வெள்ளி, 12 ஜூலை, 2024

அரத்தக் கொடை முகாம்

On July 12, 2024, the Youth Red Cross Society at Sri Krishna Aditya College of Arts and Science, in collaboration with the Coimbatore Government Medical College Hospital Blood Bank, organized a blood donation camp at the College Digital Library. The event was presided over by the principal, Dr. S. Palaniammal. More than 140 students and faculty participated, with 92 units of blood donated. Twenty one volunteers assisted with the event. Youth Red Cross Program Officer Dr. T. Sathiyaraj coordinated the event.

வியாழன், 4 ஜூலை, 2024

சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம்

(கதைக் சுருக்கம்)

இந்நாவலந்தண் பொழிலில் ஏமாங்கதம் ஏமாங்கதம் என்று தன்னிசையால் திசைபோய நாடொன்று உளது. நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் நிரம்பிய இவ் வேமாங்கத நன்னாட்டை இராசமாபுரம் என்னும் சிறந்த நகரத்தின்கண்ணிருந்து சச்சந்தன் என்பான் செங்கோலோச்சினன். இம் மன்னர் மன்னன் கட்டிளமையும், பேரழகும், பேராற்றலும், நுண்ணறிவும், வண்மையும், பிறவும் ஒருங்கேயுடையனாய் விளங்கினான். இவன் அருட்குடைத் தண்ணிழலில் வையகம் மகிழ்ந்து வைகியது.

இம் மன்னன் தன் மாமனாகிய விதையநாட்டரசன் மகள் விசயை என்பவளை இனிதின் மணந்தான். விசயை ஒப்பற்ற பேரழகுடையவள்; நற்குணங்கட்கு உறையுள் போன்றவள். கலங்காக் கற்புடைய காரிகை. சச்சசந்தன் இவள் பெண்மை நலத்திற் பெரிதும் ஈடுபாடுடையனாய் அவளை இமைப்பொழுதும் பிரியவியலாதவனாயினன். அவளோடு உடனுறைதற்குத் தன், அரசியற் கடமைகள் இடையூறாதல் கண்டு தன் அமைச்சருள் ஒருவனாகிய கட்டியங்காரனை அழைத்து அரசாட்சியை அவன் பால் ஒப்புவித்துத் தான் உவளகத்தே விசயையோடு நொடிப் பொழுதும் பிரிவிலனாய் உறைந்தின்புற்றனன்.

புதன், 3 ஜூலை, 2024

பைத்தான் நிரலாக்கம் – தமிழில் இலவச இணைய வழித் தொடர் வகுப்பு

வியாழன், 27 ஜூன், 2024

மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை

ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர்

பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்:

ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி

அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

செவ்வாய், 25 ஜூன், 2024

சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை

 மதுரைக் காண்டம் 5. அடைக்கலக் காதை

1
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி