திங்கள், 19 ஆகஸ்ட், 2013

சமையலறைப் பக்கம்

                                    32ஆம் பாடம்
கலசத்திலே பால் கறந்து கொண்டுவா.
பாலை வடித்துக் காய்ச்சிப், பிரை இட்டு, மூடி, உறியிலே வை.
தயிரை மத்தினாலே கடைந்து, வெண்ணெய் எடுத்து வை.
மோரை, நீர் விட்டுப் பெருக்கு.
சலம் வர்த்து, அரிசி களைந்து, சோறு சமை.
அம்மி, குழவிகளை நன்றாகத் தேய்த்துக் கழுவிக் கொண்டு, கூட்டு அரை.
பனையின் பதநீரைக் காய்ச்சினால், பனைவெல்லம் உண்டாகும்.
கருப்பஞ் சாற்றைக் காய்ச்சினால், சர்க்கரை உண்டாகும்.
கல், உமி, தவிடு, மயிர் இல்லாமல் அரிசியை நன்றாக ஆராய்ந்து கொள்ளல் வேண்டும்.
அடுக்களையானது, உள்ளே வெளிச்சம் வரத் தக்கதாக இருக்க வேண்டும்.
                                    (ஆறுமுகநாவலர், 1950, 1959:21, 2003:31)
சலம் - நீர்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தெலுங்கு இலக்கணங்களில் பிந்து(வட்டம்)


-       . சத்தியராஜ்
தமிழிலும் சமசுக்கிருதத்திலும் சொற்களுக்கிடையே மெல்லினங்கள் இடம்பெறும் இடங்களில் மெல்லின மெய்களே காணப்படுகின்றன என்பர்.  ஆனால் தெலுங்கும் கன்னடமும் வட்டம்(0) எனும் வடிவத்தினைப் பயன்படுத்துகின்றன. இவ்வடிவத்தினைச் சமசுக்கிருதம் அநுஸ்வாரக:, பி3ந்து3வு எனவும், தெலுங்கு சுந்நமு, பி3ந்து3வு, அநுஸ்வாரமு எனவும், கன்னடம் சொந்நெ(பிந்து) எனவும் குறிக்கின்றன. இதனைத் தமிழில் வட்டம் எனக் குறிப்பிடலாம்.
            தெலுங்கு இலக்கணங்களில் ஆந்திரசப்தசிந்தாமணி, அப்பகவீயம், பாலவியாகரணம் ஆகிய நூல்கள் வட்டம் குறித்து விளக்குகின்றன. இவற்றுள் அப்பகவீயம்(கி.பி.17) ஆந்திரசப்தசிந்தாமணியின் உரை நூலாகக் கருதப்படுகின்றது(லலிதா, 1996:27). இதன்கண் கூறப்பட்டுள்ள வட்டம் எனும் கருத்தியல் எதுகையை விளக்குமிடத்து(அப்பகவீயம், 1985:40) விளக்கப்பட்டுள்ளது. ஆதலின் அந்நூலை விடுத்து ஆந்திரசப்தசிந்தாமணியிலும் பாலவியாகரணத்திலும் இடம்பெறும் பிந்து குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பிந்துவின் செயல்பாடு
            பிந்து சொற்களின் இடையில் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவதாகும். அது குறில், நெடில் ஆகியனவற்றைத் தொடர்ந்தும், வல்லின மெல்லினங்களுக்கு முன்பாகவும் வரும் என்பது நன்னயா, சின்னயசூரி ஆகிக்யோரின் ஒருமித்த துணிபு.
ஆந்திரசப்தசிந்தாமணி
            ஆந்திரசப்தசிந்தாமணி கி.பி.11ஆம் நூற்றாண்டில் நன்னயாவால் எழுதப்பட்ட்தாகும். இது சமசுக்கிருத மரபைப் பின்பற்றிச் சமசுக்கிருத மொழியில் எழுதப்பட்டுள்லது. இந்நூல் தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கண நூலாகும். இதன்கண் சஞ்ஞா, சந்தி, அசந்தா, அலந்தா, கிரியா எனும் படலப் பகுப்புகல் காணப்படுகின்றன. இப்பகுப்புகளுள் சஞ்ஞாவில் வட்டம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இவ்வட்டம் அநுஸ்வார: என அழைக்கப்படுகிறது. இவ்வநுஸ்வார: பி3ந்து3வு எனவும் கூறப்படுகின்றது (சஞ்.32). இது வகை, பயன்படுத்தப்படும் இடம் என்றாயிரு வகைகளில் விளக்கப்பட்டுள்ளது.
வகை
            அநுஸ்வார: சித்34மு (இயல்பு), ஸாத்3யமு (இலக்கணக் கோட்பாட்டால் உருவாக்கப்பட்ட வடிவம்) என்றாயிரு வகைகளை உடையது என்பதை,
            ஸித்3த்4 ஸ்ஸாத்4 யச்சா நுஸ்வார: பூர்ணர்தே4 பே43தோத் விவித்4:   - சஞ்.19
எனும் நூற்பா விளக்கி நிற்கின்றது. மேலும், இந்நூற்பாவில் அநுஸ்வார: இயல்பு நிலையிலும் இலக்கணக் கோட்பாட்டுக்குட்பட்ட நிலையிலும் வருகிறது என்பதையும்,  இயல்பு முழுவட்டம் (பூ3ர்ண பி3ந்து3வு), அரை வட்டம் (க2ண்ட3 பி3ந்து3வு), இலக்கணக் கோட்பாட்டுக்குட்பட்ட முழுவட்டம்; அரைவட்டம் எனப் பிரிந்து நிற்கும் என்பதியும் குறிப்பிடுவதாகச் சாவித்ரி குறிப்பிட்டுள்ளார். அதனைக் குறிப்பிடும் வரைகோடு வருமாறு:
                                              அநுஸ்வார:
சித்34மு                                                            ஸாத்4யமு
பூ3ர்ண               2ண்ட3                              பூ3ர்ண                        2ண்ட3
03மு             கல(கி3                          செ0தொ3              வச்செ(3 மலக்ஷிடு3
(அழகு)              (கவலைப்படு)                       (சிவப்பு அல்லிமலர்)        (வந்தான் தாமரைக்கண்ணன்)
பயன்படுத்தப்படும் இடம்
            இவ்வநுஸ்வார: குறில் (ஹ்ரஸ்வமு), நெடில் (தீ3ர்க4மு) ஆகியனவற்றைத் தொடர்ந்து வருவதாகும். இவ்விரண்டைத் தொடர்ந்து வருவது அரைவட்டமே (க2ண்ட3 பி3ந்து3வு). இவ்வரைவட்டம் குறிலைத் தொடர்ந்து வரும்போது சிலவிடங்களில் முழுவட்டமாக மாறியும் மாறாமலும் வருவருண்டு என்பதை,
ஹ்ரஸ்வாத் பூர்ணோ அபிப4வேத்             – சஞ்.20
வரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            டு.  செல(கி3 – செல0(ங்)கி3                (மகிழ்ந்து)
                        தொல(கி3 – தொல0(ங்)கி3           (தொலைந்து)
இவ்விரு காட்டுகளும் குறிலைத் தொடர்ந்து நின்ற அரைவட்டம் இலக்கணக் கோட்பாட்டால் முழுவட்டமாக மாறி ங் என்ற ஒலிக்குறிப்பைச் சுட்டி நிற்பதை காட்டுகின்றன.
            நெடிலைத் தொடர்ந்து அரைவட்டம் இருந்தால் அது எவ்வித மாற்றமும் பெறாது என்பதை,
            தீ3ர்கா4 ச்சே2 த்க2ண்ட3 ஏ வஸஜ்நேய:              - சஞ். 21
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            டு.  வா((பக்கம்), வீ((மகிழ்ச்சி)
பாலவியாகரணம்
            சின்னயசூரி சமசுக்கிருத சொல்லாட்சிகளைப் புறந்தள்ளித் தெலுங்கிலே இலக்கணக் கூறுகளை விளக்க முனைந்துள்ளார். இருப்பினும் அவரால் முழுமையாகப் புறந்தள்ள முடியவில்லை. அவரியற்றிய பாலவியாகரணம் சஞ்ஞா, சந்தி, தத்சம, ஆச்சிக, காரக், சமாச, தத்தித, கிரியா, கிருதந்த, பிரகீர்ணக எனும் பத்து பகுப்புகளைக் கொண்டுள்ளது. இப்பகுப்புகளுள் சஞ்ஞாவில் பிந்து குறித்து விளக்கப்பட்டுள்ளது.
            இந்நூல் பிந்துவின் வகைகளைக் கூறாமல் அது பயன்படும் இடங்களை மட்டும் விளக்கிச் செல்கின்றது. முதலில் குறில் மீதுள்ள அரைவட்டத்துக்கு முழுவட்டம் விரவி வரும் என விளக்கம் காணப்பட்டுள்ளது. அவ்விளக்கத்தை,
            ஹ்ரஸ்வமு மீ(தி3 2ண்ட3பி3ந்து3வு நகு (பூ3ர்ணபி3ந்து3வு கல்ப்கமுகு3 நகு3நு  சஞ்.14
எனும் நூற்பாவில் காணலாம்.
            டு.  அட3(குவஅட30(ங்)குவ
                        அர(டிஅர0(ண்)டி
இவ்விரு காட்டுகளில் 3, எனும் குறில்களை அடுத்து அரைவட்டம் வந்துள்ளது. இவ்வரைவட்டம் மேற்காட்டிய நூற்பாவின்(14)படி முழுவட்டம் பெற்று வந்துள்ளது. அவ்வட்டம்ன் ங், ண் என்ற ஒலிக்குறிப்புகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
            அடுத்து, நெடில் மீது இலக்கணக் கோட்பாட்டால் விதிக்கப்பட்ட முழுவட்டம் விரவி வராது என்பதை,
            தீ3ர்க4முமீ(த ஸாத்யபூ3ர்ணமு லேது3                      – சஞ்.15
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு.  வா(டு3(அவன்), வீ(டு3(இவன்), லே(டு3
            அரைவட்டமும் முழுவட்டமும் சமசுக்கிருதச் சொற்களின் வல்லின(ப3ருஷமு), மெல்லின(ஸரளமு)ங்களுக்கு முன்னால் வரும் என்பதை,
    ஸம்ஸ்க்ரு1த ச்மேதரமு லயிந தெலு(கு3 ஸ்2ப்33முல யந்து3(3ருஷ   ஸரளம்பு3லகு முந்தே3 பி3ந்து3வு கா3நம்படு3 சுந்நதி3                             – சஞ்.16
எனவரும் நூற்பா விளக்கி நிற்கிறது.
            எ – டு. 0(ங்)கர, கல(குவ, த30(ண்)ட, தா3(டு
இக்காட்டுகளில் அரைவட்டமும் முழுவட்டமும் வந்துள்ளன. இதன்வழி சமசுக்கிருதச் சொற்களுக்கு மட்டுமின்றி தூய தெலுங்குச் சொற்களுக்கும் அவ்வட்டங்கள் வரும் என்பதை அறிய முடிகின்றது.
பயன்
            இப்பிந்து தெலுங்கில் இடம்பெறுவதற்குச் சமசுக்கிருதத் தாக்கமே காரணம் எனலாம். இது மெல்லினங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும். இதன் வளர்ச்சி திரவிட மொழிகளுள் தெலுங்கில் மட்டுமே பல நிலைகளைக் கண்டுள்ளதெனலாம். அதனைக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் மெய்ப்பிக்கும்.
            எ – டு.      கொ0(ந்)த, கோ(த – தெலுங்கு
                            0(ண்)டு, ஒ0(ந்)து3 – கன்னடம்
இவ்விரு காட்டுகளின் வழி தெலுங்கு அரைவட்டம், முழுவட்டம் என்ற இரண்டையும் பயன்படுத்தியுள்ளது. ஆனால் கன்னடம் முழுவட்ட்த்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
முடிப்பு
            ஆந்திரசப்தசிந்தாமணி குறில், நெடில் ஆகியவற்றைத் தொடர்ந்தே வட்டமானது வரும் எனக் குறித்துள்ளது. இக்கருத்தியலைப் பாலவியாகரணம் ஒப்புக் கொள்கிறது. மேலும், சமசுக்கிருதத்திற்கு இணையில்லாத தெலுங்குச் சொற்களின் வல்லின மெல்லினங்களுக்கு முன்னும் வட்டம் வரும் எனும் கருத்தியலையும் பாலவியாகரன்ணம் முன்வைத்துள்ளது. இத்தன்மை அவ்விலக்கணக் கூறின்(பிந்து) வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றது எனலாம்.
துணைநின்றவை
தமிழ்
1.     அறவேந்தன் இரா., 2008, சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
2.     சத்தியராஜ் த., 2012, ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும், உறவு: பேரா. வே.சா. அருள்ராஜ் மணிவிழா கருத்தரங்க நூல், சைவமணி பதிப்பகம், திருச்சி.
3. வேங்கடாச்சலம் தண்.கி., 2000, கவிராச மார்க்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு
4.     தொரசாமி சர்மா ராவூரி, 1985, அப்பகவீய பாவபிராகசிக, திரிவேணி பப்ளிசர்ஸ், மசீலிபட்டினம்.
5.     பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.
6.     லலிதா ஜி., 1996, தெலுகு வியாகரணமுல சரித்திர, வெலகபூடி பப்ளிசர்ச்ஸ், மதராசு.
கன்னடம்
7.  சூடாமணி, சர்வக்னா வசனகளு, ஜனபத பிரகாசந, பெங்களூரு.

  (இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் திராவிட மொழிகளின் வளர்ச்சியும் இன்றைய போக்கும்(2013) கருத்தரங்கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வழக்கிழந்த நாணயப் பயன்பாடு


காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா.
    பைசா செம்பினாலும், அணாவும் ரூபாவும், வெள்ளியினாலும், வேறொரு கலப்பு லோகத்தினாலும் செய்யப்படுகின்றன.
       பொன்னினாலும் செய்யப்படுகிற நாணயங்களும் உண்டு -  பாலபாடம் 30ஆம் பாடம்(1950,1959:19-20)


காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா
இந்த நாணயமாற்று இப்போது வழக்கிலில்லை. இப்போதுள்ளது ஒரு ரூபாவுக்கு நூறு பைசா - பாலபாடம் 30ஆம் பாடம்(2003:30)



வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும்


            கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) தோற்றம் பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். இவ்விருவரின் நூல்களில் அமைந்துள்ள முதல் இயல்கள் முறையே எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும் ஆகும். இவ்விரு இயல்களில் அமைந்துள்ள கருத்தியல்களை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
            சுவாமிநாத எழுத்தாக்கமரபில் 10 நூற்பாக்களும் பாலவியாகரண சஞ்ஞா பரிச்சேத்தில் 23 நூற்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு இயல்களில் அமையப் பெற்ற கருத்தியல்களை 11 நிலைகளில் விளக்கலாம். அவை:1. புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, 2. எழுத்துக்களின் பொதுமரபு, 3. எழுத்துக்களின் அறிமுகம், 4. பிறப்புமுறை, 5. புணர்ச்சி, 6. சார்பெழுத்து, 7. வரிவடிவமும் மாத்திரையும், 8. மொழிமுதல், இறுதி, இடை நிலைகள், 9. பிந்து, 10. சொல்வகை, 11. வழு – ஏற்றல் என்பன. இவற்றுள் முதலாவது சுவாமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் சுட்டும் புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனையாவது:
            ...
            செப்பெழுத்துச் சொற்பொருள்யாப்பு அலங்காரம் எனும் ஐந்
            தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொரு மூன்று இயலாய்
            அடக்கிமொழி குவன்; சுவாமி நாதம் இந்நூற் பெயரே(1)
என்பதாகும். இச்சிந்தனை அந்நூலில் உள்ள அதிகாரம், இயல்கள், நூலின் பெயர் ஆகியவற்றைத் தெளிவாக்குகிறது. இச்சிந்தனை சின்னயசூரியிடம் காணப்பெறாமைக்குக் காரணம் முன் நூலாரிடம் இது குறித்த சிந்தனை காணப்படாமையேயாகும். ஏனெனில், சாமிகவிராயர், வீரசோழியர்(கி.பி.11), ஈசான தேசிகர்(கி.பி.17) ஆகியோரைப் பின்பற்றியே சுட்டியுள்ளார் எனத் தெரிகின்றது.
            இரண்டாவது (எழுத்துக்களின் பொதுமரபு), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் எழுத்துக்களை ஆராயும் முறை, எழுத்தின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் என்பனவற்றை விளக்குகிறது. இருப்பினும் அப்பொது மரபில் உள்ள இனம் குறித்த சிந்தனை மட்டும் பாலவியாகரணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அச்சிந்தையாவது க,ச,ட,த,ப ஆகியன கடினமானவை (பருசம்); க3, ஜ1, ட3, த3, ப3 ஆகியன எளிமையானவை (சரளம்): ஏனையவை இடையினம் (இசுத்திரம்) என்பனவாகும்.
            மூன்றாவது (எழுத்துக்களின் அறிமுகம்), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. சாமிகவிராயர், இறைவணக்கம், நூலின் பறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, நூற்பெயர், எழுத்துக் களை ஆராயும் முறை, எழுத்துக்களின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் ஆகியனவற்றைத் தொடர்ந்து எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றார். ஆனால் சின்னயசூரி நேரிடையாக எழுத்துக்களின் அறிமுகத்தை வைத்துவிடுகிறார். அவ்வறிமுகம் வேறுபட்டே நிற்கின்றது. ஏனெனின் சுவாமிநாதம்,
            அகராதி யீராறும் உயிர், ககராதிகள் மூவாறும் உடல்; இம்
            முப்பானு(ம்) முதலெலுத்தாம்...`                                       (3)
எனக் கூறி நிற்க, பாலவியாகரணம்
             ஸம்ஸ்க்ரு1தமுநகு வர்ணமு லேப3தி3                     (1)
            ப்ராக்ரு1தமுநகு வர்ணமுலு நலுவதி3                     (2)
            தெலுகு3நகு வர்ணமுலு முப்பதி3யாறு                    (3)
எனக்கூறி நிற்கின்றது. தெலுங்கு எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்யாமல் சமசுக்கிருத, பிராக்கிருத எழுத்துக்கள் ஆகியனவற்றை அறிமுகம் செய்துவிட்டுப் பின்பு தெலுங்கு எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றது. இது ஒரு சிறந்த முறை எனலாம். ஏனெனின் தெலுங்கு சமசுக்கிருத, பிராக்கிருத எழுத்துக்கள், சொற்கள் ஆகியனவற்றைக் கடன் வாங்குவதால் இவ்வித விளக்கமுறை சிறப்பினதே.
            நான்காவது(பிறப்புமுறை), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. இச்சிந்தனை ஒருமித்துக் காணப்பட்டாலும், விளக்குமுறையில் வேறுபட்டே நிற்கிறது. சுவாமிநாதம் உயிர், மெய், சார்பு ஆகிய எழுத்துக்கள் எவ்விதம் பிறக்கின்றன என நிரலாக விளக்கிச் செல்கிறது. ஆனால், பாலவியாகரணம் ச், ஜ் ஆகிய இரு மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் பிறப்புமுறையைத் தருகிறது. அம்முறை மாறுபாட்டுடன் உள்ளது. அம்மாறுபாடாவது ச, ஜ எழுத்துக்கள் சம எழுத்துக்களாக இருக்கும்போது, பல்லொலிகளாகவும் அண்ணவொலிகளாகவும் வரும்; இ, ஈ, எ, ஏ ஆகியவற்றுடன் இணையும்போது அண்ணவொலிகளாகவும் (தாலவியம்); அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவற்றுடன் இணையும்போது பல்லொலிகளாகவும் (தந்தியம்) வரும்; சமசுகிருதத்திற்கு இணையான இகர ஈற்றுச் சொற்களில் ச, ஜ ஆகியன பன்மையாக வரும்போது அண்ணவொலியாக வரும் என்பனவாகும். இத்தன்மை தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
            ஐந்தாவது(புணர்ச்சி), இருநூலாரிடத்தும் தென்படுகிறது. இதனைச் சாமிகவிராயர் இறுதியாக விளக்குகிறார். அவ்விளக்கம் எழுத்து நிலைக்குரியதென்பது (மெய்ம்மயக்கம், பொலி, சாரியை) குறிப்பிடத்தக்கது.
            ஆறாவது(சார்பெழுத்து) சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. ஏனெனில், சின்னயசூரி எழுத்துக்களை உயிர்(அச்சு), மெய்(அல்லு) என்பதாக மட்டும் வகைப்படுத்திச் செல்வதால் அத்தன்மை ஈண்டு இல்லை எனலாம்.
            ஏழாவது(வரிவடிவமும் மாத்திரையும்), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. இத்தன்மை சுவாமிநாதத்தில் இடம்பெறுவதற்குக் காரணம் தமிழ் மரபிலக்கணங்கள் எழுத்துக்களைப் பெயர், எண், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், இடை, இறுதிநிலைகள், போலி, பதம், புணர்ப்பு எனப் பன்னிரு நிலைகளாகப் பாகுபடுத்தி விளக்கக் கூடிய போக்கைக் கொண்டிருப்பதே. தெலுங்கு மரபிலக்கணங்களில் இத்தன்மை இல்லைபோலும்; அதனால் சின்னயசூரி விளக்கவில்லை எனலாம்.
            எட்டாவது(மொழிமுதல், இடை, இறுதிநிலைகள்), சுவாமிநாதத்தில் முழுமையுடனும், பாலவியாகரணத்தில் முதலி வாராச்(ய, வு, வூ, வொ,வோ) சொற்கள் என்பதாகவும் இடம்பெற்றுள்ளது.
            ஒன்பதாவது(பிந்து), தமிழில் இல்லை; தெலுங்கில் உண்டு. ஏனெனின் சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைத் தழுவித் தெலுங்கு இலக்கணங்கள் ஆக்கப்படுவதால் இது குறித்த சிந்தனைப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
            பத்தாவது(சொல்வகை), சுவாமிநாதத்தில் இல்லை. பாலவியாகரணத்தில் உண்டு. சுவாமிநாதம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனத் தனித்தனி அதிகாரப் பகுப்புடையது. எனவே, சொற்களின் வகைகளைச் சொல்லதிகாரப் பகுதியில் வைத்து விளக்குகிறது. பாலவியாகரணம் எழுத்து, சொல் என்றாயிரு கருத்தியல்களைப் பொதுமையாக விளக்கிச் செல்ல முற்படுவதால் சொற்களின் வகையினை நான்கு சூத்திரங்களில் விளக்கிச் செல்கிறது. தமிழில் சொற்களின் வகை என்பது பெயர், வினை, இடை, உரி என அமைந்துள்ளது. தெலுங்கில் தற்சமம், தற்பவம், தேசிகம், கிராமியம் என் அமைந்திருக்கிறது.
            பதினோராவது(வழு – ஏற்றல்), சொல் வகையுடன் தொடர்புடையது. இத்தன்மை பாலவியாகரணத்தில் உண்டு; சுவாமிநாதத்தில் (சொல்லதிகாரத்தில் உண்டு) இல்லை.
            மேற்குறித்த கருத்தியல்களின்வழி ஒப்பும் வேறுபாடும் காணப்படுவதைக் கீழ்வரும் வரைகோடு சுட்டிக்காட்டும்.
ஒப்பீட்டுக் கருத்தியல்கள்

            சுவாமிநாதம்                                                        பாலவியாகரணம்

எழுத்தாக்கமரபு                                                                                   சஞ்ஞாபரிச்சேதம்
1.     புறக்கட்டமிப்புநிலைச் சிந்தனை                                               1. எழுத்துக்களின் அறிமுகம்
2.     எழுத்துக்களின் பொதுமரபு                                                         2. எழுத்துக்களின் இனம்
3.     எழுத்துக்களின் அறிமுகம்                                                            3. பிறப்புமுறை
4.     பிறப்புமுறை                                                                                  4. புணர்ச்சி
5.     சார்பெழுத்துக்களின் விளக்கம்                                                   5. பிந்து
6.     வரிவடிவமும் மாத்திரையும்                                                       6. முதலில்வாரா
7.     மொழிமுதல், இடை, இறுதிநிலை                                             7. சொற்களின் வகை
8.     புணர்ச்சி(மெய்ம்மயக்கம், பொலி, சாரியை)                            8. வழு – ஏற்றல்
தெலுங்கில் பிந்து என்பது வட்டத்தைக் குறிக்கும். இவ்வட்டம் அரை, முழு என்ற இரு வடிவங்களில் காணப்பெறுகின்றது. இவ்வட்டங்கள் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவனவாகும். எ-டு. த3o(ண்)ட.


துணைநின்றவை
தமிழ்
1.     சண்முகம் செ.வை.(பதி), 1995, சுவமிநாதம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
2.     சாவித்ரி சி.(மொ.ஆ.), பாலவியாகரணம்(பதிப்பிக்கப் பெறாத ஏடு).
தெலுங்கு
3.     உமா பி., பாலவியாகரணமு, பரவசத்து சின்னய்சூரி பிரணிதமு தீபிக வியாக்கிய சகிதமு, புல்லூரி உமே ராசதானி களாசல, மதராசு.
4.     பரவத்து சின்னயசூரி, 1994, பலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், மதராசு.
(இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் மேனாள் துறைத்தலைவரின் (முனைவர் வே.சா. அருள்ராஜ்) மணிவிழாக் கருத்தரங்(2013)கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)