க், ச், (ட்), த், ப், (ற்)
க், ச், த், ப்
தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும்பொழுது கருத்திற்கொள்ள வேண்டுவனபற்றிச் சிறிது காண்போம்.
எழுதும்பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும்; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும்; மொழி மரபும் சிதையும்.