வெள்ளி, 14 மார்ச், 2014

ராதையின் ஊடலைத் தீர்த்தல்


தேனே,
நான் காளியை நசுக்கினேன்; 
ஏன் என்று நினைக்கிறாய்?
அந்தப் பாம்பு
உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
போட்டி என்பதால்
நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
எதற்கு என்று நினைக்கிறாய்?
அது உன் வடிவான புருவத்திற்குப்
போட்டி என்பதால்
நான் கோவர்தனமலையை
வேரோடு பிடிங்கினேன்;

தனியே நட


உன் குரல் கேட்டும்
யாரும் வரவில்லையானாலும்
டே! மடையா!
தனியே நட
உன்னுடன் சேர்ந்து
யாரும் பேசவில்லையானாலும்,
எல்லோரும்
முகம் திருப்பிக் கொண்டாலும்,
பயந்து நடுங்கினாலும்
டே! மடையா!

மேடை


மூலம் : ஆங்கிலம்
தமிழில் : ஆ. ஈஸ்வரன்

நாங்கள் எங்களின் பெயரால் அமைந்த
எந்த மேடையும் ஏறியதில்லை
நாங்கள் அதற்காக
அழைக்கப்பட்டதும் இல்லை.
எங்களின் நிலம்
எங்களுக்கே சுட்டுவிரலால் சுட்டிக் காட்டப்பட்டது.
அங்கு பயந்தவாறே இரு கால்களையும்
குத்திட்டு அமர்ந்தோம்.

சனி, 1 மார்ச், 2014

கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்


அன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார்.

சனி, 22 பிப்ரவரி, 2014

மதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு


மு. அய்யனார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் உயராய்வு நடுவம்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி -24
தமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார் முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும் முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார். குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர் கொண்ட இலக்கியமாக விளங்குவது காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும் இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,