வியாழன், 27 ஏப்ரல், 2017

முல்லைப்பாட்டில் உளவியல்

                                          ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
      சங்கஇலக்கியங்கள் தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள் வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும். ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும், நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும் சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில் இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறுந்தொகையில் உள்ளப்போராட்டம்

                                    ஜெ.ஜென்சிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கிய பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
      தமிழ் இலக்கியம் தொன்மையானது, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது என்று தோன்றி வளர்ந்தது என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியமான சங்கஇலக்கியத்தினை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டடுள்ளன. அகமும் புறமும் இதன் உட்பிரிவாகும். இவற்றில் அகநூல்கள் ஐந்து புறநூல்கள் இரண்டும், அகமும் புறமும் கலந்து வருவது ஒன்று. இதைப்போல் தமிழில் இலக்கியம் என்று எண்ணும்போது பல்வேறு சிந்தனைகள் நம் சிந்தனையைத் தொடும். அவற்றில் ஒன்று இலக்கியத்தோடு தொடர்புடைய உளவியல் துறையும் ஒன்றாகும். அவ்வுளவியலில் பல கூறுகளும் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் உள்ளத்தைச் சிதைக்கும் கூறுகளில் ஒன்றாக உள்ளப்போராட்டம் என்ற  உளவியல்கூறு எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் எத்தன்மையில் இடம்பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தமிழ்க் கணிமையில் இனி…

இந்தியாவில் இருபத்திரண்டு மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுக்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்குவதில் நடுவண்நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கணினியில் தேவையான தன்னிறைவு பெற்றுவிட்டனவா? இல்லை என்பது விடையாக இருக்கும். சரி, இனித் தமிழ்க்கணிமை குறித்துச் சில எதிர்கால நோக்கங்களை இங்குக் காண்போம்.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!

நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) இற்கான எமது பணியில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்தோம். அதற்குத் தனது பதிவை முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஞாயிறு, 26 மார்ச், 2017

தரக்குறியீட்டு எண் பெறும்முறை

முனைவர் .சத்தியராஜ்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (.)
கோயம்புத்தூர் - 641 028
            தரக்குறியீட்டு எண் என்பது என்ன? உலகளாவிய நிலையில் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நூலிற்கோ அளிக்கப்பொறும் அடையாளம் எனலாம். இது இப்பொழுது துவையானது. இது கருத்துத் திருட்டைக் குறைப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. அது ஒருவரின் சிந்தனைத் தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்பதை இப்பகுதி விளக்குகிறது.