திங்கள், 25 செப்டம்பர், 2017

இலக்கணவியல் உரையரங்கம்

   இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும் எனும் பொருண்மையிலான உரையரங்கம் 25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத்  தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா..திலிப்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல் மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் .அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.