்பேத்கர்
பாரத நடுவில்
பிறந்த
சாதி
வலியின் பேரிடியே
ஆகாய அகல
அளவாய்
விரிந்துநின்ற
ஆல விருச்சமே
கோடி கோடி
கருப்பர்களின்
முதன்
முதல் தாயே
கடல்வழியினும் உலக
வழியினும்
வழிந்து
முழங்கிய கோசமே
குழந்தையில் யான்
கண்ட
போராட்டத்தின்
வழியினை
அழைத்து அழைத்துக்
காட்டுகிறேன்
ஸ்ரீபுரந்தரதாசர்
மூலம்
- கன்னடம்
தமிழில்
- சே.முனியசாமி
புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.
வெள்ளி, 2 ஜூன், 2017
கிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்
கிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம். இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவதையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிற நிறுனங்களில்
மின்னூல் உருவாக்கப்பட்டாலும் கிண்டில் போன்ற சந்தை நிறுவனங்களை நாட வேண்டியிருப்பதால்
இத்தளத்தில் நூல் உருவாக்குவதும் சந்தைப்படுத்துவதும் எளிது. இது ஓர்
அமேசான் சந்தை நிறுவனத்தினது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் நுகர்வோர் நிரம்ப உள்ளமையால் நம் நூல் விற்பனையாவதற்கும் எளிதிலும் எளிது.
எனவே அத்தளத்தில் நூலுருவாக்குவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது.
திங்கள், 29 மே, 2017
பொபோகோவில் (Foboko) நூல் வெளியிடல்
Pressbooks, lulu ஆகிய நூல் வெளியீட்டு வரிசையில் அடுத்து நிற்பது, பொபோகோ எனும் நிறுவனம். இந்நிறுவனமும்
இலவசமாக நூல் வெளியிடுவதற்கு
வழிவகை செய்து தந்துள்ளது. இந்நிறுவனத்தின்வழி
நூல் வெளியிடும் முறைமையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
வியாழன், 18 மே, 2017
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல்
2017 (August)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
வியாழன், 27 ஏப்ரல், 2017
முதற்றாய்மொழி: சில புரிதல்கள்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க
மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில்
எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக
மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு
வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த
வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய
செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள்
(Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி
(Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி
(Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர்
(ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து
கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம்,
தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து
ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி
உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி
தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட
கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி
தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)