வெள்ளி, 15 நவம்பர், 2019

கனா கண்டேன்...

அலுவலகம் திறந்தது
என் இருக்கையில் அமர்ந்தேன்
தலையில் முள்முடிதாங்கிய ஒருவன்
வந்தவன் ஐயா என்றான்
சொல் என்றேன்
நான் மேய்ப்பர் என்றான்

இங்கு என்ன வேலை என்றேன்
என் பிறப்பை வைத்துதான்
கி.மு., கி.பி., என வரலாறு
எழுதப்பெற்றது என்றான்
அதற்கு இடமில்லை
இங்கு என்றேன்
ஏன் என்றான்
கீழடிக்குப் பின்பு
பொ.மு., பொ.பி., என மாறிவிட்டது என்றேன்
என்னது புத்தி வந்ததா
என்று கூறிவிட்டு
இடம் நகர்ந்தான்.
நல்ல அசதி
பயணச்சோர்வு
கண்மட்டும் எமனிடம்
ஒத்திகை செய்தது
சங்கு ஊதும் சத்தமும்
கேட்டுக்கொண்டே இருக்க
இன்னொருவன் வந்தான்
ஐயா என்றான்
கூறு என்றேன்
நான் உருவமற்றவன் என்றான்
அதற்கு என்ன என்றேன்
நான் சிறுபான்மையினர்
என்பதால் என்னை
மறைக்கப் பார்க்கிறார்கள் என்றான்
காலம் பதில் சொல்லும் செவ்வரிசையில் இன்னும் உள்ளாய்
போய்வா என்றேன்.
இன்னும் சோர்வு
பல்நுட்பக் கற்பித்தல் அல்லவா
திறன் பலகையைப்
பார்த்துப் பார்த்துக்
காலவன் அருகில் வர
கனாவும் வந்தது
வில்லேந்திய
பொய்யன் ஒருவன்
ஐயா என்றான்
விளம்பு என்றேன்
நான்... நான்...
கூறடா மடையா சீக்கிரம்
நான் திரேதாயுகத்தில்
தீர்வு சொல்லப் பிறந்தவன்
ஏறிட்டுப் பார்த்தேன்
குபீர் என்று சிரிப்பு வந்தது
இன்னுமா இப்படியே
சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள்
எத்தனைமுறை பொய்யை
மெய்யென்று சொன்னாலும்
பொய்... பொய்தானடா மடையா
போய்வா என்றேன்.
திடீர் என்று ஒரு சத்தம்
பேருந்து ஒலிப்பான்
வீரென்றது
கனா கண்டேன்...
         _ த.நேயக்கோ

புதன், 13 நவம்பர், 2019

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

       முன்னுரை

       பாரதிதாசன் வரலாறு

      பிறப்பு

      கல்வி

      பணி

      படைப்பு

       அழகின் சிரிப்பு

      தொல்தமிழ்

      இசை, கூத்து, உரை

      தமிழர்க்கு உயிர்

      சாகாத் தமிழ்

      வெற்றித்தமிழ்

       முடிவுரை

 

செவ்வாய், 12 நவம்பர், 2019

புதுமைப்பெண் - பாரதியார்

       முன்னுரை

       பாரதியார் - வரலாறு

      பிறப்பு

      கல்வி

      பணி

      படைப்பு

       புதுமைப்பெண்

      சுதந்திரப் பேரிகை

      வேதம் பொன்னுருக் கன்னிகை

      அறிவுகொண்ட மனித உயிர்

      நிமிர்ந்த நன்னடை

      நங்கையின் எண்ணங்கள்

      கற்பியல் குலம்

      பராசக்தி

       முடிவுரை

 



இனம்: மலர் : 5 இதழ் : 19 (நவம்பர் 2019)

 இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
Inam: International E-Journal of Tamil Studies
............................................................
நவம்பர் 2019 மலர் : 5 இதழ் : 19
November 2019 Volume V Issue 19
.........................................
உள்ளே ...
............................
தமிழ்ச் செவ்வியல்
...............................................
தொல்காப்பியம் - தெலுங்கு மொழிபெயர்ப்பு
Tolkappiyam - Telugu Translation
முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri I 4
https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d…/
பெரும்பாணாற்றுப்படையில்
பழந்தமிழரின் உணவுகள்
Foods of ancient Tamizhar in Perumpaanaatrupadai
ஷா. முஹம்மது அஸ்ரின் / S.Mohamed Azrin I 12
https://inamtamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81…/
சங்க இலக்கியத்தில் தாயும் சேயும்
Mother and Child in the Sangam literature
ல.கு.சு.இராஜ்குமார்/L.K.S.Rajkumar & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar I 19
https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95…/
குறுந்தொகை - நெஞ்சொடு கிளத்தல் :
உளவியல் பார்வை
The Psychological View of
Heartful Lament in Kurunthokai
ப.ராகசுதா/B.Ragasudha & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar I 25
https://inamtamil.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81…/

திங்கள், 21 அக்டோபர், 2019

5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம்

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து ஒருங்கிணைக்கும் 5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம் திசம்பர் 12, 2019 அன்று நிகழவுள்ளது. இதின் இனம் இணைய ஆய்விதழும் பங்கேற்கிறது. இனம் பதிப்புக்குழுவால் தெரிவுசெய்யப்பெறும் கட்டுரைகள் இனம் இணையப் பக்கத்தின் சிறப்பு வெளியீட்டுப் பக்கத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற வேண்டும் என எண்ணுபவர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றித் தரம் மிக்க ஆய்வுக் கட்டுரையாக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கவும். இதற்கு வாய்ப்பளித்த கல்லூரி நிருவாகத்தாருக்கும், முதல்வர் (முனைவர் கார்த்திகேயன்) அவர்களுக்கும், துறைத்தலைவர் அவர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும் நன்றி உரியது.