சனி, 18 ஜூன், 2022

சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

 அழித்து எழுதமுடியாத

அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா

கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

 

‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில
கால்கள் உழுத உழவு –சில
கைகள் கனிந்த கனிவு –குடிசை
எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல
இலைகள் இரண்டு வரவு-அதில்
இயற்கை கலந்த அழகு
பருத்தி என்றொரு செடி வளர்ந்தது
பருவப் பெண்ணைப் போலே –அந்தக்
கரிசல் கழனிமேலே –அது
சிரித்த அழகில் காய் வெடித்தது
சின்னக் குழந்தை போலே –அந்த

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 கவிஞர் பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பாரதியார் பல்கலைக் கழகப் பாடத்திட்டம் - முதலாம் ஆண்டு (2022-23)

 (2021-22ஆம் கல்வியாண்டு முதல் சேர்வோருக்குரியது)

அலகு - 1 

  1. பாரதியார் - எங்கள் தாய்

  2. பாரதிதாசன் - தமிழின் இனிமை

  3. கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

  4. சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

  5. தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

  6. வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

பாரதியார் - எங்கள் தாய்


தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!


(முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணர்ந்தோரும் பல கல்வி கற்றவர்களும் இவள் எக்காலத்தில் தோன்றினாள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவளாக விளங்குபவள் எங்கள் தாய்)